Friday, April 02, 2021

தமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல்!



தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்!

(பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்,
Professeur adjoint - Littératures comparée (tamoul), Université de Paris, France)


(ஆனந்த விகடன் இதழ், கேட்டுக்கொண்ட வண்ணம் எழுதிய கட்டுரை
அங்கு, முதன்மையான புள்ளிகள், சுருக்கப்பட்டு  விட்டமையால்
https://www.vikatan.com/news/politics/challenges-and-responsibilities-of-upcoming-tn-government
முழுக் கட்டுரையும், இங்கே பொதுமக்களாகிய உங்கள் பார்வைக்கு!)


மொழிக்கு அரசியல் தேவையா?

மொழி, மக்களின் வாழ்வியலில் ஓர் இயந்திரப் பொறி (Engine). கண்ணுக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், அதன் மூலமாகத் தான் வாழ்வியல் வண்டி ஓடுகிறது. 


மொழி சிதைந்து போனால், ஏதோ பழைய வரலாறு, பண்பாடு, நாகரிகம் – இவை மட்டும் தான் சிதைந்து போகும் என்று எண்ணிவிட வேண்டாம். நம் மக்களின் எதிர்காலமும், அடுத்த தலைமுறையின் அறிவாற்றலும், இன-வரைவியல் தனித்தன்மையும், மொழியுடன் சேர்ந்தே சிதைந்து போகும். (Hawaiian ஆதிகுடி மக்கள், தங்கள் மொழியை இழந்து, பிறகு கடினப்பட்டு மீட்டெடுத்த வரலாறு வாசிக்க). 

எனவே, ஓர் இனம், காத்துக் கொள்ள வேண்டிய முதன்மைச் சொத்துக்கள், மொழி & சமூகநீதி – இவ்விரண்டும் தான்!

”மொழிக்கு அரசியல் தேவையா? மொழி, மொழியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று ஒரு சிலர் (தங்களை நடுநிலைவாதிகள் என்று கருதிக் கொள்வோர்) கேட்பர். ஆனால் உண்மையில், தமிழ்மொழி மீதான அரசியல், இன்று நேற்றல்ல, 2500+ ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்கிறது. 

ஒரு மொழி, அரசியலற்று, தனித்து இயங்குதல் என்பது வரலாற்றில் இல்லவே இல்லை!


எப்படி அரசியலும் அரசாட்சியும், மக்களின் வாழ்வியலைச் சட்டங்கள் மூலமாகப் பாதிக்கின்றதோ, அது போலவே மொழியையும் பாதிக்கும். மொழி என்பது வெறுமனே தொடர்புக் கருவியோ (Communication Tool), அல்லது இலக்கிய-இலக்கண ஆராய்ச்சிப் பொருளோ மட்டுமல்ல; மொழி, ஓர் இனத்தின் வழிவழி வாழ்வியல்! அந்த வாழ்வியலில் விளைபவையே இலக்கியங்களும் இலக்கணங்களும். 


தமிழ்மொழி, முதலில் மக்களின் சொத்து; பிறகே அறிஞர்களின் சொத்து.
மக்கள் இன்றேல், மொழி இல்லை!
தொன்மத்தில் மட்டுமல்ல, தொடர்ச்சியிலும் மொழி தழைக்க வேண்டும்!
அதற்கு, அரசு-இயலின் பங்கும் மொழியில் உண்டு.



மொழி அரசியலின் வரலாறு:


ஆரிய x திராவிட அரசியல், இப்போது மட்டுமல்ல, அப்போதே தொடங்கி விட்டது! சங்க கால அரசர்கள்: பெருநற்கிள்ளி - இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியாய் மாறின போது, பெருவழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாய் மாற்றப்பட்ட போது, தமிழ் மொழி & தமிழ் இனத்தின் பல உரிமைகள் பறி போயின. எதிர்வினைகளும் கிளம்பின!


1. ஆரிய அரசன் பிரஹத்தன், தமிழர்களின் காதல் மண வாழ்வை ஏளனம் செய்து இழித்த போது, அவனை மறுத்து, அன்றே கபிலர் பாடியது தான் குறிஞ்சிப் பாட்டு. 

2. குயக்கோடன், ”ஆரியம் நன்று; தமிழ் தீது” என்ற போது, அவன் அழிய அறம் பாடினார் நக்கீரர்.

3. வடமொழித் திணிப்புக்கு, இயைந்து போகக் கூடாது என்று அன்றே எச்சரித்தார் தொல்காப்பியர். (”சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்; வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ”, ஒதுக்கு என்றார்).

4. ஜாதி வேறுபாட்டை இறைவனே படைத்தான் என்று சட்டம் எழுதப்பட்ட போது, ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, ”மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்” என்று எதிர்ப்பே காட்டினார் வள்ளுவர்.

5. நைவேத்தியம் என்ற பேரில், ஒரு சாராருக்கு மட்டும் உணவுக் கொள்ளை நடந்த போது, முன்னோர் நடுகல்லே தமிழர்களுக்குக் கடவுள்; எங்களுக்கு நைவேத்தியக் கடவுள்கள் இல்லை (”நடுகல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலமே”) என்று எதிர்த்தார் மாங்குடிக் கிழார்.

6. ஜோதிடம், பரிகாரம் என்று சமூகத்தில் புதிதாகப் பரவும் வடமொழிப் போலித்தனங்களைச் செய்ய மாட்டேன்! என்று அன்றே முரண்டு பிடித்தாள் கண்ணகி! (”பீடு அன்று என்று இருந்த பின்னரே”).



மொழி அரசியலின் இன்றைய நிலை:


இப்படி, தமிழ்ச் சமூகம், அரசியல்/அரசாங்கம் மூலமான திணிப்புகளைப் பல காலமாக எதிர்த்துக் கொண்டும், மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டும் தான் வந்துள்ளது. அது, இன்றும் பொருந்துகிறது. 


கடந்த 2014 முதல் இன்று வரை, மத்திய (ஒன்றிய) வலதுசாரி அரசாலும், மாநில அரசாலும், பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுள்ள புதிய சூழலில், தமிழ்மொழியின் நிலை என்ன?


1. ஒன்றிய ஆட்சியின் மூலமாகப் புதிய கல்விக் கொள்கை (NEP) வழியே, தமிழ்நாட்டில் கட்டாய மும்மொழிக் கொள்கை புகுத்தல் அபாயம்.

2. உள்துறை அமைச்சக Raj Basha திட்டம் மூலமாக, அரசு அலுவலகங்களில் கட்டாய ஹிந்தி ஆவணமாக்கம்; அரசுத் திட்டங்கள் யாவும் ஹிந்திப் பெயரிலேயே அமைதல்.

3. அரசு ஊழியர்களின் மேல் கட்டாய Parangat ஹிந்தித் தேர்வு வேலை வாய்ப்பும், பணி உயர்வும்.

4. அரசுத் துறைகளின் அலுவல் முழுதும் ஹிந்தியில் நடத்த Karyashala Sandarshika பெருந்தொகுப்பு.

5. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ/தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், என்று பலருக்கும் தொடர்பேயின்றி, ஹிந்தியிலேயே ஆவணங்கள் அனுப்பல்.

6. சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ. 643 கோடியும், பிற எல்லா மாநில மொழிகளுக்கும் வெறுமனே ரூ. 29 கோடியும் அரசு மானியச் செலவினம். 60% இந்தி பேசாத மக்கள், 99.9% சம்ஸ்கிருதம் பேசாத மக்களின் வரிப் பணத்தை எடுத்து, ஒரு மொழிக்கு மட்டும் அதீத ஓரவஞ்சனை காட்டல். 


7. குடியரசுத் தலைவரின் சம்ஸ்கிருத மொழி விருது & மஹரிஷி பாதராயனர் விருது, ரூ. 5 லட்சம் ஒருவருக்கு ஒருமுறை வழங்குவதோடு மட்டுமன்றி, அவரின் ஆயுட்காலம் முழுதும் ரு. 50,000 ஆண்டுத்தொகை வழங்கல்; தமிழ்/வேறெந்த மொழிக்கும் ஆயுட்கால விருதுத் தொகை இல்லை.

8. தேசிய இணையவழி இந்திய நூலகத்தில் (National Digital Library of India), தமிழ் உட்பட தென்மாநில மொழிகள் இடம் பெறாமை.

9. நடுவண் அரசு மட்டுமல்லாது, தமிழக அரசிலும், தமிழ் ஆராய்ச்சிக்கு என்றே உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே, ஹிந்தி மொழிப் பயிற்சித் திட்டம் (2019).

10. பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019-இல் நடைபெற்று முடிந்தாலும், இன்னும் கூட மாநாட்டின் நிகழ்முறைகளும் (Proceedings), ஆராய்ச்சித் தாள் தொகுப்பும் வெளிவரவில்லை. அந்த ஆராய்ச்சிகளால் மொழிக்கு விளையும் பயன் & செயல்திட்டங்களும் வெளியிடப்படவே இல்லை.

11. தமிழக அரசின் பாடப் புத்தகத்திலேயே, ”தமிழை விடவும் மிக மூத்த மொழி சம்ஸ்கிருதம்” என்று நம் பாடநூல் கழகமே அச்சிட்டு வெளியிடல்.

12. மாநிலத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரே, சம்ஸ்கிருத ஹிந்தி மொழிகளுக்கு ஆதரவாகப் பேசல், முன்னெடுப்பு செய்தல்... என்று பலப்பல அரசாங்கச் சோகங்கள். (சில மட்டுமே மேற்குறிப்பில்).


அறிவியல் காலத்தில், தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து, அடுத்த நூற்றாண்டு ஆக்கப் பணிகளைச் சிந்திப்பதும் செய்வதும் போய், இருப்பதைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற அவல நிலையில் தான், இன்று தமிழ் மொழியியல் உள்ளது. உலகப் பெருந் தமிழறிஞர்களுக்கும் இதனால் வருத்தமே.


இவையெல்லாம் யார் செய்கிறார்கள்? எவர் தூண்டுதலால் நிகழ்கின்றன? என்று பொதுவெளியில் ஒருவாறு நமக்குத் தெரியும்.
ஆனால், அவர் பிழை, இவர் பிழை, என்று கட்சிகள் சார்ந்து வெறுமனே ஆள்காட்டல் செய்வது, தமிழுக்குப் பயன் தராது.
இந்த இழிநிலை மாற வேண்டும்! மாற்ற வேண்டும்! யார் துணிந்து மாற்றுவார்களோ, அவர்களைத் தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்க வேண்டும்!



தமிழகத் தேர்தலும் மொழி உரிமைகளும்:


எதிர்வரும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் (ஏப்ரல் 6, 2021),
பல கட்சிகள், வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்லாது,
மொழிசார்ந்த சில வாக்குறுதிகளையும்,
தங்களின் தேர்தல் அறிக்கைகளில் தந்துள்ளன.

ஆனால், வாக்குறுதி தருவது மட்டுமே பெரிதல்ல;
அதைத் துணிந்து ஆற்றக் கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு?

என்பதையும் கருதியே வாக்களிக்க வேண்டும்!


1. சொல்லுதல் யார்க்கும் எளிய – அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664: வினைத் திட்பம்)

2. இதனை இதனால் இவன்முடிக்கும் - என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (குறள் 517: தெரிந்து வினையாடல்)


நடுவண் அரசின் அப்பட்டமான அத்துமீறல்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, 1. இருப்பதைக் காத்தும், 2. புதிதாக ஆற்றியும் – இரண்டு வழிகளிலும் தமிழ்ப்பணி செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம்.

அதனால், ஒரு கட்சியில் சொல்ல விட்டுப்போன தமிழ்ப் பணியை,
இன்னொரு கட்சி சொல்லியிருந்தாலும்,
அதையும் தமிழ்த் தொண்டாகவே கருதி முன்னெடுத்தல்,
Copy அடித்தல் ஆகாது; தமிழ் உழைப்பே ஆகும்!


எதிர்வரும் தமிழகத் தேர்தல் களத்தில், 5 கூட்டணிகளின் மொழிசார்ந்த பொதுவான வாக்குறுதியும், குறிப்பிட்டு என்ன மொழிப்பணி ஆற்றுவார்கள்? என்றும் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.



திமுக, அதிமுக - இரண்டு பெருங்கட்சிகள் & வேறு சில கட்சிகளின் பொதுவான வாக்குறுதிகள்:

1. தமிழகத்தில், இரு மொழிக் கொள்கை தொடர்ச்சி.

2. இந்திய ஒன்றிய ஆட்சி மொழியாகத் தமிழை(யும்) சேர்த்தல்.

3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்.

4. ஒன்றிய அரசுத் தேர்வுகள், தமிழி(லும்) நடத்த வலியுறுத்தல்.

5. பிற மாநில / அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில், தமிழ் இருக்கை உதவி.

6. தமிழ்த் தொல்லியல் & அகழாய்வு (கீழடி/ பிற) – பொதுவான முயற்சிகள்..



திமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. திருக்குறள், தேசிய நூலாக அறிவித்தல்.

2. தமிழை, Section 343 மூலம், இந்திய இணை ஆட்சிமொழி (Co-official Language) என அறிவித்தல்.

3. சட்டம் மூலமாக, தமிழகத்தில், தமிழ் கட்டாயப் பாடம், 8ஆம் வகுப்பு வரை (CBSE/Kendriya Vidayalaya உட்பட மத்தியக் கல்வி நிறுவனங்களிலும்).

4. தமிழ் அலுவல்மொழி வளர்ச்சிப் பிரிவு – தலைமைச் செயலகம் முதல் வட்டாட்சி வரை.

5. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மேம்பாடு, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் - புதிது.

6. கீழடி – சிவகங்கை உலக அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூர் & கொற்கை புதிய அருங்காட்சியகங்கள்.

7. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் தமிழ்க் கல்வெட்டுகளை, கர்நாடகத்தின் மைசூரில் இருந்து, தமிழகத்துக்குக் கொண்டுவந்து காட்சிப்படுத்திப் பாதுகாத்தல்.

8. தமிழ் வரிவடிவச் சிதைப்புத் தடுப்பு; (சம்ஸ்கிருதம் கலவாத) தூயதமிழ் வரிவடிவம் – அரசுச் சட்டம்.

9. உலக நூல்கள் தமிழில் மொழியாக்கம், தமிழ் நூல்கள் உலக மொழியாக்கத் திட்டம்.

10. பொங்கல், தேசிய விழாவாக அறிவித்தல், விளையாட்டுப் போட்டிகள் – மாநில/ மாவட்ட/ ஒன்றியம்.

11. சல்லிக்கட்டுக் காளை வளர்ப்பு ஊக்கத் தொகை ரூ 1000.

12. வள்ளலார் பன்னாட்டு மையம் நிறுவல்.

13. பெரியார் சமத்துவபுரங்கள் – 240+ மீள் உருவாக்கம்.

14. அனைத்துச் சாதி அர்ச்சகர் பணியாணை – 205 பேர்; தேவாரம்/ஆழ்வார் அருளிச்செயல் ஊக்கம்.

15. தமிழ் நாட்டுப்புறக் கலைப் பயிற்சிப் பள்ளிகள் & ஆண்டு விழா.

16. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT Central Institute of Classical Tamil) புதுப்பொலிவு.

17. செம்மொழிப் பூங்கா, அனைத்து மாநகராட்சிகளிலும் நிறுவல்.

18. திராவிட இயக்கச் சான்றோர் பிட்டி தியாகராயர், சி. நடேசனார், டாக்டர் டி.எம். (நாயர்), தமிழகத்தின் முதல் இடஒதுக்கீட்டுச் சான்றோர் பி. சுப்பராயன் – தீரர் கோட்டம் & தமிழ்ப் புதினத்தின் (Novel) தந்தை, மயூரம் வேதநாயகம் (பிள்ளை) மணிமண்டபம்.



அதிமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. தமிழ்நாட்டில், தமிழ் கட்டாயப் பாடம் 10 ஆம் வகுப்பு வரை என்ற பொதுவான அறிவிப்பு (சட்டம் பற்றிய குறிப்பு இல்லை; CBSE கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்ற குறிப்பும் இல்லை).

2. திருக்குறளைத் தேசிய நூல் ஆக்கல்.

3. தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஊக்குவிப்பு.

4. சல்லிக்கட்டுக் காளை ஊக்குவிப்பு.

5. தரங்கம்பாடியில், அயலகத் தமிழறிஞர் சீகன்பால்கு இல்லம் அரசுடைமை.

6. அப்துல் அமீது பாகவி – இசுலாமிய இலக்கியக் கருவூலம் உருவாக்கல்.

7. மணிமண்டபங்கள் – மறைமலை அடிகள், மொழிஞாயிறு பாவணர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., நாவலர் நெடுஞ்செழியன்.



மநீம செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. அப்துல் கலாம் அறிவுசார் ஆராய்ச்சி & Digital நூலகம்.

2. இடைநிலைக் கல்வியில் மும்மொழிக் கொள்கை – தமிழ்/ ஆங்கிலம்/ விருப்ப மொழி.

(மொழி அளவில் - இருமொழிக் கொள்கை தொடரும் என்று பக்கம் 26-இல் குறிப்பிட்டு இருந்தாலும், இடைநிலைக் கல்வி அளவில் - தமிழ், ஆங்கிலம், வேறு ஏதாவது ஓர் இந்திய மொழி – மும்மொழிக் கொள்கை அமல் என்று பக்கம் 40-இல் குறிப்பிட்டு இருப்பது, தமிழ் மொழிக்கு நல்லது அல்ல! 

முதலமைச்சர் அறிஞர் அண்ணா சட்டப் பேரவைத் தீர்மானத்தின் படி, தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கையே என்று இருந்துவரும் நிலையில், அதற்கு மாறாகத் துணிந்து ஏன் இப்படிக் குறிப்பிட்டு உள்ளார்கள் என்று தெரியவில்லை; வருத்தமே!).



நாதக செயல்திட்ட வாக்குறுதிகள்:

(இன்னும் தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை – Mar 24, 2021 11:00 am நேரப்படி)



அமமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. தமிழர் பாரம்பரிய உணவு/தின்பண்டம் பரவலாக்கத் திட்டம்.

2. தமிழ் இலக்கிய உலக விருது - ரூ 25 லட்சம் பரிசுடன்.



மேற்கண்ட தனித்தனி வாக்குறுதிகளை நீங்களே பாருங்கள்!
எவை தமிழ்மொழிக்கு நீடித்த நலன் என்று கருதி,
யார், அவை நிறைய சொல்லியுள்ளார்கள்/ செய்யும் துணிவு?
என்று கருதி, தமிழக மக்கள்/ தமிழ் ஆர்வலர்கள் வாக்களிக்கவும்! 


யாருக்கு வாக்களிப்பது? என்பது அவரவர் தனி உரிமையே ஆயினும்,
வாக்களிக்காது மட்டும் இருந்து விட வேண்டாம்!
கட்டாயம் வாக்களிக்கச் செல்லவும்!
வாக்கு என்பது நம் அனைவரின் உரிமை & கடமை – இரண்டுமே!

கடமை செய்வோர்க்கே, உரிமையின் பலன் கிட்டும்!

இது தவிர, வேறு பலப்பல பணிகள், தமிழ்மொழிக்கு ஆற்ற வேண்டியுள்ளன. அவற்றைக் கீழ்வரும் பட்டியலில் குறிப்பிடுகிறேன். யார் வென்று ஆட்சி அமைத்தாலும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை மட்டுமல்லாது, இவற்றையும் நிறைவேற்றித் தாருங்கள் என்பதே வேண்டுகோள்! மாநில அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், தமிழ் - நின்று வென்று நிலைக்க, இம் முன்னெடுப்புகள் இன்றியமையாதவை!



எதிர்வரும் தமிழக அரசு செய்ய வேண்டிய தமிழ் வளர்ச்சிப் பணிகள்:


1. தமிழ் மொழியியல் உலக ஆணையம் நிறுவல் - அனைத்துலகப் பல்கலைக்கழக இருக்கைகள் (Global University Academic Chairs), செந்தர நிறுவனங்கள் (Standardization Bodies), தமிழ்க் கணிமை (Tamil Computing) நிறுவனங்கள் என்று பலவற்றுக்கும் கொள்கை வழிகாட்டும் ஆணையமாய்ச் செயல்படல்.

2. ஒருங்குறி ஆணையம் (Unicode Consortium) முதலான பல உலக நிறுவனங்களில், தமிழ்மொழி சார்ந்தாற்றுகையில் (Representation), தமிழக அரசு தன்னை ஒரு பங்குதாரராக (Stakeholder) நிறுவிச் சேர்ந்து கொள்ளல்.


தமிழி (தமிழ்ப் பிராமி) & வட்டெழுத்து சேர்த்தல்.

சம்ஸ்கிருத கிரந்த எழுத்து - ஶ, ஷ, ஸ, ஹ மதிப்பிழக்கச் (deprecate) செய்தல்.

அளபெடைக்கான joiner குறியீடு பெறல்.

குற்றியலுகரம், குற்றியலிகரம் - சந்திர பிந்து பெறல்.

இசைக்குறிகள், தாளக்குறிகள், வேறு கலைக் குறிகள் – Unicode SMP குறியேற்றல்.


3. மக்கள் பலரும் தமிழ் எழுதுகையில் ஈடுபடுவது மகிழ்ச்சியே என்றாலும், எழுதுகையில் செய்யும் பிழைகளைக் களைந்து, மொழியை எல்லா மட்டங்களிலும் எளிதாக்க, மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் தமிழ்த் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கித் தொகுத்தல்.

தானியங்கு பிழைதிருத்தி (Auto Spellchecker)

தானியங்கு வடமொழிநீக்கி (Auto Sanskrit Remover)

தானியங்கு ஆங்கிலக்கலப்பு நீக்கி (Auto Tanglish Adapter)

ஒளிவருடல் கோப்பில் எழுத்து அறுவடை செய்தல் (Pdf to Unicode Converter for Tamil)

தமிழ் ஒலிப்புப் பயிற்றுநர்கள் (Tamil Voice Assistants)

இன்ன பிற கருவிகள்


4. குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் வழங்குபொறி (Tamil Baby Names Provider) உருவாக்கி, தமிழ்நாட்டின் மகப்பேறு மருத்துவமனைகளில் பரவலாக அறிமுகப்படுத்தல். இன்னும் 2-3 தலைமுறைகளில், தமிழர்கள் யாவருக்கும் தமிழ்ப் பெயர்களே இருக்கும்படி ஊக்குவித்தல்.

5. தேசிய இணையழி இந்திய நூலகம் (National Digital Library of India) போல், தேசிய இணையவழித் தமிழ்ப் பெருநூலகம் (National Digital Library of Tamil) உருவாக்கி, தமிழ் இலக்கிய இலக்கணங்கள் யாவும், தமிழறிஞர்களின் நூல்கள் யாவும், தேடுபொறிகளோடு ஒரே இடத்தில் திரட்டி வைத்தல்.


6. உலகப் பெரும் பல்கலைக்கழக நூலகங்களோடு, தேசியத் தமிழ்ப் பெருநூலகத்தை இணைத்தல். 

7. ஒரு சொல், தமிழா? சம்ஸ்கிருதமா? வேற்று மொழியா? என்று பிரித்தறிய எளிதாக, உலகத் தமிழ்ப் பேரகராதி உருவாக்கல்; மொழிஞாயிறு பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை, அனைத்து அகராதிகளோடும் இணைத்து, எளிதாக்கி, அயல்மொழிச் சொற்களை அடையாளம் காணல்.

8. அறிவியல் & தொழில்நுட்பம் மிகுத்து வரும் காலத்தில், உடனுக்குடன் புதிய கலைச்சொல்லாக்கம் (Technical Terms) செய்து, உலகம் முழுதும் ஒரே சீராக வெளியிடல்.



9. கீழடி, அழகன்குளம், கொடுமணல், இன்னும் பல தமிழ்த் தொல்லியல் களங்களுக்கு, உலகத் தொல்லியல் களங்களோடு இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தல். (Rome, Greece, Egypt, China – linking ancient trade artefacts, arretine pottery & numismatics). மத்திய அரசுத் துறைகளின் Red Tape கடந்து, உலகப் பல்கலைக்கழகங்களோடு தொல்லியல் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தல்.

10. தொல்லியல் காலக் கணக்கீடு செய்யும் உலக நிறுவனங்களோடு, (C14 Attestation/ U 234-Th 230 Dating) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளல்.


11. கடல் தொல்லியல் (Maritime Archaeology) துறையைப் புதிதாக உருவாக்கல்.

12. பூம்புகார் – சிலப்பதிகார நகரைப் புதுப் பொலிவுறச் செய்து மேம்படுத்தல்.

13. குமரிமுனை ஐயன் வள்ளுவப் பெருஞ்சிலையைப் புதுப் பொலிவுறச் செய்தல்.

14. குமரிமுனையிலேயே, தமிழ்த்தாய் பெருஞ்சிலையைப் புதிதாக நிறுவுதல்.

15. மதுரை, தஞ்சை, உறையூர், பழையாறை, காஞ்சி, கொற்கை, பறம்பு மலை, கடல் மல்லை, வஞ்சி, தொண்டி, முசிறி, ஈழம் - இன்ன பிற தமிழ்த் தொல் நகரங்களில், தமிழ் வரலாற்றுக் கூடங்களை உருவாக்கல்; தமிழ் வரலாற்றுச் சுற்றுலா, தமிழ்ப் பண்பாட்டுச் சுற்றுலாக்களை வடிவமைத்தல்.


16. இலண்டன் Shakespeare's Globe Theater போல், தொல்காப்பிய-வள்ளுவ-இளங்கோ இலக்கியப் பேரரங்கம் உருவாக்கல்.

17. தனித்தமிழ் இயக்க வரலாற்று மையம் & திராவிட இயக்க வரலாற்று மையம் நிறுவுதல்.

18. தமிழிசைக்கென்றே, தனியாகவொரு தமிழிசைப் பல்கலைக்கழகம் நிறுவுதல்.

19. தொல்லியலுக்கென்றே, தனியாகவொரு தமிழ்த் தொல்லியல் பல்கலைக்கழகம் நிறுவுதல்.

20. தமிழ் மொழி, இலக்கியம் & வரலாறு குறித்த ஆவணப் படங்கள், உலகத் தரத்தில் உருவாக்கம்.

21. தமிழ் என்றால் என்ன? என்று தமிழர்/ அயலவர்/ இளைய தலைமுறை யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம், சுவையான திரைப்படம்/ஆவணப்படம் ஒன்றை, தமிழ் & ஆங்கிலத்தில் உருவாக்கல்.



தொண்டு செய்க தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்பது பாவேந்தர் கனவு!

தமிழை உலக மயமாக்குவோம்! உலகத்தைத் தமிழ் மயமாக்குவோம்!

உணவு, உடலை வளர்க்கும் தமிழா;
உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே! தமிழே!


Read more »

Monday, January 09, 2017

அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!

நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்!
"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"

தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா?
*அகர முதல சம்ஸ்கிருதம்!
*ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:)))

*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை!
*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே!

*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில "மந்த்ர ஸப்தங்கள்" தமிழில் இல்லை! தெய்வாம்சம் இல்லை!

*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture! அதை ஒரு "கலாச்சாரமாய்ப்" பாருங்கள்!
*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்!

*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்!அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்!

மேற்கண்டவை, என் சொற்கள் அல்ல!
*சில பிரபலங்கள்,
*பல ஆன்மீக/தெய்வீக ஆட்கள்,
*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)
*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே!

இப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை!
"சம்ஸ்கிருத பாசம்" மிகுதியாகக் கொண்டவர்கள் யார்? = இது உங்களுக்கே தெரியும்:)

இப்படி, "சம்ஸ்கிருத பாசம்" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,
சம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும்? என்பது வேறு கதை!:)

"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி" - இதன் முழுமையான பொருள் என்ன? என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்!:)

Sanskrit தெரியாவிட்டாலும், "அங்கே தான் தங்கள் வேர்!" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்!
அதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே! நேரடியாகவும்/ மறைமுகமாகவும் வெளிப்படுத்துவார்கள்!

இருக்கட்டும்! ஆனால்..
*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு!
*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு!
*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே! எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு!



சம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை!
பாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,
இன்று, ஒரேயடியா வழக்கு  ஒழிந்து விட்டாலும்,
வெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,

சம்ஸ்கிருதமும் செம்மொழியே! இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்!

ஆனால், என் மனசு வலி என்னவென்றால்:
சம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே?
குறிப்பாகத் தமிழில்; இது ஏன்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

ஓவ்வொரு மொழியும் உன்னதமே!
மொழிக்குள்  = "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது!
அந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது!

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,
//பாத்தீங்களா? உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா!//
= ஏன் இந்த மனப்போக்கு???
= எதிர்ப்பது, இத் "திணிப்பை" மட்டுமே!
= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே! எல்லாப் பிராமணர்களையும் அல்ல!

சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி,
Parasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு!


இதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்!
இதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு!

(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,
நானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை!

அன்று, அன்னார் இட்ட வித்து! 
இன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க!:)
அமர துருஷ்ட ஸ்வ-விக்ரம! சமர ஜூஷ்ட பிரமிக்ரம)


சரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்! அதில் கை வைக்கலாமா?

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா?
= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்?
= வள்ளுவர், "தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்" எ. வாழ்ந்த மஹரிஷியா?

இப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்?
 = As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)

*அவரை முன்னிட்டு
*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..
*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,
*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்!


மேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்!
கீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்!
தமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்!



இணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்!
நட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்!:(

இந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட, 
அந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான் 
= மிகு 'விஷம்'! மிக்க 'அபாயம்'!

ஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, "மென் முறையில் விஷம்" ஏற்றும் விற்பன்னர்கள்!
எழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus!

*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்!

தமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே?
ஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே? ஏன்?

இதான் ஒங்க "நட்பா"?
தமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க! -ன்னு,
உங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே? ஏன்?


"இது அவிங்க கருத்து! அவரவர் கருத்து அவர்களுக்கு!" எ. நீங்க Escape ஆக முடியாது!
*அழகில் சிறந்தவர் = ரஜினியா? கமலா? என்றால்..
அப்போ அவரவர் கருத்து! ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்!
*ஆனால் "தமிழ்ச் சிதைப்பு" = அவரவர் கருத்து அல்ல!
அறம் சார்ந்தது! அறத்தின் அளவுகோல் மாறாது!

"ராஜபட்சே கருத்து அவருக்கு! அவர் கருத்து அவர் வரையில் சரி!" என்று
ட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்?
வலிக்கும்ல?:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்?

என் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,
உங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!

வெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,
அவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள்! (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)

யாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்!

இல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்!
பெருஞ்சித்திரனார் அறம்! இட்ட சாபம் முட்டும்!




இனி, பேசுபொருளுக்கு வருவோம்..
அகர முதல = சம்ஸ்கிருதமா? ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா? 

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்! இதோ!

அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
பொருள்:
எல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்
எல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்

1. முதல் சொல் = அகரம்
அகரம் என்றாலே சம்ஸ்கிருதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா?
ழ-வை= ழகரம் என்போம்! அப்போ ழ= சம்ஸ்கிருதமா?:)
உங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று!

அ என்னும் “ஓசை”
முதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது!

அ in Tamizh,
A in English,
Alpha α in Greek,
ā in Latin,
诶 in Chinese,
అ in Telugu,
ಅ in kannada,
അ in Malayalam,
অ in Bengali

கிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள "அ"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன?:)

தாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,
"அ" என்ற ஒலியே..
உலகெங்கும் முன்னிறுத்தப்படுகிறது! இது எதனால்?

அகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை!
மாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை!
"அ" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி!

ஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்!
தா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்!
'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)

ஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா?
"அ" ஒலி = உயிர் ஒலி
ஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு!

இந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன்! உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்?
நீங்கள் பேசாமலேயே, "அ" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்!

இப்பவே, செஞ்சிப் பாருங்க!
இரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க!
விரிக்கும் போதே "அ" என்ற ஒலி அமைப்பு வந்துரும்!

பிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,
பின்னர் சிரிப்போ,
பின்னர் தத்தக்கா பேச்சோ,
பின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..
எதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும்! அந்த விரிப்பிலேயே "அ" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்!

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து, 
.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து, 
"அ"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி 
(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)

இதனால் தான், உலக மொழிகள் பலவும்.. "அ" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன!
மொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்! = அகரம்!

"அகர முதல", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்!
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப!

அதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்!
*அகரம் = உலக ஒலிப் பொதுமை!
*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை!

திருக்குறள்= "பொது"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது!
அதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை!
முல்லை/குறிஞ்சி, திணைக் கட்டுப்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்!

ஒரு “பொது மறையை”,
= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்
= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது!

உங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க!
வேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி! தவிர்த்து விடுங்கள்!


2.  அடுத்த சொல் = ஆதி

ஆதி = “ஆதல்”;
இறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”
Ready ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,
திருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி!

சேர மன்னன்= சேரல் + "ஆதன்"=சேரலாதன்
ஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள்! பண்பாடு "ஆகி" வரும், இவர்களிடமிருந்து!

மன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி
பெண்கள்: ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்
ஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன?:)

சம்ஸ்கிருதத்திலும் "ஆதி" உண்டு என்பதை அறிவேன்!
ஆனால், அது வேறு ஆதி/ आधी
ஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல!:)
அது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்!

Sanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே?
ஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்?:)
சம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே?:)

ஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு!
அதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்! அமிழ்தம் - அம்ருதம்!
*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்!
*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்; 
அதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க! ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக!

*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)
*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)

மதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
முருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்!
ஸ்கந்தன் = Mixed up, Post Vedic, Brahministic Deity!
கந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்!

சொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. "புத்தி" காட்டாதீர்கள்!
ஏன்??? இங்கிருந்து அங்கு போகாதா?
இங்கிருந்து தான் அங்க போச்சி! எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்? ச்சீ..

வேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்!

ஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது!
Rum  எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம்ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா?
குடிகாரர்களுக்கு Rum  ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)

ராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்?
ரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே

ரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்?
அதை மட்டும் சொல்ல மாட்டேளே?:)
அதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்!
ஒன்று போல் ஒலித்தாலும்,  இரண்டும் வேறு வேறு!

திருக்குறளின், ஆதி பகவன் = "ஆதி" தமிழ்ச் சொல்லே!
ஆவதால் ஆதி!



3. அடுத்த சொல் = பகவன்

பகவன்= பகவான் அல்ல:)
அது Pagavan எ. ஒலிப்பு! Bhagawan எ. ஒலிப்பு அல்ல!

தமிழ்ச் சொற்களில் வரும் "முதலெழுத்து வல்லினம்" அழுத்தியே ஒலிக்கும்!
*சொல்= Chol; Sol அல்ல
*கொலு= Kolu; Golu அல்ல
*தேவாரம்= Thevaaram; Devaram அல்ல!
*போலவே, பகவன்= Pagavan; Bhagawan அல்ல!

பகவன் = பகு + வ் + அன்
*பகு = பகுதி
*வ் = இடைநிலை
*அன் = விகுதி
பகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல்! தக/ தகவு, பக/ பகவு!

தமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்!
*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்
*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்
Bacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்!

இதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே?
“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்” 
கேளிர்= அதுவும் சம்ஸ்கிருதமா?:)

ஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை!
உயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை!
இகரவீற்று உயர்திணைப் புணர்ச்சி! ஆதியும் பகவனுமான இறைவன்!

முக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;
அந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா? இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ?:)

சம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;
பஜ் = (இறைவனுக்கு) வழிபாடு
பக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே!
பஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்!

இப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan  & சம்ஸ்கிருத Bhagawan  ஒன்றா?:)
Sanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் "சொருகு" வேலை? வெட்கமாயில்லை? உடம்பு கூசலை?
'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்?
குடுக்கவே மாட்டான்! உழன்று அழிந்து சாகுங்கள்! ந தர்ம நிஷ்டோஷ்மி!

ஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே!
*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி
*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)



4. கடைசிச் சொல் = உலகு

உலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல!:)
சம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்
ஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க?

தொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்!
மாயோன் மேய காடு உறை உலகம்
சேயோன் மேய மை வரை உலகம்

உலகு = உல் + அ + கு
உல்லுதல் = "திரண்டு" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்
உல்லுவதால்= உலகம்!

போலவே..
*ஞால்வதால் (தொங்குவதால்)= ஞாலம்
*வைப்பதால்= வையம்
*நிலைப்பதால்= நிலம்

Sanskrit லோக் = ஆங்கில Look ஆகாது!
விட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே?:)
English Look =  West German Luogen/ Lagud என்ற வேர்ச்சொல்லில் வருவது!
Lagud = Eyes என்று பொருள்படும்!
காஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;
நீங்க மட்டும் தான் "நம்ம பெரியவா பெரியவா"-ன்னு மெச்சிக்கணும்:)

लोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,
"அந்தக லோகம்" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்?
பொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா?:)

இப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY
தேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு? பாவம்:(

உலகம் = தமிழ்ச் சொல்லே! அது लोक அல்ல!
பல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்!
இவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா? ரொம்பவே ஒங்க பேராசை:)

* ஆதி பகவன் முதற்றே "உலகு" – திருக்குறள்
* நனந்தலை "உலகம்" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு
* "உலகம்" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* திங்களைப் போற்றுதும்.. "உலகு" அளித்தலான் – சிலப்பதிகாரம்
* "உலகம்" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

மதம் பிடிப்பதை விட, "உலகம்" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு!
அவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,
Imaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்!

அதான் "உலகம்" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது!
உலகம் = தமிழ்ச் சொல்லே!
Thus Proved, quod erat demonstrandum (Q.E.D)
அகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே!



முடிப்புரை:

இன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன்! 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(
அவாளே வாத்திகளாய் உட்கார்ந்து..
தமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(

நம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,
அன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY

Sanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா,
அரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை!
ஆதித் தமிழ் நிலத்துக்கு... "மதம்" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L

என்ன தான்.. "மதம்" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,
சங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும்,
சான்றோர்/ மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது!

*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,
*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..
*எது தமிழ்ச் சொல்-பொருள்? / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம்? என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..

மெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்!


இக் காலம் = அறிவியல் காலம்!
முன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை!
பொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்!
Technology Integrated Tamizh!

அதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து!
பொய்யாய் எழுதி வைக்கிறார்கள்!
அதற்கு, "ஸ்வாமி பக்தி" என்ற போர்வை போர்த்துகிறார்கள்!

வாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,
இணைய பிராமணீயம் கைக்கொண்டு, 
திருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது!

தரவு கேளுங்கள்! தர மாட்டார்கள்:)
ஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
நீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்!
இதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(

பெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்
இன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து, 
"படிப்பு" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்!

ஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே!
*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்!
*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே!
ஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை!

*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு!
*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு!
*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு!
*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு!

இதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது!
இஃது, இடைவிடாத தொடர் இயக்கம்!

இந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்!
1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்
2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்
3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்!
இதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம்! பெருஞ்சித்திரனாரின்.. "ஆதி பகவன்" முதலான.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT
பெருசா ஒன்னும் வேணாம்; 
திருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்!
குறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல!
இதை உரக்கச் சொல்லுங்கள்! அஃதே போதும்; முதல் படி!

Sanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை!
ஆனால், நீங்கள் மாற முடியும்! "திரள" முடியும்!
இதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,
https://twitter.com/amas32/status/817569021767729152

தமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்! 
அகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல! தமிழே! 
இதோ ஆதாரம்= https://goo.gl/ehvVZi
என்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்! 
அப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்! தமிழுக்கு ஒற்றுமை வரும்!

போலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,
திருக்குறள் = Sanskrit அல்ல! என்றாச்சும் சொல்வீர்களா?
இளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே,
நீங்கள் உரக்கச் சொல்வீர்களா? சொல்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு!)
Read more »

Monday, November 21, 2016

தமிழ் இலக்கண வாத்தி லீலை!

வளமொடு.. செந்தமிழ் “உரைசெய
அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)
---------
நேரடியாக Matter-க்கு வருவோம்!

*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,
தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman..

*சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை,
ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி!
(சில சமயங்களில்.. தமிழை “மிகைத் திருத்தம்” செய்தாலும்)
*அம்பானி முதல் அறிஞர் அண்ணா வரை..
பல "அவியல் புத்தகங்கள்".. தாள் தாளாக எழுதிக் குவித்துள்ள எழுத்..”தாளர்”


*ஸ்ரீமான். Writer பா.ரா-வின் சிஷ்யகோடி/ செல்லப் பிள்ளை..
அந்த Group-இல் சேர்ந்து உலாவும் மக்களுக்கு, இவர் ஓர் 'ஆதர்ச' தளபதி!

என். சொக்கன்
(எனும்)
நாக ஸூப்ரமண்யன். சொக்கநாதன்!

தமிழ் இலக்கணம் என்கிற பேரில்,
பிஞ்சுக் குழந்தைகள் மனத்தில் நஞ்சைக் கலக்கும்
அற்புதத் திருக்காட்சி இதோ... தவறாமல் காணீர்!

நன்னாப் புரிஞ்சுண்டேளா, குழந்தைகளா?
மொத்த தமிழ் இலக்கணமே = “லஷணம்” தான்;
தமிழுக்குச் சம்ஸ்கிருதம் போட்ட பிச்சை!:((
சொல்வது யாரு?
இலக்கணம் சொல்லிக் குடுக்கும் தமிழ் வாத்தி!
அட, இலக்கணம் போதிப்பவரே, இலக்கணம்= Sanskrit-ன்னு சொல்லீட்டாருப்பா!
தமிழ்ப் பண்டிதாள் Group!
(Groupஇல் யார்? யார்? பதிவின் இறுதியில் சொல்கிறேன், மக்கள் விழிப்புணர்ச்சிக்காக)
இவர்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
3000+ Documented ஆண்டுகள் தொன்மை நிரம்பிய ஒரு மொழிக்கு,
அதன் இலக்கணம் என்பதே,
சம்ஸ்கிருதம் போட்ட பிச்சையா? பார்ப்போமா?
ஆனா, அதற்கும் முன்பு.. ஒரு சில சொற்கள் பேசணும், உங்க மனச்சாட்சி கிட்ட!

ஏன்னா, மனச்சாட்சி மட்டும் தான்..
*பிறர் அறியாத.. நீங்கள் மட்டுமே அறிந்த இடம்!
*இறைவன் அமரும் இடம்!
இதைப் படிப்பவர் அனைவரின் மனச்சாட்சிகளைக் கேட்டுப் பாருங்கள்!
---------


இக் காணொளி கண்ட நாள் அன்றே, என் விழியோரம் கண்ணீர்!

தமிழ் மொழி.. சங்கத் தமிழ்க் காலந் தொட்டே, எவர் மரபிலும் "ஊடுருவாது" வாழும் மொழி; அப்படி வாழும் போதே,  அதற்கு எத்துணை எத்துணை மறைப்புகள் & சிதைப்புகள்:(
தன்னை விட்டுப் பிரிந்த சென்ற மொழிகளில் கூடப் போயி, "உன் சொல்லுல்லாம் என் சொல்லு தான்!" எ. ஒருநாளும் சொன்னதில்லை தமிழ்!

"நாங்க எப்பவோ போட்ட 2 நாள் சோறுல தான், இன்னிக்கி உன் குடும்பமே நிமிந்து நிக்குது".. என்று சொல்லிக் காட்டி ஏய்க்கும் நம் உறவினர்கள்!
நம் அம்மா, உறவினர் கையில் படும் "இழிவு" கண்டு, நம் மனம் பொறுக்குமா?
போலவே, தமிழ்த் தாய், Sanskrit ஆட்களின் கையில் படும் இழிவுகள்:(


Sentiment வேண்டாம்; பேசு பொருளுக்கு வருவோம்!
1. இலக்கணம் = "லக்ஷணம்" என்று சும்மா ஒரு பேச்சுக்கு வைச்சிக்குவோம்; ஆனால், அதை இங்கு சொல்லத் தேவையா?
குழந்தைகளுக்கு “எளிய பாடம்” எடுக்கும் இடத்தில், சம்ஸ்கிருதம் “நுழைத்துச்” சொல்வது ஏன்? குழந்தைகள், மொழி-இயல் ஆய்வா செய்கிறார்கள்?

குழந்தைகள், எதிர் தரவு குடுக்க மாட்டாங்க! எ. தெகிரியம் தானே? 
பிஞ்சு உள்ளங்களிலா நஞ்சைத் தூவுவது?
அதுங்க வளரும் போதே, தன் தாய் மொழியின் இலக்கணமே= Sanskrit போட்ட பிச்சை என்றா வளரும்? இது கொடுமை அல்லவா?:(

எப்படி, பசுமரத்தில்.. ஆணி அடிச்சாரு, பார்த்தீங்களா?
இது, இன்று நேற்றல்ல..
தமிழ்ப் "பண்டிதாள்" என்ற Group! வெளிப் பார்வைக்குத் தமிழ் வாத்தியாய், உள்ளுக்குள் Sanskrit/ பார்ப்பனீயமே கொண்டவர்கள்.. காலங் காலமாய்ச் செய்து வருவதே!

*சொல் எல்லாம் "வார்த்தை" ஆச்சு
*பொருள்= "அர்த்தம்" ஆச்சு
*எடுத்துக்காட்டு= "உதாரணம்" ஆச்சு
*ஒருபுடை உருவகம்= "ஏக தேச" உருவகம் எ. பாடப்புத்தகத்திலேயே நிலைச்சிப் போச்!

தமிழில், அதுவும் அதன் இலக்கணத்திலேயே.. "ஏகம்/ Ek Dho Theen" ஏன்?
சம்ஸ்கிருத இலக்கணத்தில்.. "ஒன்று, இரண்டு" இருக்கா என்ன? இல்லையே!

ஏன்.. இங்கு மட்டும்.. Parasite ஒட்டுகிறார்கள்? யார் ஒட்டுகிறார்கள்?
உங்க மனச்சாட்சியைக் கேளுங்க!
தனிப்பட்ட நட்புகளை ஒரு நொடி ஒதுக்கி விட்டு.. உங்க மனச்சாட்சியைக் கேளுங்க!


2. "பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை, ஒரு நாளும் நம்பாதீர்கள்!" 
என்று முன்பு சொல்லியிருந்தேன்..

இங்கு, பார்ப்பனீயம் என்று சொன்னது = புத்தியை! சாதியை அல்ல!
தனிப்பட்ட எவரையும் அல்ல!

முன்பு, தமிழை = "டுமீல்" என்று எள்ளிய இலவசக் கொத்தனார்; பாரா/ சொக்கன் குழுமத்தின் பற்பல பண்டிதாள்!
#TNFisherMan #SaveEelam போன்ற ஒவ்வொரு தமிழ் முயற்சியையும், எள்ளி எள்ளியே காலம் தள்ளும் மக்கள்!:(

#MullaPeriyar என்பதை.. PeriyaaRu எனாது, Periyar என்னும் மலையாள மொழி வழக்கம்! அங்கே குற்றியலுகரம் இல்லாமை!
ஆனால் "Mulla Periyar; தந்தை பெரியார் முஸ்லீம் முல்லாவா? குல்லா போட்ட முல்லா" என்றெலாம் எகத்தாளம் பேசிய இலக்கணப் பண்டிதாள் Group!
அதே Adyar Ananda Bhavanஐ, Adaiyaaru என்று எழுதச் சொல்லி, எள்ளச் சொல்லுங்கோ பார்ப்போம்? மாட்டார்கள்; அவா அவா பாசம்!

"அப்படில்லாம் பேசாதீங்க! தமிழை, டுமீல் என்று தாழ்த்தாதீங்க!" என்று சொல்லக் கூட, ஸ்ரீ. சொக்கனுக்கு அப்போ மனம் வரலை!
இத்தனைக்கும், பேசுவது, அவர்கள் குழாம் தான்; Same Set/ Shaving Set தான்!
ஆனால்.. "பார்ப்பான் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதீங்க" என்று சொன்னதுக்கு மட்டும், உடனே பாய்ந்தோடி என்னிடம் சண்டைக்கு வந்த சொக்கன்!

கம்பனின் நடையில் நின்றுயர் நாயகன், ஸ்ரீ. சொக்கன், இதோ காணுங்கள்:)

இதிலிருந்து என்ன தெரிகிறது?
தமிழுக்கு வராத உள்ளம், பார்ப்பனீயம் என்றால் மட்டும்.. ஓடோடி வருகிறது:) 
நீங்களே காண்க!
முழு Twitter உரையாடல், இங்கே= 
https://goo.gl/z7vOZm


ஸ்ரீ. சொக்கன் என்ன சாதி? என்ற வினவல் இங்கு.. கிஞ்சித்தும் இல்லை!
அது தேவையும் இல்லை!
பார்ப்பனீயம் = புத்தி; சாதி அல்ல!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; அஃதே தமிழ் நெறி!

"பார்ப்பான் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே!" என்றால்.. சொல்லிக் குடுப்போரின் சாதி தெரிந்தால் தானே, அது முடியும்? எ. கேட்டு விடாதீர்கள்!:(
ஒருவரை = சாதி வினவல்! என்பது பேரசிங்கம்; மனித இழிவு..

அடியார்களைக் குலம் விசாரிப்பவன் எவனோ, அவன் பெற்ற தாயை.. யோனி விசாரித்தவன் ஆகின்றான்! என்பது இராமானுச நெறி!
அதனால்.. ஒருபோதும், யாரையும்.. "சாதி விசாரித்து" விடாதீர்கள்!

அப்போ, எப்படித் தான் பார்ப்பனீயப் புத்தியைக் கண்டுகொள்வது? அவர்களின் தமிழை நம்பாமல் இருப்பது?
இதோ வழி: அவர்களின் சம்ஸ்கிருத பாசம், தானே காட்டிக் குடுத்து விடும்!

நாம் என்ன தான் சாதி பாராது, "அம்மா" என்று பழகினாலும்..
ஆரம்பத்தில் வளைய வந்து, ஆள் சேர்த்த பிறகு..
Sanskrit/ பகவத் கீதா எ. உண்மையான கொண்டை காட்டினார்களே, ஸ்ரீமதி.அமாஸ்?
அதே போல், சாதி வினவாமலேயே.. தாங்களே காட்டி விடுவார்கள்:)


சம்ஸ்கிருத பாசம்! is the keyword..
நீங்கள், ஜாதி வினவாமலேயே.. தானே வெளிக்காட்டி விடுவார்கள்:)
அப்போது அறிந்து கொள்ளுங்கள்.. இவர்கள் கொண்டைகளை!

இவர்களை மட்டுமல்ல!
இவர்கள் என்ன சொல்லித் தமிழைத் தாழ்த்தினாலும்.. இவர்களோடு "ஈஷிக் கொண்டு" உறவாடும் நம்ம மக்களே பலர் உளர்; புண்ணியாத்மாக்கள்!!!
அத்தனை பேரையும் திரைச்சொட்டில் உணர்த்தல் அரிது; அறமும் அன்று! நீங்களே, கண்டுணர்ந்து கொள்க! All of them, Totally Blocked!

இப்படி ஈஷிக் கொண்டு உறவாடும் பலர்.. என் தமிழக/ ஈழ நண்பர்களும் கூட!:(
ஆனால், தமிழைத் தாழ்த்தி, எனக்குத் தனிப்பட்ட நட்பு வேண்டேன்;
நான்.. ஈழத்துக் கருணா அல்ல! தனிச் சுகம் வேண்டி, தமிழைத் துறக்க!

நண்பர்கள் எ. கூறிக் கொண்டு, தமிழ்த் தாழ்ச்சியை, கண்டும் காணாமல் இருந்த உங்கள் "உயர்ந்த உள்ளங்களுக்கு".. வணக்கம்!
நட்பின் மதிப்பால்.. சிலரை மட்டும் Block செய்யாது, Unfollow மட்டும் செய்கிறேன்! 
இதையே, ஈற்றுமடல் எ. கருதிக் கொள்க! 
உங்கள் போலித்தனத்தில் இருந்து, இன்று முதல் விலகிக் கொள்கிறேன்! நன்றி!

இங்கு பிரபலங்களின் நட்பு  மூலம் கிடைக்கும் Networking ஆதாயங்கள்/ ஊடகத் திறப்புக்கள் எனக்குத் தேவையில்லை!
மொழிஞாயிறு பாவாணர் ஒருவரே.. தமிழ்இயல் நூல் பலவும் யாத்தளித்து விட்டார்;
இனி இன்னொருவர் நூல் எழுதித் தான், தமிழை நிலைநாட்டத் தேவையும் இல்லை!!

*அறிஞர்கள் அளவிலேயே தங்கி விட்ட தமிழ் உண்மைகளை..

*சிறுகச் சிறுக..
*பொது மக்களின் அரங்கிலே கொண்டு சேர்ப்பதே, போதுமானது!

தனிப்பட்ட நட்புக்காக, தமிழைச் "சமரசம்" செய்து கொள்ளல்.. அறவே இல்லை!

மனத்தாலும் வாக்காலும் (தமிழ்மறைகள்) பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவில்லேன்; எந்தை (நேயப்பாவாணன்)
பாதங்கள் யாமுடைய பற்று!


3.  எதுக்கெடுத்தாலும், பார்ப்பானைத் திட்டுறதே பொழைப்பாப் போச்சு! 
எ. சலித்துக் கொள்ளும்..
"அறிவு சால்" தமிழர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
உங்கள் இனத்தின் இலக்கணமே = Sanskrit "லக்ஷண"த்தின் பிச்சை தானா?:(

தனிப்பட்ட நட்பு முக்கியம்!
அதனால்.. கண்டும் காணாமல் போய் விடுவோம்! அப்படித் தானே?:)

நீங்கள்.. நூற்றாண்டு நூற்றாண்டுகளாய்.. 
கண்டும் காணாமல் போனதால் தான்..
ன்னிக்கி, இப்பிடி வேர்களே அறுந்து போய் நிக்குறீங்க!
ஈழத்தில்.. தோற்றுப் போய் நிக்குறீங்க:(


உங்களை அழிச்சவனையே, சூரசம்ஹாரம் -ன்னு கும்புடறீங்க!
முருகனை -> ஸூப்ரமண்யன் ஆக்கிய போதும், வாயே திறக்காமல்..
உங்கள் சுயநல நட்புக்கு, முருகனையே சாவடிச்சிட்டு, 
இன்னிக்கி அவன் Photoவுக்கு மாலை போட்டு, சுய-இன்பமே= பேரின்பம்னு வாழுறீங்க!

*பகவத் கீதைக்கு, பாய்ந்தோடி வரும் அவர்கள்.. ஒங்க நட்பைப் பாக்கலையே?
*தமிழ் இலக்கணம்= லக்ஷணம்னு இழிக்கும் போது, நீங்க மட்டும் நட்பு பார்ப்பது ஏனோ?

அவர்கள்.. அவங்க பகவத் கீதாவுக்குப் பாய்ந்தோடி வந்தது போல்

நீங்க.. ஒங்க தமிழுக்காக, திருக்குறளுக்காகப் பாய்ந்தோடி வருவீங்களா?:)

வர மாட்டீங்க! அதான் நீங்க!
ஈழத்தின் கருணாவைத் திட்ட, உங்களுக்குத் 'தார்மீகமே' இல்லை;
ஏன்னா, அன்றாட வாழ்வில், நீங்களே ஒரு கருணா தான்!:)
உங்கள் சுயநலம், தனிப்பட்ட Networking/ Interests தான் மிகப் பெரிது!

---------
பொதுவா, நான் யாருடனும்.. Twitterஇல் நேரடி விவாதம் செய்வதில்லை!
யாருடனும் உரையாடலாய் இல்லாமல்,
"பொதுவான பேச்சு" & தரவு மட்டுமே, என் வழக்கம்!

பொதுப் பேச்சு கூடப் பொறுக்க மாட்டாமல், எதிர்ப்பு காட்ட.. 
அவாள் தாங்களாய் வந்து விழும் போது தான், என் தரவடிகள் பலமாகிறது!

அது அமாஸ் ஆத்தா ஆகட்டும் (அம்மா= நலம் மிகு சொல்; இங்கு மனம் ஒப்பவில்லை; மன்னிக்க! ஆத்தாளும் சொல்லே; ஆத்தாளை அபிராம வல்லியை!)

அது காஞ்சிப் பெரியவா ஷாந்தி மேடம் ஆகட்டும்.. தன் தலையில் தானே அட்சதை போட்டுண்ட கதை தான்!:)
---------

என் "அழுத்தம் மிகு" சொற்கள்,
உங்கள் பொய்யான தமிழ்ச் சிதைப்பின் மேலேயே அன்றி, உங்கள் மேல் அல்ல!


"அவன்/ இவன்" எ. ஒருமை ஏசலும், 
"மானங் கெட்டவன்"; "சாணி போடுறான்"; 
"தொல்காப்பியன் தொம்பி" போன்ற உங்க தனி மனித வசவுகளை
நான் ஒ
ரு நாளும் செய்யேன்!.. அது குறள் நெறி/ இறை நெறி, இரண்டுமே அல்ல! 

பல நூற்றாண்டு மறைப்புக்களை, ஒரே கீச்சில்.. சொல்லீற முடியாது!
சிறுகச் சிறுக, சாணி போட்டுத் தான்.. மெழுக முடியும்!
உங்கள் கோமாதா சாணியை,
நீங்களே மதிக்காது என்னை ஏசும் போதே தெரியலையா?..
உங்களிடம் இறைவன் இல்லை என்று!:) | "ஆத்மாபஹாரம்" எ. இதற்குப் பெயர்! 


சம்ஸ்கிருதம் அறிந்து கொண்டு, சம்ஸ்கிருத விசிறி வீசுங்கள்.. 
மனிதம் ஒரு துளியும் இலாப் 'பெரிய ஸ்டார்' கொண்டைகளே!

மனிதம் இலாமைக்குத் துணை போகும், பல பேரை.. இன்றோடு விலக்கி விட்டேன்!

என் மிச்சமுள்ள நண்பர்கள் யாரும்.. இனி என்னிடம் தனிமையில் வந்து, 
தமிழையெல்லாம் "கொஞ்சம் குறைச்சிக்கலாமே?" என்று சொல்லாதீர்கள்!
சொன்னால், என்ன ஆவீர்கள்? எ. இந்நேரம் ஒங்களுக்கே தெரீஞ்சீருக்கும்:)
---------


பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே! = இது என் சொல் மட்டுமல்ல! 
*மென்மையே உருவான தமிழ்த் தென்றல், திரு.வி.க முதல்..
*மொழிஞாயிறு பாவாணர் வரை சொன்னது தான்!

இதெல்லாம் Mainstream Media வராமல், பார்த்துக் கொள்வார்கள்:)
ஆனால்.. காலம் மாறிடுத்து; Social Media-வாய் ஆயிடுத்து; நான் என்ன ஓய் செய்ய?


தமிழறிஞர். வ.உ.சி -யை, Group சேர்ந்து தள்ளி வைச்சேளே?
அதெல்லாம் பழைய காலம் ஓய்!
தமிழ் மொழி.. பண்டிதாள் கையிலிருந்து, பொதுமக்கள் கைக்கு வரத் துவங்கியாச்!
அவ்வளவு ஏன்..
பிறவியால் பார்ப்பனர்; ஆனாலும், போலி அல்லர்! 
மெய்யாலுமே தமிழ்க் காதலர்!
"சூரிய நாராயண சாஸ்திரி" ; தன் பேரையே, "பரிதி மால் கலைஞர்" எ. மாத்திக்கிட்ட

ஓர் அந்தணரே.. "பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே"! எ. சொல்றாரு:)

ஸ்ரீ. சொக்கன்.. பரிதிமால் கலைஞரோடு உரையாடட்டுமே? பிறகு தெரியும்!


4. சரி, பார்ப்பனீயம்-லாம் விட்டுருவோம்!
இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
தமிழுக்குள், Sanskrit Parasite ஒட்ட வேண்டிய தேவை.. இவர்களுக்கு என்ன?



Writer பா. ராகவன் எனும் பா.ரா!
ஸ்ரீ சொக்கனின் குருநாதர்;

சந்தில், பெரிய தல! ஊடக பலம் மிக்கவர்; 
அந்த Groupஐப் பகைச்சிக்காதீங்கோ.. என்று
எனக்கு, வடகிழக்கு அமெரிக்க மாபியா நண்பர்கள் அறிவுறுத்தியும் உள்ளார்கள்:)

அவரை, எதுக்கு நான் பகைச்சிக்கிணும்? பிழையான 
"கருத்தை" அல்லவா எதிர்ப்பது?
அப்படி, என்னய்யா சொல்லீட்டாரு பாரா? இதோ.. பாரா மன்னா, செப்பவதுடையேன்!!

சம்ஸ்கிருதத்தில் எப்படி இருக்கோ.. அப்படியே தான் தமிழில் புழங்கணுமாம்!
*இது, தமிழ் இலக்கண விதியா?
*அல்ல! பாரா - சொக்கன் - இலவசக் கொத்தன்; பண்டிதாளின் Group விதி!


स्वतन्त्र = ஸ்வ-தந்த்ரம் | சுதந்திரம்-னு சொல்லப்படாது!
आत्मिका = ஆன்மிகம் | ஆன்மீகம்-னு சொல்லப்படாது!
Sanskritல எப்பிடியிருக்கோ, அதே போல் தான் தமிழிலும் சொல்லணும்!

ஆனா தொல்காப்பியர், சம்ஸ்கிருதத்துக்கு இயைஞ்சிப் போகாதே! 
தமிழில் பயன்படுத்த வேண்டியிருந்தா, "சிதைத்தே" புழங்கு-ன்னு சொல்றாரே?
*சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்!
*வடசொற் கிளவி, வட எழுத்து ஒரீஇ;  Sanskrit எழுத்து ஒதுக்கு -ன்னு சொல்றாரே?

தமிழ் மொழிக்கு, பாரா-சொக்கன் பெரிதா? 
இல்லை..  தொல்காப்பிய விதிகள் பெரிதா?

இப்படீல்லாம் நீங்க கேட்க மாட்டீங்க?:)
*உங்களுக்கு Friendship முக்யம்;
*அவாளுக்கு, ஸந்தி முக்யம்; Sanskrit முக்யம்!

இப்பிடி Adjust பண்ணி, Adjust பண்ணித் தான், இந்த நிலமையில் இருக்கோம்!
தமிழில், கலந்து.. கள்ள உறவாடும் சம்ஸ்கிருதச் சொற்கள் > 30%

ஆங்கிலமாச்சும், சும்மா பேச்சு வழக்கு; Figureன்னு ஒங்க ஆயா கூடச் சொல்லீரும்:)
ஆனா.. வார்த்தை/ அர்த்தம் எ. சொற்கள்?
தமிழ்-ன்னே நினைப்பு; அந்நிய ஊடுருவல்-னு கூடத் தெரியாது:(

பாரா/ சொக்கன் போன்ற பண்டிதாள், தமிழ் ஆசிரியர் நாற்காலியில், 
"வாத்தி" என்று உட்கார்ந்து கொண்டு.. 
காலங் காலமாய்ச் செய்த கள்ள மாய்மாலங்கள்!

Sanskrit சொற்களையெல்லாம், தமிழில் எதுக்குய்யா எழுதறீங்க?
அதை நேரடியாச் சம்ஸ்கிருதத்திலேயே எழுதிக்கோங்களேன்? 

...என்று தமிழர்கள் ஆகிய நீங்கள் கேட்கவே இல்லை! விளைவு?

விளைவு: தமிழில்.. கிரந்த Alphabet புகுத்தல்!
"அ/ஆ" என்ற தமிழ் எழுத்தையே,
எப்படி மாத்தி வச்சிருக்கா, மேலே பாருங்கோ!

நல்ல வேளை.. நீங்க ஜ, ஸ, ஷ, ஹ.. &  க்ஷ, ஸ்ரீ -இதை மட்டும் எடுத்துக்கிட்டு,
மற்றதை மறந்துட்டீங்க; தமிழ் மொழி பொழைச்சுது!

---------

இவர்களுக்குப் பாதை போட்டுக் குடுப்பது யாரு?
= காஞ்சி (போன) மஹா பெரியவா!
அவல் சாப்ட்டு அஞ்சு மைல் நடப்பாரே, அதே "எளிமை மிகு" பெரியவா!

புனிதம்/ எளிமை/ பகவான் என்ற பேரில், இங்கு எதுவும் செல்லுபடி ஆகுமே?


கீழே பாருங்கோ!
இலக்கணம்= "லக்ஷணம்" எ. ஆரம்பிச்ச மஹான் யாரு? 
ஸ்ரீ. சொக்கனா? மஹா பெரியவாளா?

ஸ்ரீ சொக்கன் எ. தனித்த ஆள் மட்டும், இதைப் பண்ணலை! 
இஃதொரு பெரிய Network!
இவர்கள், செய்வது என்ன?
ஆங்காங்கே, Networking வளர்த்துக் கொண்டு, Parasite ஒட்டல்!

சங்கத் தமிழ்க் கவிஞர்கள்-லாம் யாரு தெரியுமா? இதோ வாத்திகள் சொல்றா!
अ முதல் ह வரை (அ முதல் ஹ வரை) 48 எழுத்துக்கள்!
51 Sanskrit Letters தான், 51 சங்கப் புலவர்களா.. அவதாரம் எடுத்துச்சாம்!

So, ஒங்க சங்கத் தமிழுக்கே மூலம் எது? = Sanskrit!:)
சொல்வது: சாமிப் பாட்டு;
பகவான் என்பதால், நீங்க ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும்!


சரி, ஸ்ரீ சொக்கனுக்கு, Sanskrit தெரியுமா?
தெரியாது! அவரே, பொதுவில் சொல்லி இருக்காரு..
அப்பறம் எப்படி, இலக்கணம்= லக்ஷணம்-ன்னு சொன்னாரு?

அதை மட்டும் கேட்கப்படாது;
வேதமே படிக்கலீன்னாலும்.. வேதம் ரொம்ப நல்ல வேதம்;
அதில் ஜாதியே இல்லை-ன்னு பரப்பல் செய்வாரு நம்ம சொக்கன்:) 
இதோ.. https://goo.gl/JuxkGE

இப்படி.. மூலம் தெரியாமலேயே எழுதிக் குவித்த "அவியல்" புத்தகங்கள்;
அதான் வினவு தளம்.. இவர்களை "அஜினோ மோட்டோ" என்று உணர்த்திக் காட்டியது!
பா.ராகவன் : அஜினோ மோட்டோ ராஜரிஷி!https://goo.gl/wOxH19

எல்லாப் பார்ப்பனர்களும், இப்படிச் செய்கிறார்களா?
இல்லை!
ஆனால் பலப் பல பேர்; பெரும்பாலும் செய்கிறார்கள் தான்!

Sanskrit தெரியலீன்னாலும், Sanskrit பாசம்;
தங்கள் வேர்.. அங்கே தான் உளது! எனும் ஆழ்மன நம்பிக்கை!
வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும்.. பல ரூபங்களில் வெளிப்பட்டூரும்:)

அதைக் கடந்தவர்கள்... வெகு குறைவே! நல்ல பிராமணர்கள்!

*Sanskrit வேண்டுமானால், தனித்து நல்லபடியா வாழட்டுமே!
*தமிழில் ஏன் Parasite போல், ஒட்டி உறிஞ்ச வேண்டும்?
இந்தத் தெளிவுள்ள நல்ல பிராமணர்கள், மிக மிகக் குறைவே!

*தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதர், ஓரளவு கடந்தவர்!
*கல்கி. கிருஷ்ணமூர்த்தி, ஓரளவு கடந்தவர்
*சூரிய நாராயண சாஸ்திரி எ. பரிதி மால் கலைஞர்.. முற்றும் கடந்தவர்! எதிர்ப்பவர்!


Sanskrit பாசம் கடந்தாலும்.. தமிழ்த் தாத்தா உவேசா-வை,
ஆசை காட்டி Corrupt செய்யும் காஞ்சிப் பெரியவா Technique! 
மஹா பெரியவா, தன் வாயாலயே ஷொல்றாரு, பாருங்கோ!:) இதோ= https://goo.gl/fN01Jg
---------

என் சம்ஸ்கிருத ஆசிரியர், ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார்!

அவரை, இங்கு நினைத்து, வணங்கிக் கொள்கிறேன்!
ஒரு நாளும்.. தமிழுக்குள் Sanskrit புகுத்தித் திணிக்காதவர்;
தமிழே= பெருமாளுக்கு உகப்பு! எ. வாயால் சொல்லாது, வாழ்ந்து காட்டுபவர்!


கல்லூரிக் காலத்தே, எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்ஸ்கிருதம் சொல்லிக் குடுத்த போதெல்லாம்..
என் எத்தனையோ அடாவடி/ குறும்பு/ பெரியார் கேள்வில்லாம் பொறுத்துக் கொண்டு
வேதங்களை விடத் தெளிவு= ஆழ்வார் ஈரத் தமிழே! எ. துணிந்து சத்தியம் செய்தவர்!

பா.ரா/ ஸ்ரீ. சொக்கனை விட, 1000 மடங்கு மேலானவர், என் சம்ஸ்கிருத ஆசிரியர்!
*அவர், சம்ஸ்கிருதம் அறிவார்!

*இவர்கள், அறிய மாட்டார்கள்!
அறியாமலேயே.. இந்தக் குதி குதிக்கிறார்களே? அறிந்தால்?

பெரியார் சொன்ன பொன்மொழி:
*வைதீகப் பார்ப்பானைக் கூட நம்பலாம்!
*ஆனால் லெளகீகப் பார்ப்பானை, நம்பிடாதே!
முற்போக்கு வேஷங்கள்; ஆனால் அடி மனசில்?

இந்த ஒலித் துண்டு கேளுங்கள் (இது என் ஆசிரியர் அல்லர்)
வேளுக்குடி என்ற உபன்யாசகர்; ஆயினும், இராமானுச தமிழ் இயக்கத்தின் வழியில், "ஓரளவாச்சும்" செல்பவர்! Sanskrit திணிக்காமை: "கருத்தை" மட்டும் கேளுங்கள்!


என் சம்ஸ்கிருத ஆசிரியரிடம் பயின்ற போது, பெற்ற 'அனுபவங்களை'யே..
மாதவிப் பந்தல் எனும் வலைப்பூவில் எழுதத் தொடங்கினேன்!
"இறைமையில் தமிழ்" எ. நோக்கத்தில் மட்டுமே! 
இராமானுசரோடு பெரியாரும் உலா வருவார், என் பதிவுகளில்:) ஆனால்... 

*பொறுக்காத ஹிந்து/ சைவர்கள்= என்னை வைணவன் எ. முத்திரை குத்தினர்:)
பின்பு, பகவத் கீதா/ கம்ப ராமாயணக் கயமைகளைச் சொன்ன போது..
*பொறுக்காத வைஷ்ணவர்கள்.. என்னை நாஸ்திகன் எ. முத்திரை குத்தினர்:)
பின்பு, ஆதித் தமிழ்/ சங்கத் தமிழ் உண்மைகள் சொன்ன போது..
*பொறுக்காத சைவ/வைஷ்ணவ இருவருமே, என்னைச் சமணன் எ. குத்தினர்:)

இதோ.. சமணன் ஆகிய நான்! :)))))
இதிலிருந்தே தெரிகிறது.. நான் போகும் தமிழ்ப் பாதை, சரியே என்று!
அவரவர் அபிமானங்கள் உடையும் போது, அவரவர்க்குப் பகை ஆகும் நான்:))
என்னை... என் சிறுவயது (அந்தரங்க) தமிழ் முருகனே நன்கு அறிவான்!





முடிப்புரை:

ஸ்ரீ சொக்கன், உங்களுக்கு நமஸ்காரம்!

ஆரிய அரசன், பிரகதத்தனை மறுத்து.. சங்கத் தமிழ் பாடிய கபிலர்!

அதே போல், நானும் உங்களை மறுக்கிறேன்..

தமிழ் இலக்கணம் = லக்ஷணம் எ. சம்ஸ்கிருதம் அல்ல!
*இலக்கணம் = இலக்கு + அணம்
*இலக்கியம் = இலக்கு + இயம்

இதை, 2012லேயே, உங்கள் பதிவில் சொல்லியுள்ளேன்; இதோ= https://goo.gl/s9Kujm
ஆனாலும், Gentleman போல் உலா வந்து,
கடைசியில்.. உங்கள் "புத்தி" காட்டி விட்டீர்கள்:(


சிறு பிள்ளைகள் நெஞ்சில், நஞ்சை விதைக்கும்..
நீரோ ஆசிரியன்? அல்ல; நீயே கள்ள வாத்தி:(


இலங்குவதால், இலக்கணம்!
இன்னின்ன எழுத்து, இன்னின்ன சொல், இன்னின்ன பொருள்.. 
இப்படி இப்படி "இலங்க" வேண்டும் என்ற மொழி வரையறையே = "இலக்க"ணம்!

சம்ஸ்கிருத லக்ஷணம் தான் இலக்கணம் என்றால்..
Sanskritஇல் ஒரு Grammar நூலாச்சும்.. "லக்ஷணம்" எ. பேருடன் காட்டுங்க பார்ப்போம்?

சம்ஸ்கிருதத்தில்..
*இலக்கணம் = "வியாகரணம்" (व्याकरण); லக்ஷணம் (लक्षण) அன்று!

*இலக்கியம்  = "ஸாஹித்யம்" (साहित्य) ; லக்ஷியம் (लक्ष्य) அன்று!
இதிஹாஸம்/ புராணம் என்று, ஸாஹித்யம் விரிவு பெறும்;

Sanskrit தெரியுமா, சொக்கா.. உமக்கு?
ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி! - இதன் பொருள் சொல்லுங்க பார்ப்போம்?

பாணினி Sanskrit Grammar = "பாணினி லக்ஷணம்" என்றா இருக்கு?
பாணினி வியாகரணம், அஷ்ட த்யாயி!
வியாகரணம் என்ற Sanskrit Grammar கூட அறியாமல்,
3000+ ஆண்டு "தமிழ் இலக்கணத்தை", Sanskrit ஆக்கும் நீயோ தமிழ்-ஆசிரியன்?
உன்னிடமா, இங்கு தமிழ் ஐயம் கேட்டோம்/ கேட்கிறார்கள்? ச்சீ!:((((((

"இல்" என்ற தமிழ் வேர்ச்சொல்லால்.. இலக்குதலும், இலங்குதலும்!

*இலக்குக்கு,  இயம் செய்வது   =  இலக்கியம்!
*இலக்குக்கு, அணம் செய்வது = இலக்கணம்!
இலக்கியங்கள் எழுந்த பின்னரே, அதைச் செந்தரப்படுத்த.. இலக்கணங்கள் எழும்!

இதோ, தொல்காப்பிய "இலக்கணம்"!
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
"இலக்கண" மருங்கில் சொல்லாறு அல்ல! - (சொல்லதிகாரம்; கிளவியாக்கம்: 510)

தொல்காப்பியம், என்ன "லக்ஷண" மருங்கா, ஸ்ரீ சொக்கன்?:(
எத்துணை, நெஞ்சழுத்தம் ஒமக்கு.. 3000+ ஆண்டு, தமிழ் இலக்கணத்தை இழிவு செய்ய?

இதோ, நாலடியார் "இலக்கணம்"!
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
"இலக்கணம்" யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி (நாலடியார் 399)

இதோ, சிலப்பதிகார "இலக்கணம்"!
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
"இலக்கண" முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படும் மகனலன் என்று கூறும்! (கொலைக்களக் காதை: 159-163)

இதோ, சிவ சிவா என்று திருவாசக "இலக்கியம்"!
பேசும் பொருளுக்கு "இலக்கியமாம்" பேச்சிறந்த 
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் 
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல 
மருத்தினடி என்மனத்தே வைத்து! (பண்டாய நான்மறை 48:7)

அத்தனையும்.. "இலக்குதல்/ இலங்குதல்" என்ற பொருளிலே, தமிழ் "இலக்கணம்"

இலக்கு + அணம் = இலக்கணம்
இலக்கு + இயம் = இலக்கியம்
இலங்குவதால்.. இலக்கணம்!
இன்னின்ன எழுத்து, இன்னின்ன சொல், இன்னின்ன பொருள்..
இப்படி இப்படி ‘இலங்க’ வேண்டும் என்ற வரையறையே = 'இலக்க'ணம்! 

இலக்கு-இலங்கு: மெலித்தல் / வலித்தல் விகாரங்கள்;
'இல்' என்பதே வேர்ச்சொல்;
இலக்கை இயம்புவது = இலக்கியம்
இலக்கை அடைய வழி (அணம்) வகுப்பது = இலக்கணம்

ஓர் எடுத்துக்காட்டு பார்த்தால் உங்களுக்கே விளங்கிவிடும்;
சிலப்பதிகாரம் போல ஓர் இலக்கியம் எழுத ஆசைப்படுகிறேன்;
என் இலக்கு+இயக் கொள்கை என்ன?
1. புகழ்சால் பத்தினி உலகம் போற்றும்
2. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

சரி, இலக்கை இயம்பியாச்சு; எப்படி அடைவது? இலக்கு+அணம் வழி காட்டும்;
என்ன கருப்பொருள், உரிப்பொருள்? என்ன கதை?
யார் ஆண்பால், பெண்பால் கதை மாந்தர்கள்?
என்ன திணையில் என்ன Scene வைப்பது?
எங்கெல்லாம் பண் / இசை வரணும்? ஆசிரியப்பாவா? உரையிடை பாட்டா?
இதையெல்லாம் சேர்த்துக் கட்டினால், இலக்கு+இயம் கிடைக்கும்;
அதற்கு, அணம் (வழி) சொல்வதே, இலக்கு+அணம்!

தமிழ் மொழியின் முதல் பிள்ளை = இலக்கியமே; பின்னரே இலக்கணம்!
இலக்கியங்கள் எழுந்த பின்னரே செந்தரப்படுத்த இலக்கணங்கள் எழும்! 
எள்ளில் இருந்து தான் எண்ணெய்; எண்ணெயில் இருந்து எள் அன்று! :)
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே!

வழக்கின் ஆகிய உயர்சொல் கிளவி
"இலக்கண" மருங்கில் சொல்லாறு அல்ல!
(தொல்காப்பியம்; கிளவியாக்கம்: 510)

இலக்கணம் = லக்ஷணம் அல்ல! சம்ஸ்கிருத மொழியிலேயே.. அது வியாகரணம் / व्याकरण தான்; யாரும் சம்ஸ்கிருத லக்ஷணம்' என்று சொல்லுவதில்லை! பாணினி 'வியாகரணம்'!

ஆனால் பாணினி வியாகரணத்துக்குள், 'லக்ஷணம்' என்றொரு வரியும் வரும்;
அதைத் திரித்து, வெறும் சொலைக் காட்டி, பொருள் மறைப்பார்கள்!
ஆனால் இக்காலத்தில், இவர்களை விட,
நாம் சம்ஸ்கிருதம் அறிந்து வைத்துள்ளோமே? என்ன செய்ய? :)

பிரத்யய லோபே, பிரத்யய லக்ஷணம் | प्रत्यय लोपे प्रत्यय लक्षणम् |
பிரத்யயம் = முன்னொட்டு / பின்னொட்டு
பிரத்யய லோபே = ஒரு (Sanskrit) சொல்லில் முன்னொட்டோ / பின்னொட்டோ லோபம் ஆனாலும் (மறைந்து போனாலும்)..
பிரத்யய லக்ஷணம் = அந்த முன்னொட்டு / பின்னொட்டின் இயல்பு மறைந்து போகாது! இவ்ளோ தான், இந்தப் பாணினி வரிக்குப் பொருள்;

Sanskrit தெரியலீன்னாலும், Sanskrit பாசம் கொண்டு ஆதிக்கப் புத்தி காட்டினால், தமிழிடம் அசிங்கப் படலே, உங்கள் லக்ஷணம்!
लाक्षण / லஷணம் என்றால் இயல்பு / குணம்! பொய் சொல்றியே, இதான் உன் லட்சணமா? என்று கேட்பது, இயல்பு / குணம் என்ற பொருளில் தான்; இதான் உன் Grammarஆ? என்ற பொருளில் அல்ல! :)

லக்ஷ்மணன் = தமிழில் கிரந்தம் தவிர்க்க வேண்டி இலக்குவன் என்று எழுதுவதால்,
அக் கொம்பைப் பிடித்த குரங்கு போல்,
இலக்கணம் = லக்ஷணம் என்று Reverse Gear அடிக்கும் திருட்டுத்தனம் / மடத்தனம்!

தறியில் இருந்து வெட்டி எடுக்கப்படுவதால்.. வெட்டி, ஆதிநீண்டு வேட்டி!
ஷொல் (சொல்), ஆஷை (ஆசை), Goலு (கொலு), வேஷ்டி (வேட்டி) என்றெல்லாம் பிழையாகப் புழங்கிவிட்டு.. பின்பு, வே’ஷ்’டியில் இருந்தே, வேட்டி வந்தது என்று சொன்னால் எப்படி?
பேரனுக்குத் தாத்தன் பிறந்தான்! எனும் மூடம் தான்! சம்ஸ்கிருதமே அறியாவிட்டாலும், இப் 'புத்தி' சிலருக்கு எதனால் வருகிறது?

அறிக: இலக்கியம் / இலக்கணம் = தமிழ்ச் சொற்களே! 
சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
2500+ ஆண்டுள்ள ஒரு மொழியின் இலக்கணத்தை..
 “அது உன் மொழியே அல்ல; சம்ஸ்கிருதப் பிச்சை”
என இழிவுசெய்தல் = கொடுமனம்! மட்டமான 'புத்தி'!

---------

ஸ்ரீ. சொக்கன்..
ஒரு தொல் மொழியின் இலக்கணத்தையே = Sanskrit என்கிறோமே?
என்ற அச்சம்.. கூடவா உம்மிடம் இல்லை?

எத்துணை நெஞ்சழுத்தம்  உமக்கு, ஓர் ஆதிமொழியின் இலக்கணத்தையே இழிக்க?:(

உம் போன்றவர்களின் திருக்கூத்து பார்த்துட்டு,
மனசுக்குள்ளேயே புழுங்கி,  வாய்மூடிச் சென்று விட, நான் 
மெல்லியல்பாளர்கள் கானாபிரபாவோ/ ராகவனோ இல்லை!
இருந்தேன்.. ஒரு காலத்தில், மென்மையே உருவாக! 
Controversy-யே இலாது, அனைவர்க்கும் நண்பனாய்! பதிவுலகில் கேட்டுப் பாருங்க..

ஆனால்.. உம் போல்வார் Sanskrit திருக்கூத்து கண்டு கண்டு, மனமொடிந்து மாறினேன்; 
தனிப்பட்ட நட்புக்கு.. தமிழையே அடகு வைக்கும் மெல்லியல்.. இனி போய்விட்டது!:(
---------

1. வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள் - இரண்டும் சரியே! 
அத் தமிழ் மொழி நெகிழ்வைச் சிதைக்க முயன்றீர்கள்!
சரி, வெறும் சொல் தானே.. என்று விட்டுப் பிடித்தேன்; 
ஜெயமோகனுக்கு, உம் பேர் சொல்லாது எழுதினேன்! 
நச்சினார்க்கினியர் தரவு மட்டும் முன் வைத்து, அமைந்து போனேன்;

2. கோயில்/ கோவில் - இரண்டும் சரியே!
அத் தமிழ் மொழி நெகிழ்வைச் சிதைக்க முயன்றீர்கள்!
உம் பதிவிலேயே, தரவு சொல்லி, திருத்தி.. அமைந்து போனேன்!

3. இவை சிறுசிறு விவாதங்களே! பொருட்படுத்தல் இல்லை; வெறுஞ் சொல் தானே!
ஆனால் தனிப்பட்டு எடுத்துக் கொண்டு,
என்னை, அந்தக் கால அக்ரஹார ஜாதி பிரஷ்டம் போல்..

என் நண்பர்களையெல்லாம், விலக்கப் பார்த்தீர்கள்;
உங்கள் Influence மூலமாக, பலருக்கும் DM/ மின்னஞ்சல் செய்து:(

இது குறித்து உங்கள் மட்டமான செய்கைகளை,
ஸ்ரீமதி. அமாஸ்.. எனக்கு அனுப்பிய email-ஐப் பொதுவில் வைக்கட்டுமா?
(அவர்கள் இசைவு அளித்தால்); 
உங்கள் Gentleman சுயரூபங்கள்?:(

இதெல்லாம், என் மேலான தனித் தாக்குதல் மட்டுமே!
இதனால் தமிழுக்குப் பாதகம் இல்லையே? எ. நான் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை! 
ஆனால்... இன்றோ எத்துணை நெஞ்சழுத்தம் இருப்பின்.. 
ஒட்டுமொத்த தமிழ் இலக்கணத்தையே..
Sanskrit லக்ஷணம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வீர்கள்?

அதுவும், ஏதுமறியாப் பிஞ்சு உள்ளங்களில்? சீச்சீ..

உங்களை... "ஏமாற்றுக்காரன்" எ. சொல்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்!
இதோ, வாங்கிக் கொள்ளுங்கள்!
"பார்ப்பனக் கூலி"யாம்; நான் சொல்லலை.. தமிழே உருவான பாரதிதாசன் சொல்றாரு!
இலக்கணம் = லக்ஷணமா? என்ற அவர் ஆய்வையும், இதோ படிக்கவும்!


ஸ்ரீ. என். சொக்கன்,
உம் Gentleman-தனத்தில், ஏமாந்து தான் போனேன்/ போனோம்:(

ஆனால்.. "அவரவர் எச்சத்தாற் காணப்படும்"! 
என்று இறைவன், காலம் காட்டி அருள்கிறான்!

கரவு ஆகிய கல்வி உளார், கடை சென்று
இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ?
யாம் ஓதிய கல்வியும், எம் (தமிழும்)
தாமே பெற வேலவர் தந்ததினால்...! (கந்தர் அநுபூதி)

இனி மேல்.. உம் தமிழ் வாத்திப் போதனைகளில்.. ஏமாற மாட்டோம்!

உங்கள் 365paa தளத்தில், விடிய விடிய தமிழ் எழுதி..
இன்று உங்கள் கயமையால் ஏமாந்து நிற்கும் நான்..
உள்ளபடியே வெட்கித் தலை குனிகிறேன்:(

பிஞ்சுக் குழந்தைகளின் தமிழைக் கெடுக்கும்.. காணொளி கண்ட நாள் முதலாகவே!

அந்ய க்ஷேத்ரே கர்மோ பாபம், புண்ய க்ஷேத்ரே விநச்யதி;
புண்ய க்ஷேத்ரே கர்மோ பாபம், வாரணாசே விநச்யதி!
வாரணாசே கர்மோ பாபம், ஸ்ரீநிவாசே விநச்யதி;
தமிழுக்குக் கர்மோ பாபம்?
சர்வம் நஹி விநச்யதி; சக குடும்பாம் நஹி விநச்யதி; சகல ஜென்மாம் நஹி விநச்யதி!

தமிழுக்குச் செய்த பாவம்.. எப்படி, வேதம் எ. ஆதாரமே.. இன்று உங்களவாளை விட்டுப் போயிருச்சோ, 
போலவே.. ஸ்ரீ சொக்கனே, தமிழ் உமக்கு அறம் கூறும்! முருகன் திருவடி ஆணை!

உங்கள் மேல், முன்பொரு காலத்தில் வைத்த மரியாதை கருதி, வீண் கும்மிகள் வேண்டாம் என்று பந்தலில் முதன்முறையாகப் பின்னூட்டங்களைப் பூட்டுகிறேன்!
சென்று வாருங்கள் என். சொக்கனே; பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, ஈசன் நக்கு நிற்பர்.. அவர் தமை நாணியே!:(

தமிழ் மொழி இலக்கணம்= இலக்கு+அணமே!
Sanskrit "லக்ஷணம்" அன்று, அன்று!

பிஞ்சுக் குழந்தைகளின் தமிழைக் கைவைச்சிக் கெடுக்காதீர்கள்; ச்சே! மனமே ஆறலை:(
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP