Sunday, January 06, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

முந்தைய பகுதி இங்கே!
சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!
அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!

போலியோ அட்டாக் வந்து, கால்கள் குச்சி போல சூம்பிப் போன நிலையில், பெருமான் இருக்கிறானாம். நான் சொல்லலை! அரசாங்கத்தின் பழனிக் கமிட்டியில் உள்ள ஒரு கெமிக்கல் எஞ்சினீயர் சொல்றாரு!
முருகனின் கோலத்தைக் கிட்டக்க போயிப் பார்த்துவிட்டு வாய்விட்டு அழுதாராம்! அப்புறம் இங்கிட்டுப் போய் படிங்க. டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு...முந்து முந்து முருகவேள் முந்து! எங்கே முந்தறது?

அதான் நாப்பது கோடிக்குச் சொந்தக்காரனாச்சே-ப்பா? நல்லாக் கவனிப்பாங்களே!
உம்..உம்...கவனிக்கிறாங்க தான்! முருகனைத் தவிர மற்ற எல்லாத்தையும்!
இதே நாப்பது கோடி மதிப்புள்ள ஒரு தனியார் கம்பெனியில், அசெம்ப்ளி லைனில் - ப்ரேக் பொருத்தும் கருவி வீக்கா இருக்கு!
மணிக்கு அறுபது யூனிட் போட்டாகணும், இருபது தான் போட முடியுதுன்னா - இந்தப் பிரச்சனை குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் தீர்க்கப்படாம இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் இருபது வருடம்??? :-(

எல்லாருக்கும் பழனியில் பிரச்சனை இருக்கு-ன்னு தெரியும்! ஆனா தீர்வு மட்டும் ஏன் தேட மாட்டறாங்க?
காரணம்: அவங்க அவங்க முன்னுரிமை வேற வேற!
* நிர்வாகத்தின் முன்னுரிமை: பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளை அரசு(?) கஜானாவில் சேர்த்தல்.
* பக்தர்களின் முன்னுரிமை: தங்களுடைய வேண்டுதல் மட்டுமே! குடம் குடமாய் பாலாபிஷேகம்.

அதான் சென்ற பதிவில் சொன்னேன். பக்தர்கள் பங்கு=40%, நிர்வாகத்தின் பங்கு=60%; சென்ற பதிவில் நம்மால் ஆன சிறு சிறு சீர்திருத்தங்கள், மாற்றங்களைப் பார்த்தோம்.
இன்னிக்கி துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.



ஆகமங்கள்: கோயில்ல இருக்கும் சிலையின் நீள-அகலங்கள், மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப, இத்தனை குடம் நீராட்டு, இவ்வளவு முறை நீராட்டு என்பது நியமம்! தைலக் காப்பு செய்தல், விக்ரக சேதாரங்களைக் குறைக்கும்! (wear & tear)

பக்தர்கள்: அவன் ஒரு குடம் கொடுத்தான். நாமும் ஒரு குடமாச்சும் குடுத்து வேண்டிக்குவோம். சரி போட்டிக்காக எல்லாம் வேணாம்! நம்ம கஷ்டமெல்லாம் தீர அவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி மகிழ்வோம்! - இப்படி ஓவராக் குளிப்பாட்டினா அவன் மகிழ்வானா? ஐயோ! அதை யோசிக்கலையே!

நிர்வாகம்: கோயிலுக்கு வருவாய் சேர்க்கணும்-னா புதுப்புது வழியில் திட்டங்கள் உருவாக்கணுமாம்! பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வதில் குறியா இருக்காய்ங்க! இந்த வீக்னஸ் தான் நமக்கு டிமாண்டு! புதுசா புதுசா திட்டம் போடுவோமா?
1. AFA = Abishekam For All = Rs 500/- only!
2. அ.ஆ. = அபிடேகம்-ஆறுமுகம் = Rs. 100/- only

அச்சோ...இதனால் மூலவர் சிலை சேதாரப்பட்டாலும் படலாம்! ஆகமத்தில் சொல்லி இருக்கே! ஆறு கால வழிபாட்டு - வெறும் ஆறாறு (6x6) குடம் முழுக்காட்டுன்னு...

யோவ், அதெல்லாம் ஒருத்தனுக்கும் புரியாது! ஒரு G.O. போட்டாப் போச்சு! தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!
நாம என்ன கொலையா பண்ணுறோம்? சாமிக்கு அபிசேகம் தானயா பண்ணுறோம்? அப்படியே வருவாயைப் பெருக்கிப் "பல நல்ல" விசயங்களுக்குப் பயன்படுத்தப் போறோம்! வந்துட்டாங்க பெருசா!....போயி ஆவுற வேலயப் பாருங்கப்பா!
குருவாய் "வருவாய்" அருள்வாய் குகனே-ன்னு, வருவாயைத் தான் அருளச் சொல்லி இருக்காரு! தெரியுமில்ல? :-)

இப்படித் தான் பொதுவா எல்லா வருவாய் பெருக்கும் திட்டங்களும் ஆரம்பிக்குது! வருவாயைப் பெருக்க வேண்டாம்-னு சொல்லலை!
ஆனா at the cost of what? எதுக்கு முன்னுரிமை? அதை யோசிக்க மறுப்பது ஏன்?
* ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
** இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா?
- "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்?" என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!

இதுக்கெல்லாம் பக்தர்களைப் பெருசாக் குறை சொல்ல முடியாது!
பலரும் ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான்! அவர்களுக்குப் படிப்படியாக ஆன்மீகச் சிந்தனைகள், மன அமைதி, பண்பாடு இவற்றை எல்லாம் ஊட்டத் தானே ஆலயங்கள் தோன்றின!
ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!
ஹிஹி! லயிப்பதா? சிரிக்கிறீங்களா? ஆனா அது தான் உண்மை! அதான் நிர்வாகத்தின் பங்கு 60%! வாங்க, பார்க்கலாம்!



1. முதலில் ஆலய நிர்வாகம், கொள்கை என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளட்டும். ஆலயங்களின் முழுமுதல் நோக்கம் (Primary Objective): இறைவனுக்கும்-பக்தனுக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே!

இதெல்லாம் பேசத் தான் நல்லா இருக்கும், நடைமுறைக்குச் சாத்தியமில்லை-ன்னு சொல்லலாம்!
வாடிக்கையாளர் திருப்தியே ஒரு நிறுவனத்தின் முதல் நோக்கம்-ன்னு ஒரு இயக்கம் வந்த போது, நிறைய பேர் இதையே தான் சொன்னாங்க! ஆனா இன்னிக்கி நிலைமை என்ன? வாடிக்கையாளர்களை வெளிப்படையாக யாரும் பகைச்சிக்க முடியாது!

அதே மாற்றம் தான், ஆலயங்களுக்கும் வர வேண்டும்!
ஆலயத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த முழுமுதல் நோக்கத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைச் சரி பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்! (All actions should be aligned with this objective)


2. அரசின் இந்து அறநிலையத் துறை (HRCE), முதலில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற வேண்டும்! IIT, IIM, ISRO என்று இருப்பது போல் HRCE.
இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே!

எப்படி ஒரு கம்பெனிக்கு Charter, Vision Statement, Mission, Quality Policy என்று இருக்கிறதோ, அதே போல் HRCE-க்கும் தேவை.
முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!

ஆங்காங்கு உள்ள கோயில்களில் தன்னார்வக் கண்காணிப்பு குழுக்கள் அமையுங்கள்.
இல்லத் தலைவிகள், வணிகர், மருத்துவர் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு தட்டிலும் இருந்தும் ஒருவர் இருப்பது நல்லது. குறிப்பாக கல்லூரி மாணவ/மாணவியர் இருக்க வேண்டும்! இளங்கன்று பயமறியாமல் பட்டதைச் சொல்லும்!


3. அனைத்து ஆலயங்களின் பணித் தகவல்கள், அசையாச் சொத்துக்கள், நிலங்கள் ஆவணப்படுத்தி, நடைமுறையும் படுத்த வேண்டும்! தரவுத் தளத்தில் (database) சேமிக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு அறிக்கையை வெளிப்படையாகச் சமர்பிக்க வேண்டும்! அனைவர் பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும்!

ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்களின் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! மானம் போகட்டும் :-)


4. சாதி, மதம், பணம் - இந்த வேறுபாடுகள் ஆலயங்களில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்!
* சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!
* பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா?
தன்னலமில்லாத ஆன்ம பலத்தால், கோவிலில் சாதிக் கொடுமையை ஒழித்துத் தள்ளினார் பெரியார்! பயமே பாதி வேலையைச் செய்தது! மீதியைத் தான் சட்டங்கள் செய்தன!

ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?
சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!


5. கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க! Manage the crowd, Dont exploit the crowd!

பெரிய ஆலயங்களில் தான் இந்தப் பிரச்சனை? அதான் வருவாய் வருதே! Management Consultant-களை அழைத்துப் பேசித் தீர்வு காணுங்களேன். கருவறைக்குள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்று முதலில் நிர்ணயம் செய்யுங்கள்! (Maximum Occupancy). நெரிசல்/விபத்து-ன்னா முதலில் HRCE தலைவர் ராஜினாமா செய்யட்டும்!

Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய்/ஷெட் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "ஷெட் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!

நோய் நாடி-நோய் முதல் நாடி-ன்னு பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!


6. சிறப்புத் தரிசனத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள்!
ஞாபகம் வச்சிக்குங்க பக்தர்களே! -
* ஒன்னு "தர்ம" தரிசனம்!
* இன்னொன்னு "அதர்ம" தரிசனம்!
நீங்க எந்த தரிசனம் பார்க்க விரும்புறீங்க?


பணம் திரட்ட வேறு பல நல்ல வழிகள் உள்ளன! நல்ல மேலாண்மை, முதலீட்டு நிபுணர்களை அணுகுங்கள்! உங்களை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்! பக்தர்களை விட்டு விடுங்கள்!
இறைவன் பிரம்மாதி தேவர்க்கு அரியவன்! பத்துடை அடியவர்க்கு எளியவன்! - இது தான் அடிப்படை! - சிறப்புத் தரிசனம்-னு சொல்லி அதைத் தூக்கிப் போட்டு உடைக்கறீங்க! அடிப்படையை ஆட்டிப்புட்டு, பணம் திரட்டி வைரக் கீரீடம் செய்யப் போறீங்களா? சொல்லுங்கப்பா!

அட, வேளாங்கண்ணியில கூட்டம் இல்லியா? அங்க சிறப்புத் தரிசனம் இருக்கா என்ன? ஒப்பிட்டுப் பேசறேன்-னு தப்பா நினைக்காதீங்க! நல்லதை எங்கிருந்து வேணும்னாலும் கத்துக்கலாம்!
எனக்குத் தெரிஞ்சி, ஷிர்டி சாயிபாபா, பிர்லா மந்திர், சபரிமலை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கிடையாது! இங்க போனா மட்டும் பிசியோ பிசியான நீங்க, எப்படி லைன்ல நிக்கறீங்க? கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!

முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள், கைக்குழந்தைகள் - இவர்கள் மட்டும் தான் விதிவிலக்கு! ஒரு நாளைக்கு நான்கு வேளை - இவர்களுக்கு மட்டும் தரிசன நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். போதும்!
ஐஸ்வர்யா ராய், அம்பானி எல்லாம் நிப்பாங்களா? அப்படியே நின்னாலும் கூட்டம் சும்மா விடுமா-ன்னு எல்லாம் கேட்கறீங்களா? வெளிநாட்டுக்குப் போனாங்கன்னா அவங்க ரோமாபுரியில் நிக்கலை? இங்கேயும் நிப்பாங்க!

இல்லீன்னா இருக்கவே இருக்கு சில அதிகாலைச் சேவைகள்! முன்பதிவு செய்துட்டு அந்த நாளுக்குக் காத்திருந்து வழிபடட்டுமே! அவங்க நன்கொடை கொடுத்தாங்கன்னா, நன்றி சொல்லி வாங்கிக்குங்க! மாலை போட்டு மரியாதை செய்யுங்க போதும்! மேல்விழுந்து கொண்டு பக்தர்கள் வரிசையை நிறுத்தறது எல்லாம் டூ மச்! எறிபத்த நாயனார் மட்டும் இப்ப இருந்தாரு...வாய் பேசாது! கை மழு தான் பேசும்! :-)


7. அனைத்து மதத்தினரையும் சேவிக்க உள்ளே விடுங்கள்! ஒரு காலத்தில் இருந்த பகைமை உணர்ச்சி இப்ப இல்லை! நீங்க சேவிக்க விட்டுட்டீங்க-ன்னு உடனே யாரும் அப்படியே திரண்டு வரப் போவதில்லை! விருப்பப்பட்டவங்க தான் வரப் போறாங்க! வரட்டுமே! துலுக்கா நாச்சியார் வரலையா?

இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!


8. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! பயிற்சியும் கல்வித் தகுதியுமே போதும்!
வாரிசுமுறை எல்லாம் தேவையே இல்லை! பெரும்பாலான வாரிசுகளே ஏழ்மை நிலை கருதி, வேண்டாம் என்று ஒடி விடுகின்றன! ஆக விருப்பமும், பயிற்சியும் தான் இன்றைய தேவை! இது பெரும் கோயில்களுக்கு மட்டும் இல்லை! கருப்பண்ணசாமி, பாடிகாட் முனீஸ்வரன், பேச்சியம்மன் போன்ற நாட்டார் ஆலயங்களில் கூடச் சாதிவழி அர்ச்சகர் முறை தேவையற்றது!

வைணவ ஆகமத்தில் முக்கியமான ஆகமம் ஒன்னு இருக்கு! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு பேரு! அதுல அர்ச்சகர்கள் சாதி வழி வரத் தேவையில்லை-ன்னு சொல்லியிருக்கு! அதை ஒட்டித் தான் திருவரங்கம் முதலான பல கோவில்களை, அன்னிக்கே ஸ்டிரிக்ட்டான வேறு ஆகமத்தில் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றினார் இராமானுசர்! பல எதிர்ப்புகளையும் மீறிச் செய்து காட்டினார்!

இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்காகப் பல நிலைகளில் பயிற்சி தராங்க! ஆகமப் ப்ரவீனர்-னு பட்டமும் தராங்க!
ஏதோ அரசாங்கம் தான் இப்ப 2007ல சாதிச்சிட்டாங்க-ன்னு பேசிக்கறது எல்லாம் சும்மா! இன்னிக்கி அரசு அமைத்த குழுவில் சிறப்பு வழிகாட்டியே, திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர் தான்!


9. அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!

ஆலயங்களை வருமான அளவில் வகைப் பிரித்து, அதற்கு ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிக்காதீர்கள்! எப்படிக் கோவில்பட்டி கிளாஸ்-சி ஊழியருக்கும், கோயம்புத்தூர் கிளாஸ்-சி ஊழியருக்கும் அதே சம்பளமோ, அதே போல் தான் பரமக்குடி கோயில் அர்ச்சகருக்கும், பழனி கோயில் அர்ச்சகருக்கும்!

ஆலயச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை, அனைத்து ஆலயப் பொது நிதி (common pool) ஆக்கி முதலீடு செய்யுங்கள்! TTD இப்படித் தான் செய்கிறது! ஆலோசனை கேளுங்கள்!

அர்ச்சகர்கள் மட்டும் இல்லை! அவர்களோடு, ஓதுவார்கள், அரையர்கள், நாதசுரம் மற்றும் இசைக் கலைஞர்கள், சிற்பிகள் - இவர்கள் எல்லாம் சிறப்புப் பணியாளர்கள் (Speciality Occupation); சமுதாயம் ஒதுங்கிக் கொள்ளும் வேலைகளை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்! மதித்து, கருணை காட்டுங்கள்!


10. தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!
வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!

ஒரு அரசாங்கம் சாதிக்க முடியாததை, ஆசாரியர்கள் சாதித்துக் காட்டினார்கள்! நாதமுனியும், இராமானுசரும், தேசிகரும், மணவாள மாமுனிகளும் - இவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது!


11. தமிழ் அர்ச்சனை பற்றிச் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்!
இறைவன் மொழியைக் கடந்தவன் தான்! எனக்கும் தெரியும்! ஆனால் பக்தன் மொழியைக் கடந்தவனா? Again the objective is: பக்தனுக்கும் இறைவனுக்கும் பாலமாய் இருப்பது! தான் என்ன சொல்லி சங்கல்பம் செய்கிறோம் என்று பக்தனும் தெரிந்து கொள்வது தான் நல்லது!

அவரவர்க்கு விருப்பமான மொழியில் வழிபட்டுக் கொள்ளட்டுமே-ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான்! அவரவருக்கு விருப்பமான மொழி-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது?

இப்படிப் பொத்தாம் பொதுவாச் சொன்னீங்கனா நான் வேற மாதிரி வருவேன்! வேணும்னா இப்படிப் பண்ணலாமா?
அர்ச்சனையின் போது பேரு, நட்சத்திரம் கேக்கறாங்க-ல்ல? அப்படியே என்ன மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புறீங்க-ன்னு கேக்கலாம்!

* தமிழ்-னு சொன்னா தமிழ் அர்ச்சனை!
* உங்க இஷ்டம்-னு சொன்னாலும் தமிழ் அர்ச்சனை!
* வேறு ஏதாச்சும் மொழி குறிப்பிட்டுச் சொன்னா, தமிழ்நாட்டுல எங்க போறது? வடமொழி அர்ச்சனை செய்துடலாம்! என்ன சொல்றீங்க? :-)

அர்ச்சனை என்பது குணப்பெயர்களால் ஆன சொல்மாலை! அவ்வளவு தான்!
தொன்று தொட்டு எல்லாம் இது வருவதில்லை! புதிய ஆலயங்களுக்கு புதிய அர்ச்சனைகள் இன்றும் வடமொழியில் எழுதப்படுகின்றன! அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))

எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!

வடமொழியை மட்டம் தட்டவோ, இல்லை கைத்தட்டல் பெற்றுக் கொள்ளவோ இதை சொல்லவில்லை! அடியேன் சுப்ரபாதப் பதிவுகள் போடுவதும் உங்களுக்குத் தெரியும்!
புருஷ சூக்தம், ஸ்ரீருத்ரம், செளந்தர்ய லஹரி - இதையெல்லாம் மாத்திப் பாடச் சொல்லும் ஏட்டிக்குப் போட்டி ஆசாமி நானில்லை! ஆனால் அர்ச்சனையின் நோக்கத்தை (தாத்பர்யத்தை) உணர்ந்து கொள்ளுங்கள்! அவ்வளவே!


12. ஆலயத்தில் இறைவன் பூசனையோடு மட்டும் நின்று விடாது...
சமூக நல்லிணக்கம், மொழி வளர்ச்சி, இசை-பண்பாடு வளர்ச்சி, அருட் பேருரைகள், Counselling போன்ற நற்பணிகளைத் தன்னார்வக் குழுக்கள் உதவியுடன் செய்யத் திட்டம் தீட்டுங்கள்!
அன்னமாச்சார்யரின் தெலுங்குக் கீர்த்தனைகளை (கிட்டத்தட்ட 2003 பாடல்கள்), TTD digitize செய்து முடித்து விட்டது - ஒலி வடிவம் உட்பட! அடுத்து ஆழ்வார்களின் தமிழ்க் கீர்த்தனைகளைச் செய்யலாமா-ன்னு யோசிக்கறாங்களாம்! வாழ்க! வாழ்க!! திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)

அப்படியே வேகமாகச் சில கூடாதவைகள் (Dont's):

1. கருவறை நுழைவு கூடாது!
Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!

அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!

உங்கள் நோக்கம் தரிசனமா? நுழைவா??
நுழைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தால், விரைவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்! Qualify and then Enter! :-)

2. மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியை எல்லாம் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)

ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?

உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்!
அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - கருவறை உருவை, உருவமாக "மட்டுமே" வீட்டிலும் கொண்டாந்து நம்ம ஏக போக இஷ்டத்துக்கும் நிலைநிறுத்தி விடக் கூடாது! அதான்! தனிப் பதிவில் சொல்கிறேன்!

திருமுகத்தை க்ளோசப் ஷாட் எடுத்துக்குங்க! DOF, Night Vision எல்லாம் கரெக்ட் செட்டிங் வச்சி எடுத்தீங்கனா, அதுவும் கருவறையின் இருட்டில் - பிச்சிக்கிட்டுப் போகாது? :-)
* கருவறையில் அமைதி பெற முயலுங்கள்!
* ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளலாம்!
ஏற்கனவே எடுத்திருந்தால் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! இனிச் செய்யாதீர்கள்! உற்சவரைப் படம் எடுக்க எவரும் தடை சொல்ல மாட்டார்கள்!

கருவறை உங்கள் பிறந்தநாள் பார்ட்டி நடக்கும் இடம் அல்ல!
இதையே நாசாவிலோ, இல்லை Imax Theater-இலோ செய்வீர்களா?
தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே இருக்கும் ஓவியக் கூடத்தில் கூட தொல்பொருள் துறை அனுமதிப்பதில்லை! இவன் யாரு கலையைப் படம் பிடிக்கத் தடை சொல்லுறது-ன்னு பேசறீங்களா?
அவ்ளோ பேசறவங்க, உங்க நினைவுத் திரையில் படம் பிடிச்சிக்கிட்டு வாங்களேன்!

3. கருவறையில் தள்ளுமுள்ளு தேவையில்லை! அதட்டல் பேச்சுக்கள் வேண்டாம்! பக்தர்களை வரிசைப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கு! பணியாளருக்கு பயிற்சியில் சொல்லிக் கொடுங்கள்! பணியாளருக்கு (அர்ச்சகர் உட்பட) நடத்தை விதிகள் (code of conduct) உருவாகட்டும்! வீண் வழக்குகள், விவாதங்கள் நடத்தும் இடம், கருவறை கிடையாது! இதை இரு தரப்பும் உணர வேண்டும்!


இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு!
நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites

2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153;
2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)

ஒரு பொது நிதியே (Common fund) அத்தனைக்கும் போதுமானது! நல்ல முதலீட்டு நிபுணர்கள் ஒன்னை ரெண்டாக்கித் தருவாங்க! வேணும்னா அம்பானியை HRCE நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டு, மரியாதையை எல்லாம் அங்கே செய்யுங்கள்! :-)

அரசே,
உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாகப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!

பக்தர்களே!
மேலே சொன்ன நல்லது பல நடந்துச்சுன்னா, அப்போ உண்டியலில் பணம் போடுங்க! அது வரை போடாதீங்க! நீங்க போடும் பணம் முதலை வாய்க்குத் தான் போகும்!
நீங்க பொருளாக் கொடுங்க! சென்ற பதிவில் சொன்ன காசோலைத் திட்டத்தைக் கடைப்பிடியுங்க! போதும்!!

Coming back to the roots...
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனின் உகப்புக்காக, ஆகா-ஓகோ வசதிகள் செய்து தருகிறேன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, முதலுக்கே மோசம் செய்தால்...

அடுத்த தலைமுறையில் நாத்திகத்தை நன்கு தழைக்கச் செய்த "பெரும் புண்ணியம்" தான் நமக்குக் கிட்டும்! :-)
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர்-எம்பாவாய்!


Results of the Poll:

104 comments:

  1. HI
    VERY GOOD ARTICLE, I READ ONLY PART-2, GOOD ANALYSIS AND COMMENTS, KEEP IT UP, GOOD WORK,... THANKS...
    Regards,
    Ganesh.

    ReplyDelete
  2. பழனி மூலவர் கால் குச்சி குச்சியாக இருப்பது அபிஷேகத்தினால் மட்டும் அல்ல நவபாஷாணம் நல்ல மருந்து என்று சுரண்டி காசுக்கு விற்றதால் வந்த விணை என்பதும் கேள்விப் பட்ட செய்தி.

    திருப்பதி, பழனி, கந்த கோட்டம் முதலிய பல ஆலயங்கள் கலவிச் சாலைகள், மருத்துவமனைகள் நடத்துகின்றன. ஆகவே ஒரேயடியாக உண்டியலில் காசே போடவேண்டாம் என்று கூறுவது ஏற்புடையதாக் இல்லை.

    ReplyDelete
  3. சீர்திருத்தக் கருத்துக்கள்! பொதுவாக மாறுதல் வரவேண்டும் (குறிப்பாக, சாதி சமயமற்ற, ஆனால், தன் பக்தியில் உறுதியான அர்ச்சகர்களைப் பணிக்கு வைத்தல், அர்ச்சகர்களுக்கு சீரான "அரசு கட்டுப்பாடற்ற ஆணைய" சம்பளம், சிறப்புத் தரிசனத் திட்டம் நீக்குதல் போன்றவை பல காலமாய் நான் விரும்புபவை தாம்).

    //அரசே, உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!// இது!!!! இது "முக்கால்" பாயின்டு! ஐயா,

    1a. முக்கியமாக, ஆலய பட்ஜெட்டு வேளாங்கண்ணி கோயிலையும் நாகூர் தர்காவையும் சேர்க்குமா? (நான் ச‌ர்ச்சுக்கும் செல்ப‌வ‌ள், அதைப் ப‌ற்றி 3வ‌து பாயின்டு). அரசு ஏன் ஆலய பட்ஜெட்டு போட வேண்டும்?
    1b. எத்த‌னை நாடுக‌ள், ம‌த‌ச் சார்ப‌ற்ற‌ நாடு என்ற‌ பெய‌ரில் பெரும்பான்மை ம‌த‌த்தினால் அந்த‌ ம‌த‌க் கோயில்க‌ளுக்கு அர்ப்ப‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ ப‌ண‌த்தை நிர்வாக‌த்துக்காக‌ செல‌வ‌ழிக்கும்? இந்து ஆல‌ய‌த்திலிருன்து வ‌ந்த‌ ப‌ண‌ம் இந்து ஆல‌ய‌த்துக்கு எவ்வ‌ள‌வு செல்கிற‌து?

    2. சர்ச்சுக்கு விரும்பிச் செல்வேன், கத்தோலிக்க நண்பர்களிடம் ஆலயத்தில் அமர்வது வேண்டுவது எப்படி (protocol) என்று பயின்றிருக்கிறேன்; என்னைப் பொறுத்தவரை கிறித்தவமும் விசிஷ்டாத்வைதத்துக்குப் பக்கம் தான். ஆனால், பொட்டு வைத்த காரணம் காட்டி, என்னை தேவாலயத்திலிருந்து கிளம்பச் சொல்லியிருக்கிறார்கள் (அது கத்தோலிக்க தேவாலயம் அன்று). என் இஸ்லாமியத் தோழியோடு பிள்ளையார் கோயில் போயிருக்கிறேன்; ஆனால், பொதுவாகவே மற்ற மதத்தினர் உள்ளே வந்தால், எப்ப மெட்டல் டிடக்டர் வைக்க ஆரமிக்கணும்?

    3. இது புரிதலுக்கான‌ கேள்வி: திருவரங்கக் கோயிலில் கர்ப்பக் கிரகம் போகும் வரை மின்விசிறிகள் போன்ற வசதிகள் உண்டு. அது பரவாயில்லியா? (சிவன் கோயிலில் "சக்கரம் இருக்கிறது, அதனால் தான் இங்கே உக்கிரம் ஜாஸ்தி" என்று வேர்த்து வெந்த அர்ச்சகர்களும் உண்டு. எனவே,) ஆகமத்தில் இது அலவுடா?

    நன்றி,
    கெ.பி.

    ReplyDelete
  4. அசத்தலான பதிவு...
    Well said..


    ////////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!

    வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
    ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு/////////

    இதற்கு சமுதாய,திராவிட/ஆரிய வேறுபாடுகள் போன்ற பன்முகப்பட்ட காரணங்கள் இருந்தன,ஆசாரியர்கள் இல்லாத்தது மட்டுமே குறையல்ல..

    எடுத்துக்காட்டாக இறைவனை அர்ச்சிக்க,அவனோடு சம்பாஷிக்க தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
    இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..


    ///////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!//////////

    சொல்லப்போனால் திருமுறைகள் தான் முதலில் பாடப்படவேண்டும் !!!!
    அவை நிகழ்த்திக் காட்டிய வரலாற்று அற்புதங்கள் அநேகம்...


    ///////இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு! நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
    1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites
    2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153; 2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)////////

    இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.
    எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் ஆலயத்துக்குரிய நிலம் சுமார் 40 ஏக்கர் பல திராவிட அரசியல் அடிவருடிகளின் பொறுப்பில் 99 வருடக் குத்தகையில் இருக்கிறது..குத்தகைப் பணம் எவ்வளவு தெரியுமா? நம்ப மாட்டீர்கள்,ஆண்டுக்கு ரூ.870 மட்டும்,அதுவும் பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை !!!!
    இதற்குள் கோவில் நிலங்களை அனுபவப் பாத்தியத்தில் பட்டா வாங்கி தங்கள் சொந்த நிலமாக மாற்றி விட்டார்கள் !!!!!
    எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...
    திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!1

    ReplyDelete
  5. சும்மா நச்சுனு சொன்னிங்க!

    ReplyDelete
  6. //பழனி மூலவர் கால் குச்சி குச்சியாக இருப்பது அபிஷேகத்தினால் மட்டும் அல்ல நவபாஷாணம் நல்ல மருந்து என்று சுரண்டி காசுக்கு விற்றதால் வந்த விணை என்பதும் கேள்விப் பட்ட செய்தி./
    இதை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்!

    ReplyDelete
  7. நீங்கள் சொன்ன பல விஷயங்களில் எனக்கும் உடன்பாடு தான்.. ஆனா, நம்ம ஊர்ல, உருபடியா, ஊழல் இல்லாம, பண ஆசைஇ இல்லாம என்ன இருக்கு? இது மட்டும்மாற..

    If you forgot, இது கலியுகம். காசு தான் கடவுள்.

    ReplyDelete
  8. உயர்ர்ர்ர்ர்ர்ர்ந்து நிற்கிறீர்கள்.
    அருமையான அலசல் கருத்துக்கள்.

    ReplyDelete

  9. இந்தப் பதிவை எழுதப் பெரிதும் உற்சாகப்படுத்தி,
    பல உள்கட்டத் தகவல்களையும் எடுத்துச் சொல்லி உதவிய
    "ஐயா" அவர்களுக்கு அடியேன் மனமார்ந்த நன்றி!

    அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஆதலால் தவிர்க்கிறேன்!
    HRCE இன் உயர் பொறுப்பில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்! சைவ சித்தாந்த நல்லன்பர்!

    தன்னாட்சி நிறுவனமாக ஏன் மாறியே தீர வேண்டும் என்று தன் அனுபவத்தில் இருந்தே, பல நிகழ்ச்சிகளைச் சொல்லி விளக்கினார்!


    இந்தப் பதிவில் ஆங்கில வாடை கொஞ்சம் தூக்கலாகத் தெரிஞ்சா பொறுத்துக்குங்க! Management சொற்கள் எல்லாம் அப்படியே நேரடியா உங்க கிட்ட பேசுவது போலவே, எழுதி விட்டேன்!

    உங்கள் தரப்பு ஆலோசனைகளையும் சொன்னீங்கனா, ஒன்னாத் திரட்டி, online petition ஆகவோ, Idea Bank-ஆகவோ கூட வைக்கலாம்!

    ReplyDelete
  10. //VERY GOOD ARTICLE, I READ ONLY PART-2, GOOD ANALYSIS AND COMMENTS, KEEP IT UP, GOOD WORK,... THANKS...
    Regards,
    Ganesh.//

    நன்றி கணேஷ்!
    உங்கள் ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்க!

    ReplyDelete
  11. //Kailashi said...
    பழனி மூலவர் கால் குச்சி குச்சியாக இருப்பது அபிஷேகத்தினால் மட்டும் அல்ல நவபாஷாணம் நல்ல மருந்து என்று சுரண்டி காசுக்கு விற்றதால் வந்த விணை//

    இது பற்றி அந்தக் கெமிக்கல் என்ஜினீயர் சொல்வதையும் படித்துப் பாருங்கள் கைலாஷி சார்! பழனியைச் சொன்னது ஒரு உதாரணத்துக்குத் தான்! முக்கியமான பிரச்சனை என்னன்னா ஆலய வணிக மயமாக்கம்!

    //திருப்பதி, பழனி, கந்த கோட்டம் முதலிய பல ஆலயங்கள் கலவிச் சாலைகள், மருத்துவமனைகள் நடத்துகின்றன//

    இதுக்கு எல்லாம் உண்டியல் காசை எடுத்து நடத்துவதாக இருந்தால்,
    ஏன் தனியாக நன்கொடைகள் கேட்க வேண்டும்? பெரும் செல்வந்தர்கள் தாளாளர்களா இருந்து மானியங்கள் வேறு கொடுக்கிறார்களே?

    அப்போ, உண்டியலில் நீங்கள் போடும் பணம் எங்கே போகிறது?

    ஆலயத்துக்கும், நலத் திட்டங்களுக்கும் போகட்டும்-னு நினைத்து நீங்கள் காணிக்கை ஆக்கும் பணம், அதுக்குப் போவது 5-10% கூட இருக்காது என்பதை அறிவீர்களா?

    //உண்டியலில் காசே போடவேண்டாம் என்று கூறுவது ஏற்புடையதாக் இல்லை//

    சென்ற பதிவையும் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  12. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    சீர்திருத்தக் கருத்துக்கள்!
    தன் பக்தியில் உறுதியான அர்ச்சகர்களைப் பணிக்கு வைத்தல், அர்ச்சகர்களுக்கு சீரான "அரசு கட்டுப்பாடற்ற ஆணைய" சம்பளம்//

    வாங்க கெக்கேபிக்குணி! நலமா?
    சென்ற பதிவிலும் உங்கள் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்!
    அர்ச்சகர்களுக்கு/ஓதுவார்களுக்குச் சீரான சம்பளம் என்பது காலத்தின் கட்டாயம்! இல்லீன்னா பாருங்க, கொஞ்ச நாளில் ஆலயப் பணியில் ஆள் பற்றாக்குறை கண்கூடாகத் தெரியப் போகிறது!

    //அரசு ஏன் ஆலய பட்ஜெட்டு போட வேண்டும்?//

    அரசு மட்டும் தான் ஆலய பட்ஜெட் போட வேண்டும்-னு சொல்லவில்லை!

    HRCE தன்னாட்சி நிறுவனமாக இருந்தால், அதுவே பட்ஜெட் போட்டுக் கொள்ளலாம்!
    அது வரை அரசு, துறை சார்ந்த வரவு-செலவு அறிக்கையைச் சமர்பிக்க கடமைப்பட்டுள்ளது!

    மின் துறை, இதர துறைகளுக்கு எல்லாம் அரசின் செலவுகள், infrastructure/capital costs உள்ளன!

    ஆனால் அறநிலையத் துறையில் அது போன்ற கட்டுமானச் செலவுகள் எல்லாம் அரசுக்கு இல்லை! ஒன்லி வரவு! :-)
    இன்னொரு பிரிவின் நிதி ஆதாரங்களை எடுத்துக் கொள்ளும் போது, அதற்கு உண்டான கணக்குகளைக் காட்டித் தான் ஆக வேண்டும்! அதான் பட்ஜெட்டில் காட்டச் சொன்னேன்!

    //எத்த‌னை நாடுக‌ள், ம‌த‌ச் சார்ப‌ற்ற‌ நாடு என்ற‌ பெய‌ரில் ... ம‌த‌க் கோயில்க‌ளுக்கு அர்ப்ப‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ ப‌ண‌த்தை நிர்வாக‌த்துக்காக‌ செல‌வ‌ழிக்கும்//

    மிகவும் அரிது! வளர்ந்த நாடுகள் செய்யாது! வளர்ந்து வரும் நாடுகள் அரசியல் நிலைமைக்கேற்பச் செய்யுமா என்று தெரியாது! ஆனால் மக்களாட்சி முறை இருக்கும் நாடுகள், இவ்வாறு செய்யத் தயங்கும்!

    //சர்ச்சுக்கு விரும்பிச் செல்வேன்//

    நானும்! பள்ளியில் 1st Friday Mass-இல் என் பாடல் தான்! :-)

    //ஆனால், பொட்டு வைத்த காரணம் காட்டி, என்னை தேவாலயத்திலிருந்து கிளம்பச் சொல்லியிருக்கிறார்கள் (அது கத்தோலிக்க தேவாலயம் அன்று)//

    வருந்தத்தக்க நிகழ்வு! ஆனால் பொதுப்படையாக எல்லாரும் செய்யமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்!

    //பொதுவாகவே மற்ற மதத்தினர் உள்ளே வந்தால், எப்ப மெட்டல் டிடக்டர் வைக்க ஆரமிக்கணும்?//

    மெட்டல் டிடக்டர்களுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை!

    மாற்று மதத்தார் வராத ஆலயங்களில் கூட பாதுகாப்புக்கு இதை வைத்துள்ளனர்!

    ReplyDelete
  13. //3. இது புரிதலுக்கான‌ கேள்வி: திருவரங்கக் கோயிலில் கர்ப்பக் கிரகம் போகும் வரை மின்விசிறிகள் போன்ற வசதிகள் உண்டு. அது பரவாயில்லியா? எனவே ஆகமத்தில் இது அலவுடா?//

    கெபி,
    அடியேன் ஆகம விற்பன்னன் கிடையாது! அறிந்த வரை சொல்கிறேன்!

    ஆகமத்துக்கு மின்விசிறி-ன்னா என்னன்னு தெரியப் போவதில்லை!
    பழங்காலத்தில் ஆலவட்டக் கைங்கர்யம்-னு ஒன்னு உண்டு! அதாச்சும் விசிறி வீசுதல்! திருக்கச்சி நம்பி, காஞ்சி வரதனுக்கு இதைத் தான் செய்தார்!

    பெரிய துணி விசிறிகளைக் கயிற்றில் அசைக்கும் வழக்கம் கோயிலில் அன்றும் இருந்துள்ளது! ஆனால் கருவறைக்குள் அல்ல! இடைக் கழியில் நிற்கும் பக்தர்களுக்காக! கருவறைக்குள் சாமரம், விசிறி போன்றவை பூசை வேளையில் மட்டும் இறைவனுக்கு உபயோகிப்பார்கள்!

    ஆகமம் சொல்வதை in letter மட்டும் பார்க்காமல்,in spiritஉம் பார்க்க வேண்டும்! கருவறையில் விளக்குச் சுடர்கள் காற்றில் அணையாமல் இருப்பது முக்கியம். அதே போல் தீபம் காட்டும் போதும்!

    மின் விசிறிகளை விட ஏர்-கூலர்களையும், ventilator-களையும் ஆலயத்தில் இப்போதெல்லாம் பயன்படுத்துகிறார்கள்! பக்தர்கள் நிற்கும் இடைக்கழியில் தான்! அதனால் தவறு ஒன்றும் இல்லை!
    அத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது!

    ஆகமம் சொல்வது என்னன்னா, கருவறைக்குள் கண்ணைக் கூசும் வெளிச்சமோ, சுழலும் காற்றோ கூடாது! அதே போல் கருவறைக்குள் ஜன்னல்களும் கூடாது. மூலவர் சிலையை நிறுத்தியுள்ள யந்திரமும் அட்ட பந்தனமும் ஒடுங்கி இருக்கவே இந்தக் கட்டுப்பாடு!
    இதைப் பொதுவா கட்டும் ஸ்தபதியே சொல்லி விடுவார்!

    எதுக்கு குடத்தில் தண்ணி பிடிச்சிக்கிட்டு வரணும்? பேசாம கருவறைக்குள்ளேயே குழாய் கனெக்சன், போர்வெல், கிச்சன் சிங்க்-ன்னு கட்டிக்கிட்டா எப்படி இருக்கும்? :-)

    வசதி செய்கிறேன் பேர்வழி-ன்னு கெளம்பும் மக்கள் இதைத் தான் யோசிச்சி பாக்கணும்! நம் வீடுகளில் கூட சமையலறையில் காற்று வாங்கும் ஃபேன் வைத்துக் கொள்ள மாட்டோம்! பெட் ரூமில் புகை பிடிக்க வசதியா, Exhaust வைத்துக் கொள்ள மாட்டோம்! அதே தான் இங்கும்!

    ReplyDelete
  14. ரொம்ப ஆழ்ந்து அலசி எழுதி இருக்கீங்க ரவி.இதுக்கு எவ்வளவு சிந்திக்கணும்னு எழுதறவங்களுக்கு அதன் கஷ்டம் தெரியும்...நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமானால் கனவு நனவாகலாம்...ஒருவர் இழுத்து ஊர்த் தேர் என்றைக்கு நகர்ந்திருக்கிறது?

    ReplyDelete
  15. //அறிவன் /#11802717200764379909/ said...
    அசத்தலான பதிவு...
    Well said..///

    நன்றி அறிவன்.

    //தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
    இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..//

    இதே பிரச்சனைகள் வைணவத்துக்கும் இருந்துச்சு அறிவன்.
    ஆழ்வார்களும் தமிழில் பாடிவிட்டுப் போய் விட்டார்களே ஓழிய, அதை அவ்வளவு சுலபமா ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை! திருமங்கை, மதுரகவி - இவங்க ரெண்டு பேர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

    பின்னால் வந்த ஆசாரியர்கள் தான் இதை ஒரு பிராஜக்ட் போல் எடுத்து, பல எதிர்ப்புகளையும் மீறிச் செயலாக்கிக் காட்டினார்கள். இராமானுசரைக் கொல்ல பிட்சை உணவில் விஷம் கலந்த கதை எல்லாம் நடந்துள்ளது. அதை எல்லாம் மீறித் தான் தமிழ் வைணவ ஆலயங்களில் கோலோச்சுகிறது.

    சைவத்துக்கு இப்படி project management செய்யக்கூடிய ஆசாரியர்கள் கிடைக்காதது தான் துரதிருஷ்டம்! இராசராசன் பாவம் ஏதோ செய்து பார்த்தான்! ஆனால் இதை அரசாணை மட்டுமே கொண்டு சாதித்து விட முடியாது என்பதற்குச் சிதம்பரம் தான் உதாரணம்!

    அரசாணையும் கடந்து, மாற்றங்கள் உள்ளிருந்து வந்தால் மட்டுமே நிலைக்கும்! உதாரணம்: வைணவ ஆலயங்களில் தமிழ்!

    //http://www.hrce.tn.nic.in/)////////
    இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.//

    கணக்குல காட்டறதே இவ்ளோன்னா, கணக்குல வராதது எவ்ளோ இருக்கும்? :-)

    //எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் //

    ஆகா! தங்கள் தாயாரின் துணிவே துணிவு! வணங்குகிறேன்.
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    //எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...//

    இதுக்கு எல்லாம் அமைப்பு சார்ந்த போராட்டங்கள் தான் செய்யணும். கடன் அட்டை பாக்கியை வசூலிக்க வங்கிகளே கண்ட பேரை அனுப்புகின்றன. கோயில் நில பாக்கியை எல்லாம் கொஞ்சம் மூளையை உபயோகிச்சா வசூல் செய்திடலாம். தன்னாட்சி நிறுவனம் இதை ஈசியா செய்ய முடியும்!

    //திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!//

    ஹூம்...அவர்கள் மட்டும் தானா?
    பக்திமான்களும் தான் செய்யறாங்க! கோயில் வாடகை கொடுக்க மாட்டாங்க! ஆனா நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு தினமும் காலையில் சேவிக்க மட்டும் வருவாங்க! :-)

    ReplyDelete
  16. இறைவன் பெருமைகளை மட்டும் எழுதாமல் இது போல் practical விசயங்களையும் விரிவாக எழுதுவது நன்று.

    கோயில் நிர்வாகங்களை முழுக்கத் தன்னாட்சி ஆக்குவது தான் தீர்வா என்று தெரியவில்லை. இப்பவாவது தட்டிக் கேட்க அரசு என்று ஒன்று உள்ளது. முழுக்கத் தன்னாட்சி என்றானால், கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? தன்னாட்சிக் குழுவில் மக்களும் இருப்பார்கள் என்ற வாதத்துக்கு சொன்னாலும் நம்ம ஊரில் எப்படி எல்லாம் power hijacking செய்கிறார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல. சிதம்பரம் கோயில் தன்னாட்சி இல்லை. அரசு கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால், அதன் வருவாய் எந்த அளவு கோவிலுக்கு செல்கிறது?

    பழனியில் வரும் 40 கோடியும் கோவிலுக்கே போகாமல் அரசு செலவுகளுக்குப் போகிறது என்கிறீர்கள்? சரி, முழுசா அரசுக்குப் போகாமல் கோவிலுக்கு செய்ய வேண்டிய நியாயமான செலவுகளைச் செய்ய வேண்டும் தான். ஆனால், முழு வருமானமும் கோயிலுக்கே போவது அவசியம் தானா? தனியார் கோயில்கள் மக்கள் பணி செய்யாமல் தங்கக் கோயில்கள் கட்டி வீணாக்கும் நடப்புகளும் உண்டு தானே? தன்னாட்சி ஆக்கினால், கோயில் செலவுகள் போக மீதப் பணம் மக்கள் நலனுக்குப் பயன்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சாய்பாபா, மேல் மருவத்தூர் போன்று வலுவான தலைவர்கள் கீழ் செயல்படும் கோயில்கள் இப்படி மக்கள் பணியிலும் செலவிடலாம். ஆனால், வலுவான தலைமையில்லாத கோயில்களில் இருந்து இதை எப்படி எதிர்ப்பார்ப்பது?

    குருவாயூர், சபரிமலை போன்றவை அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. தமிழகக் கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்து இயங்கத் தொடங்கினால், பகுத்தறிவுக்கு ஒவ்வாத இன்னும் பல கட்டுப்பெட்டிச் சட்டங்களைக் கொண்டு வரலாம் என்று அஞ்சுகிறேன்.

    உங்கள் இடுகையில் குறிப்பிடாத இன்னொன்று - பழம்பெரும் கோயில்களில் வரலாற்று முக்கியத்துவம் அறியாமல் கல்வெட்டுக்களை மறைக்கும் வகையிலும், கற்கோயில்களின் அழகைக் குலைக்கும் வகையிலும் சகட்டு மேனிக்கு வண்ணம் பூசி, புதிய கட்டுமானங்களைச் செய்து கெடுக்கிறார்கள். எல்லா கோயில்களையும் தொல்பொருள் துறையின் கீழ் விட முடியாவிட்டாலும் இத்துறை நிபுணர்களின் கண்காணிப்பு, ஏற்பு, கலந்தாய்வு அடிப்படையில் கோயில்கள் தங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    ரொம்ப ஆழ்ந்து அலசி எழுதி இருக்கீங்க ரவி.இதுக்கு எவ்வளவு சிந்திக்கணும்னு எழுதறவங்களுக்கு அதன் கஷ்டம் தெரியும்...//

    இதை எழுத ஊக்கமே அந்த Retd HRCE ஐயா தான் ஷைல்ஸ்! அவருக்குத் தான் நன்றி சொல்லணும்!

    //ஒருவர் இழுத்து ஊர்த் தேர் என்றைக்கு நகர்ந்திருக்கிறது?//

    நச்-னு சொன்னீங்க! இது ஒருவர் இழுக்கும் விஷயம் அல்ல!
    அதனால் தான் இந்த விழிப்புணர்வு வாசகம்! மாற்றத்தை முதல்ல நாம விரும்பணும்! அப்புறம் தான் பொதுக் கருத்து உருவாகும்!
    நாலு பேர் இப்படி யோசிக்கத் துவங்கணும் முதல்ல! கலாம் சொல்வது போல் கனவு காணுங்கள் தான்!

    அடுத்த தலைமுறையிடம் இது போன்ற ஆலய hypocrisy ரொம்ப நாள் எடுபடாது! அப்போ வரும் பாருங்க மாற்றம்!
    அதுக்குத் தயார் ஆவதற்கும் இந்தப் பதிவு ஓரளவுக்கு உதவும்! :-)

    ReplyDelete
  18. உங்கள் பதில்களுக்கு நன்றி!!

    //HRCE தன்னாட்சி நிறுவனமாக இருந்தால், அதுவே பட்ஜெட் போட்டுக் கொள்ளலாம்!//
    என்னைப் பொறுத்த வரை, முதலில் சாதிக் கட்டுப்பாட்டைத் தூக்கி, பின்ன‌ரே
    (1) தன்னாட்சித் துறையாக HRCE இருக்க வேண்டும்.
    (2) அர்ச்சகர்/ஓதுவார்/கோயில் பணியாளர்களுக்கு சீரான கோயில் வருமானம்; அத்துடன், ரொடேஷன் படி (அறநிலையத் துணை ஆணையர் போல்) அர்ச்சகர்களுக்கும் 3 (அ) 5 வருடங்களுக்கு ஒரு முறை கோயிலிலிருந்து கோயில் மாற்றம்.

    சாதிக் க‌ட்டுப்பாட்டைத் தூக்காம‌ல் எது செய்தாலும் சில சாதியின‌ரிட‌மே கோயில்க‌ள் சிக்கி விட‌ ஏதுவாகிவிடும்!

    //நானும்! பள்ளியில் 1st Friday Mass-இல் என் பாடல் தான்! :‍) // நான் இந்து பள்ளியில் படித்து, இந்து சமுதாயத்திலேயே வளர்ந்தவள். எனக்குத் தெரிந்த என் பள்ளியில் கற்ற மற்றும் மற்ற மதத்துப் பாடல்கள் எல்லாம் பாரதி/வானொலிப் பாடல்கள் தாம்.

    "ஆழ்ந்த கருத்துக்கள்" என்று (ஜல்லி?) விட்டு நீங்கள் திரும்பவும் உங்கள் வாதத்துக்கு தேவையில்லாத கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள்:-) மற்ற எந்த கோயிலும் (தேவாலயம், மசூதி/தர்கா) அரசின் அறநிலையத் துறைக்கு இம்மாதிரி நிதி வழங்காத போது, இந்து கோயில்கள் மட்டும் அரசின் சட்டதிட்டங்களுக்குட்பட முடியாது. ம‌த‌ச் சார்ப‌ற்ற‌ அர‌சு ஒரு ம‌த‌த்தின் வ‌ருவாயில் எப்ப‌டி ப‌ட்ஜெட் போடும்? சொல்லிப் பாருங்க‌ள், எந்த (திமுக, பாஜ‌க) அர‌சாலும் கோயில் வ‌ருமான‌ம் இல்லாம‌ல் ப‌ட்ஜெட் போட‌ முடியாது, என்ன‌ இந்து வோட்டு ம‌ட்டும் வேண்டாம்!

    Indira Gandhi offered to Bhutto (father) "either POWs or land" while India was clearly the victor in 1971. Your argument sounds like that!

    Anyway thanks for your great suggestions and fresh thinking!

    ReplyDelete
  19. முதன் முறையா உங்க பதிவை படிச்சு இருக்கேன்( 3 வருசமா இந்தப்பக்கமே வந்தது இல்லே). நல்ல கருத்துதான் எது முன்னுரிமைங்கிறதுல பல மக்களுக்கு பல முன் - உரிமைகள் இருக்கும் போது பல உரிமைகள் பின்னுரிமை ஆகிடறது உண்மைதான். சரி, உண்டியல்/ இன்னபிற இடங்களில் காசு போடலைன்னு வெச்சுக்குவோம். அறநிலைய்த்துறை கதவை சாத்திட்டு போயிரனும். ஏன்னா அங்கேயும் டப்பு சேஸ்தாரு. மீதி அப்புறம்...

    வரேன் ஆணி நிறைய இருக்கு..

    ReplyDelete
  20. //Dreamzz said...
    சும்மா நச்சுனு சொன்னிங்க!//
    :-)

    //நீங்கள் சொன்ன பல விஷயங்களில் எனக்கும் உடன்பாடு தான்..//
    :-)

    //If you forgot, இது கலியுகம். காசு தான் கடவுள்//

    அப்ப காசுக்குக் கோயில் கட்டுவோம்! மூலவர் சிலையை எடுத்துட்டு, உண்டியைக் கருவறைக்குள் வச்சிட்டா கும்பிட மாட்டாங்களா என்ன? :-)

    //ஆனா, நம்ம ஊர்ல, உருபடியா, ஊழல் இல்லாம, பண ஆசைஇ இல்லாம என்ன இருக்கு? இது மட்டும்மாற..//

    நச்-னு கேட்டீங்க தினேஷ்!
    ஊழல் எங்கும் இருக்கு! பணத்தாசை எங்கும் இருக்கு! மருத்துவமனையில் கூட!
    ஆனா ஆப்பரேஷன் தியேட்டர்-குள்ள போயிட்டா, கொஞ்ச நேரம் மத்தது எல்லாம் ஒதுக்கி வச்சி, முடிஞ்ச வரை உயிர் காக்க முயற்சி செய்யறாங்க இல்லையா - ஒரு 90%?

    அது போல் தான் ஆலயமும்!
    வாழ்வில் சில இடங்களையாச்சும் அதன் ஆத்ம நலத்துடன் விட்டு வைக்கணும் - ஒன்னு வீடு! இன்னொன்னு ஆலயம்!


    என்ன தல, சரியா?
    இல்ல தெளீவாக் குழப்பிட்டேனா? :-)

    ReplyDelete
  21. //வடுவூர் குமார் said...
    உயர்ர்ர்ர்ர்ர்ர்ந்து நிற்கிறீர்கள்.//

    வாங்க குமார் அண்ணா
    என் உசரம் வெறும் 5' 11"" :-)

    //அருமையான அலசல் கருத்துக்கள்//

    நன்றி. சிங்கப்பூர் ஆலயங்கள் எப்படி? சிறப்புத் தரிசனம் உண்டா?

    ReplyDelete
  22. மீண்டும் மீண்டும் சிரிப்பு! :-))

    சிரிப்பதை தவிர வேறு எதுவும் தற்சமயம் செய்வதாக உத்தேசம் இல்லை! :-))

    ReplyDelete
  23. //வவ்வால் said...
    மீண்டும் மீண்டும் சிரிப்பு! :-))
    சிரிப்பதை தவிர வேறு எதுவும் தற்சமயம் செய்வதாக உத்தேசம் இல்லை! :-))//

    வாங்க வவ்வால்!
    ஆலயங்களின் நிலைமை சிரிப்பாத் தான் சிரிக்குதுங்க!
    அதான் ஜிராவும் உங்களைக் கேட்டாரு-எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு சொல்லிட்டுச் சிரிச்சா, நாங்களும் சேர்ந்து சிரிப்போம்-ல :-)

    ஆங்...கண்டுபுடிச்சிட்டேன் உங்க சிரிப்பின் மர்மத்தை!
    ஆலயத்துக்கு-இடுக்கண் வருங்கால் நகுக! என்ன சரியா? :-)))))

    ReplyDelete
  24. நமக்கு ஒரு கஷ்டம்னா அந்த முருகன் கிட்ட முறையிடலாம்.

    அந்த பழனி முருகனுக்கே ஒரு கஷ்டம்னா...

    ReplyDelete
  25. என்னதான் சீர்திருத்தம் செய்தாலூம் காலம் காலமாக கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்த கதைதான் நடந்து வருகிறது. திறமை உள்ளவர்கள் பிழைக்கிறார்கள். Survival of Fitness !
    :)))

    ReplyDelete
  26. சிங்கையில் நான் பார்த்த வரை சிறப்புத்தரிசனம் இல்லை.
    ஏன்? ”வேளிநாட்டவர் இதற்கு மேல் அனுமதியில்லை” என்னும் அறிவிப்புப் பலகை கூட காணமுடியாது.
    இங்கு கோவிலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை இங்குள்ள தமிழ்ச் செய்தியில் சொல்லியதை பிறகு போடுகிறேன்,பாருங்கள்.

    ReplyDelete
  27. //”வேளிநாட்டவர் இதற்கு மேல் அனுமதியில்லை” என்னும் அறிவிப்புப் பலகை கூட காணமுடியாது.//

    குமார்,

    செட்டியார்கள் வசமிருக்கும் டோபிகாட் முருகன் கோவிலில்

    "Non-Devoties Not allowed beyond this point" என்ற பலகை பெரிய கதவை தாண்டியவுடனே தெரியுமே.
    அடுத்த முறை சென்றால் பாருங்கள்.

    ReplyDelete
  28. அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
    காலங்காலமாக வந்த நடைமுறைகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    ராமானுஜர் செய்தார் என்றால் அவர் செய்த இன்ன பிற செயல்களை செய்து காட்டிவிட்டு சொன்னால் ஒப்புக்கொள்ளலாமோ என்னவோ?

    பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. நேரமோ மனதோ இல்லை.

    ReplyDelete
  29. //தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!//

    சில கோவில்களில் அர்ச்சகர்கள் பாடு இருதலைக் கொள்ளி எறும்பு என்று சொல்லலாம், அதையும் நேரிலேயே பார்க்க முடியும். :(((((((

    ReplyDelete
  30. //இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா? - கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்? என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!//

    சாதாரண பக்தர்களுக்கு இறைவனின் தரிசனம் கிடைப்பதே குதிரைக் கொம்பு! இதிலே லட்டு இலவசமா? நினைச்சே பார்க்க முடியாதே! :((((((

    ReplyDelete
  31. //முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
    அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!//

    பல வருஷங்களாய் ஊதிக் கொண்டிருக்கும் சங்கு, இன்னும் யார் காதிலேயும் விழவில்லை என்றா நினைக்கிறீர்கள்? வருமானம் தரும் கோவில்களை விட்டு விட்டு விலக நினைக்கும் அரசு முட்டாள் அரசு, தெரிஞ்சுக்குங்க!
    அப்புறம் பிரசாத ஸ்டால்கள், செருப்புக்கள் வைக்கும் ஸ்டால்கள், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை, அன்னதான விநியோக உரிமை என்று வருமானம் தரும் துறைக்கெல்லாம் தேர்ந்தெடுத்த ரத்தத்தின் ரத்தங்களும், கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புக்களும் செய்யும் சேவையைக் குறைத்தா மதிப்பிட முடியும்?

    ReplyDelete
  32. //ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்கள் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! :-)//

    அதெல்லாம் எப்போவோ பட்டாப் போட்டுக் கொடுத்தாச்சே, இப்போ என்ன செய்வீங்க? வேணும்னா எங்க ஊர்ப் பெருமாள் கோவில் வாசலில் வந்து பாருங்க, பெருமாள் தேர்முட்டியில் இரண்டு குடும்பங்கள் வீடு கட்டிக் குடித்தனம், கோவில் வாசலுக்கு நேரே மரங்களை வெட்டி அடுக்கு, விறகு காய வைத்திருக்கிறார்கள். கோவிலில் நுழையும் இடத்தில் ஆடுகள் கட்டும் இடம் என்று பார்க்கவே மிகவும் ரம்மியமாய் இருக்குமே! :((((

    --------------------------------------------------------------------------------

    ReplyDelete
  33. //ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?
    சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
    For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!//


    //5. கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க! Manage the crowd, Dont exploit the crowd!//

    இப்போப் போனவாரம் மதுரை மீனாட்சியைத் தரிசனம் செய்யப் போய்விட்டு உயிரோடு வருவேனா என்றே சந்தேகமா இருந்தது! அவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் பணம் கொடுத்துப் பார்க்கும் வரிசையில் கூட! இப்போ என்ன சொல்லுவீங்க? :P

    ReplyDelete
  34. //Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
    தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "கொட்டாய் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!

    நோய் நாடி-நோய் முதல் நாடி-பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, வராகப் பெருமாள், அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!//

    இது மட்டுமா, இன்னும் பக்தர்களுக்காக எவ்வளவோ வசதிகள் திருமலையில் செய்யப் பட்டிருக்கிறதே?

    ReplyDelete
  35. //கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!//

    கர்நாடகாவையும் சேர்த்துக்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பணம் அதுவும் அதிகப் பணம் கொடுத்துப் பார்க்கும் சிறப்புத் தரிசனம் வி.வி.ஐ.பிக்களுக்குக் கூடக் கிடைக்காது. கூட்டமும் வேகமாய் வரிசையில் நின்றே நகரும். தவிர, கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதிகள், குடி தண்ணீர், சாப்பாடு போன்றவை இலவசமாய் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே மாதிரியாகக் கொடுக்கப் படும். இது எல்லாம் நம்மால் முடியுமா? நாம தலைமைனு சொன்னாலே நடுங்குவோமே? :((((

    ReplyDelete
  36. //இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!//

    சிருங்கேரி சாரதா பீடத்தில் "பர்தா"வோடு பல முஸ்லீம் பெண்கள் சகஜமாய் வந்து போவதைப் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  37. //இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்கான பயிற்சிப் பள்ளிகளும் இருக்கு!//

    இப்போச் சில நாட்களாய்ப் "பொதிகை"த் தொலைக்காட்சியில் "அக்காரக்கனி" ஜீயர் என ஒருவர் வந்து திருப்பாவை பற்றிய சொற்பொழிவு செய்கிறார், பிரமாதம்! காலையில் 6-45-க்கு இந்த நிகழ்ச்சி வரும். தினமும் மார்கழி மாதம் முடியும் வரை!

    ReplyDelete
  38. //அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!//
    இன்று பல கோயில்களிலும் இதன் காரணமாகவே நித்தியப் படி பூஜைகளோ, ஆண்டவனுக்கு ஒரு வேளையாவது விளக்கோ, நைவேத்தியமோ செய்யப் படுவது இல்லை, இது வருமானத்துக்கு என்று நிலங்கள் உள்ள கிராமக் கோயில்களில் கூட நடக்கும் ஒரு விஷயம்!

    ReplyDelete
  39. உங்கள் பதிவை பற்றிய என் கருத்துக்கள்.
    உண்டியலில் பணம் போடுவதை பற்றிய உங்கள் கருத்து : ஆனால் அது முழுவதும் அரசு கஜானாவிற்கு போவதில்லை. அறநிலயத்துறை ஒரு நிர்வாகக்கட்டுப்பாட்டு அமைப்பாகத்தான் செயல்படுகிறது.
    அதற்குள்ள செலவை ஈடு செய்யும் வகையில் கோவில் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசுக்கு செலுத்தப்படுகிறது. பல பெரிய கோவில்களிலிருந்து வருமானம் இல்லாத கோவில்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது .
    எல்லா கோவில்களும் வருடாந்திர வரவு செலவு திட்டத்தை அறநிலைய துறைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெறவேண்டும் என்பது நடைமுறை. மேலும் நிதிப்பற்றாக்குறை உள்ள ஆலயங்களுக்கு திருப்பணி செய்ய அரசு கஜாநாவிலிருந்தும் நிதி வழங்கப்படுகின்றது. நீங்கள் கூறிய திட்டங்கள் இப்போதே உள்ளவைதான், அதை ஒழுங்காக அமல்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
    நிதிப்பற்றாக்குறை உள்ள ஆலயங்களில் பூஜைக்கும், அர்ச்சகர் மற்றும் ஓதுவார் ஊதியத்திற்க்கும் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
    தமிழ் அர்ச்சனை : உங்கள் வாதம் மிகவும் சரி. இறைவனை வழிபடும்போது மொழி புரிய வேண்டும். நான் சுந்தரகாண்டம் கூட கம்பராமாயணத்தில் இருந்துதான் படிப்பேன். ஆனால் கருவறையில் அர்ச்சகர் சொல்வது பெரும்பாலும் நம் செவியில் கேட்பதில்லை, கூட்டம் உள்ள ஆலயங்களில் அர்ச்சகர்கள் மொத்தமாக தட்டுக்களை வாங்கிச் செல்கிறார்கள். தனித்தனியாக சங்கல்பம் செய்வதில்லை, அர்ச்சனை நாமங்களை கூறிக்கொண்டே தேங்காய் உடைப்பது போன்ற காரியங்களை செய்துவிட்டு முடிவில் நாலு பூக்களை விக்ரகத்தில் போடுகிறார்கள். இதற்க்கு பக்தர்களும் காரணம் , எல்லாருக்கும் அவசரம். இதை முறைப்படுத்துவது எப்படி? இதில் அர்ச்சனை முடிந்து பிரசாதம் கொடுக்கும் டெக்னிக் மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று , அர்ச்சனை செய்து நமக்கு கற்பூரம் ஒற்றிக்கொள்ள கொடுப்பவர் ஒருவர், விபூதி பிரசாதம் கொடுப்பவர் ஒருவர், நமது தேங்காய் தட்டைக் கொடுப்பவர் வேறொருவர் இந்த மூவரும் தட்டில் பணம் எதிர்பார்க்கிறார்கள் போடாவிட்டால் இறை தரிசனம் செய்த இடத்தில் இவர்கள் சாபமும் நமக்கு.
    நுழைவுச்சீட்டு : நான் மேற்கூறியபடி அர்ச்சனைக்கே நிற்க பொறுமை இல்லாத பக்தர்கள் நேரம் குறைக்கும் எந்த வழிகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதில் நம் ஊர் கோவில் என்றால் வரிசையில் நிற்கலாம், நாம் தல யாத்திரை செய்யும் போது நுழைவுச்சீட்டு எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
    மற்றபடி உங்கள் கருத்துக்கள் எல்லாம் உண்மையே. சாதி மத வேறுபாடுகள் இல்லாத, அமைதியான ஆலய தரிசனம் விரைவில் நடக்கும் என்றே நம்புவோம்.
    ஷோபா
    Sorry my comment looks bigger than ur post. You can moderate it.

    ReplyDelete
  40. // தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!//
    இந்த விஷயத்தில் உங்களுடன் முரண்படுகிறேன். :D ஏனெனில் பல பெரிய ஆலயங்களில் கூட முதலில் திருமுறை ஓதிய பின்னரே கால பூஜைகளும், வேதம் ஓதுதலும் நடைபெற்று வருவதும், முதலில் ஓதுவார்களுக்கு தீப ஆராதனை காட்டி மரியாதை செய்த பின்னரே மற்றவருக்குக் காட்டுவதும் நடை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். திரு வெங்கட்ராம் திவாகரும் சிவாச்சாரியார்களும் சேர்ந்து தேவாரம் பாடுவதாய் என்னோட சிதம்பர ரகசியம் பதிவில் சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  41. //வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
    ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!//
    இதையும் மறுக்கிறேன், நம் கோவில்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. எனக்குத் தெரிந்து என் அப்பாவே சொல்லி இருக்கின்றார், மதுரை மீனாட்சி கோயிலில் தமிழில் தான் அர்ச்சனை செய்வார்கள் என்று. மற்றும் சில சிவாலயங்களிலும் காணலாம். தவிர, நாயன்மார்களுக்குப் பின்னர் யாரும் வரவில்லை என்பதும் சரி இல்லை. இது பற்றித் தெளிவாய் எழுத வேண்டும் என்பதால் தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  42. //அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))
    எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!//

    ஆமாம், இந்த மாதிரி இடத்துக்கு ஏற்பத் தான் சொல்ல வேண்டுமே தவிர, அங்கே போய் "பாரத வர்ஷே, பரத கண்டே, தக்ஷிணே பார்ஸ்வே" என்று சொல்ல முடியுமா? அர்த்தமே மாறிடுமே, இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே!

    ReplyDelete
  43. //திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)//

    எல்லாக் கோயில்களையுமே அவங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துடலாமே, எப்படி வசதி? :))))

    ஆனால் இது மட்டும் நடந்தால் என்ற அருமையான கற்பனையையும் தவிர்க்க முடியலை! :(

    ReplyDelete
  44. கருவறை நுழைவு கூடாது! Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
    சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!

    //அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று, இரைச்சல் இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!//

    ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  45. //மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
    படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியைக் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)

    ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?
    உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்! அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - தனிப் பதிவில் சொல்கிறேன்!//

    ரொம்பச் சரியான வார்த்தைகள், அப்பாடி, கை வலிக்குது, இணையத்துக்கு வேறே போட்டிக்கு ஆள் பின்னாலேயே நிக்குது, அப்புறமா வரேன், வர்ட்டா?????????

    ReplyDelete
  46. இன்னும் பின்னூட்டங்கள் எல்லாம் வேறே படிக்கலை! :(((

    ReplyDelete
  47. //திவா said...
    அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
    காலங்காலமாக வந்த நடைமுறைகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    //

    காலம் காலமாக மாமா போய் சேர்ந்துட்டார் என்றால் மாமிகளுக்கு மொட்டை அடிச்சி காவி புடவையை கொடுத்து மூளையில் உட்காரவச்சிடுவா. இப்போது அதெல்லாம் நடக்கிறதா ? ஜோராக இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறாளே. ஆம்படையான் சரியில்லை என்றால் ஈசியாக டைவர்ஸ் பண்ணிடுறாளே. இதைப்பற்றி எல்லாம் என்ன சொல்றேள்

    ReplyDelete
  48. @ ரங்கபாஷ்யம் //காலம் காலமாக மாமா போய் சேர்ந்துட்டார் ..... இதைப்பற்றி எல்லாம் என்ன சொல்றேள்//

    என்னைப்பொறுத்த வரை இவையும் தவறுகள்தான். ஒரு குடும்பத்தை பாதிக்கக்கூடிய தவறுகள். இதைப்பற்றி மேலும் விவாதிக்க நான் தயாராக இல்லை. இந்த இழையின் நோக்கம் மாறிவிடும்.

    ReplyDelete
  49. கீதாம்மா...
    என்னது இது?
    அடிச்சி விளையாடி இருக்கீங்க? பேசாம ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு உங்கள அனுப்பலாம் போல இருக்கே! ரிக்கி பான்டிங் பயந்து போயி, அடக்க ஒடுக்கமா ஆயிடுவாரு! என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete
  50. krs,

    நீங்க சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லி முடித்ததும்,இன்னும் இதன் தொடர்ச்சி இருக்கிறதா?(பின்னூட்ட பெரும்புள்ளிகள் கருத்தும் படித்ததும்) நான் ஏன் சிரித்தேன் என்பதை சொல்கிறேன், வவ்வால் சிரித்தால் பிரளயம் தான்னு தெரியாதா... :-))

    கொஞ்சம் பொறுங்கள்!

    ReplyDelete
  51. //திவா said...
    @ ரங்கபாஷ்யம் //காலம் காலமாக மாமா போய் சேர்ந்துட்டார் ..... இதைப்பற்றி எல்லாம் என்ன சொல்றேள்//

    என்னைப்பொறுத்த வரை இவையும் தவறுகள்தான். ஒரு குடும்பத்தை பாதிக்கக்கூடிய தவறுகள். இதைப்பற்றி மேலும் விவாதிக்க நான் தயாராக இல்லை. இந்த இழையின் நோக்கம் மாறிவிடும்.
    //

    இழையின் நோக்கம் இஷ்டம் இல்லைன்னு முன்னமே சொல்லிட்டேளே, இங்கே கேட்பது நீங்கள் சொன்னதை வச்சுத்தான்.

    ப்ராமனா மாறிண்டு வர்றான்னு சொல்லிண்டு வர்றோம், பழசை கட்டிண்டு ஞாயப்படுத்தி கெடுத்துடாதேள்.

    காலம் காலமாக மாமாக்கள் குடுமி வச்சிருந்தா, பஞ்சகச்சம் கட்டி இருந்தா, உச்சவிருத்தியில் சாப்பிட்டா இப்போ குடுமியை அறுத்துப் போட்டுண்டு சாப்ட்வேர் வேலைக்கு அமெரிக்கா போய்டா, எதுவும் மாறவேண்டாம்னு அவாளோ, நீங்களோ நினெச்சேளா ? எல்லாத்தையும் மாத்திட்டு ஆண்டவன் சன்னிதியில் மாத்ரம் எதுவும் மாறப்படாதுன்னு சொன்னால் நன்னா இருக்கா ?

    ReplyDelete
  52. பதிவில் சிந்தனையைத் தூண்டும் பலப்பல புதிய சிந்தனைகள். படித்த உடன் ஏற்க மறுக்கும் சிந்தனைகள். ஆழ்ந்து படித்து - மேன் மேலும் சிந்தித்தால் ஏன் கூடாது என்று கருத்துக்களுடன் உடன்பட வைக்கும் சிந்தனைகள்.

    ஐய்ம்பதற்கும் மேற்பட்ட மறுமொழிகள். பல்வேறு கோணங்களில் -பல்வேறு கருத்துகள்- ஆலோசனைகள் - அருமை.

    கொளுத்திப் போட்டாச்சு - நல்லதே நடக்க வாழ்த்துகள்.

    அடுத்த தலைமுறையில் நடந்து விடுமா ?

    ReplyDelete
  53. //ரங்கபாஷ்யம் said...
    ஆண்டவன் சன்னிதியில் மாத்ரம் எதுவும் மாறப்படாதுன்னு சொன்னால் நன்னா இருக்கா ?//

    ரங்கபாஷ்யம்
    வாங்க! உங்க கருத்துக்களுக்கு நன்றி! ஆனால் இயல்பான தமிழில் உரையாடலாமே?
    மேலும் இது ஆலயத் திருத்தங்கள் பற்றியதான பதிவு! எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பழக்க வழக்கங்களைப் பற்றிய வாதங்கள் இங்கு வேண்டாமே! ப்ளீஸ்!

    திவா
    வணக்கம்! இராமானுசர் செய்த மாற்றங்களை உணர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    மாற்றுக் கருத்துக்கள் இருக்கத் தான் செய்யும்! அனைத்தையும் இன்றே உரையாட/விவாதிக்க வேண்டும் என்பதில்லை! சிந்தனைக்குத் தூண்டுகோல் தான் இது! பிறகும் பேசலாம்!

    நாம் பதிவின் நோக்கத்தில் இருந்து விலக வேண்டாம்!
    உங்கள் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  54. @ krs
    // நாம் பதிவின் நோக்கத்தில் இருந்து விலக வேண்டாம்!
    உங்கள் இருவருக்கும் நன்றி! //

    நான் விலகமாட்டேன். திரு ரங்கபாஷ்யம் தேவையானால் என்னுடன் தனியாக அஞ்சலில் உரையாடலாம். அஞ்சல் முகவரி தேவையானால் http://nallaseithi.blogspot.com இல் ஏதேனும் ஒரு பதிவுக்கு பின்னூட்டமாய் தன் முகவரியை தரட்டும்.

    எல்லா சிவன் கோவிலிலும் இருப்பது ஒரே சிவன்தானே! அது போல மற்றவையும்? அப்படியானால் ஏன் ஊர் ஊராக கோவில்கள்? மக்கள் ஏன் தம் ஊர் கோவிலை விட்டு மற்ற இடங்களுக்கும் சென்று தரிசிக்கிறார்கள்? இவற்றை யோசித்தால் ஏன் நான் பழைய நடைமுறைகளை மாற்றக்கூடாது என்கிறேன் என்பது விளங்கலாமோ என்னவோ!

    ReplyDelete
  55. //ஆகமம் சொல்வது என்னன்னா, கருவறைக்குள் கண்ணைக் கூசும் வெளிச்சமோ, சுழலும் காற்றோ கூடாது! அதே போல் கருவறைக்குள் ஜன்னல்களும் கூடாது. மூலவர் சிலையை நிறுத்தியுள்ள யந்திரமும் அட்ட பந்தனமும் ஒடுங்கி இருக்கவே இந்தக் கட்டுப்பாடு!
    இதைப் பொதுவா கட்டும் ஸ்தபதியே சொல்லி விடுவார்!//

    மதுரையில் திருப்பரங்குன்றம் கோவிலிலும், சென்னை, தாமரைப்பாக்கம், சிவானந்த ஆசிரமம், சிவன் கோயிலிலும் இம்முறையில் தான் கொஞ்சமும் மின் விளக்குகளின் ஒளியே இல்லாமல் தரிசனம் செய்ய முடியும். அந்த அழகே அழகு தான், இன்னும் நிறையவே எழுத வேண்டும் தான், ஆனால் நான் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடாது என்பதால், ஒரு தனிப்பதிவாகவே போட்டுக் கொ"ல்"கிறேன், எல்லாரையும்! :)))))) இந்த "ல்" எ.பி. இல்லை! :D

    ReplyDelete
  56. .//இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..//

    @அறிவன், திடமாக மறுக்கிறேன். :((((

    ReplyDelete
  57. //சொல்லப்போனால் திருமுறைகள் தான் முதலில் பாடப்படவேண்டும் !!!!
    அவை நிகழ்த்திக் காட்டிய வரலாற்று அற்புதங்கள் அநேகம்...//

    சென்ற வருடம் சிதம்பரம் கோயில் தெற்கு கோபுரக் கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் யாகத்துக்குச் சென்ற போது, யாகம் ஆரம்பிக்கும் முன்னர் திருமுறைகள் பாடப்பட்ட பின்னரே ஆரம்பிக்கப் பட்டது. படம் எடுப்பது தடை செய்யப் பட்டதால் எடுக்க முடியவில்லை! :((((

    ReplyDelete
  58. //கீதாம்மா...
    என்னது இது?
    அடிச்சி விளையாடி இருக்கீங்க? பேசாம ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு உங்கள அனுப்பலாம் போல இருக்கே! ரிக்கி பான்டிங் பயந்து போயி, அடக்க ஒடுக்கமா ஆயிடுவாரு! என்ன சொல்றீங்க? :-)//

    ஹிஹிஹி, கண்ணன், அதான் அகில உலகக் கிரிக்கெட் வாரியமே நம்மளைப் பார்த்து பயந்துடுச்சே? :P

    திரும்பிப் போனாலும் மனசு என்னமோ இங்கேயே வருது, கொஞ்சம் கட்டுப் படுத்திக்கணும், வரேன்! அப்புறமா, வவ்வால் என்ன சொல்லப் போறார், இல்லை, இல்லை, சிரிக்கப் போறார்னு வேறே பார்க்கணும்! :))))))

    ReplyDelete
  59. நல்ல படைப்பு நானும் முயற்சி செய்கிறேன் சிறப்பு தரிசன வாயிலை தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  60. aஅலசி ஆராய்ந்து போட்டபதிவு.சமீபத்தில் காஞ்சீபுரம் போனேன் Qவில் நின்றுதான் தரிசனம் செய்தேன்

    ReplyDelete
  61. //krs,
    வவ்வால் சிரித்தால் பிரளயம் தான்னு தெரியாதா... :-))//

    ஆகா..இது வேறயா!
    வவ்வால் சிரிப்புக்கு ஆவலுடன் வெயிட்டீங்! நமக்குப் பிரளயம் ரொம்ப பிடிக்குங்க! பேப்பர் போட் செஞ்சி விடலாம்! :-))

    மக்களே!
    அலுவலகத்தில் ரெண்டு நாளா ஆணி ஜாஸ்தி! இன்னிக்கி எல்லாருக்கும் பதில் போட்டுடறேன்!

    ReplyDelete
  62. // Anonymous said...
    இறைவன் பெருமைகளை மட்டும் எழுதாமல் இது போல் practical விசயங்களையும் விரிவாக எழுதுவது நன்று.//

    நன்றி!
    ஆனா, இறைவன் பெருமைகளும் practical தாங்க! :-))

    //இப்பவாவது தட்டிக் கேட்க அரசு என்று ஒன்று உள்ளது. முழுக்கத் தன்னாட்சி என்றானால், கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்?//

    கொள்கை முடிவுகள் மட்டும் அரசு எடுக்கலாம்-னு சொல்லி இருக்கேனே! நீதிமன்றங்கள் இருக்கின்றனவே!

    //தன்னாட்சிக் குழுவில் மக்களும் இருப்பார்கள் என்ற வாதத்துக்கு சொன்னாலும் நம்ம ஊரில் எப்படி எல்லாம் power hijacking செய்கிறார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல//

    தன்னாட்சி நிறுவனங்கள் இதையும் மீறி நல்ல முறையில் செயல்பட்டுத் தான் வருகின்றன! இந்த அமைப்பின் அங்கத்தினர் வெவ்வேறு துறைகளில் இருக்கும் முன்னோடிகள்-ன்னா பெருசா பவர் ஹைஜாக்கிங் செய்ய முடியாது! அரசியலார் இந்த அமைப்பில் கூடவே கூடாதுன்னும் சொல்லிட்டேனே!

    //சிதம்பரம் கோயில் தன்னாட்சி இல்லை. அரசு கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால், அதன் வருவாய் எந்த அளவு கோவிலுக்கு செல்கிறது?//

    சிதம்பரம் கோவில் வருவாய் எவ்ளோன்னு தெரியாதுங்க! அதன் நிர்வாகம் தீட்சிதர்களிடம்! அந்த நிர்வாகத்தில் சமூகத்தின் அனைத்துச் சார்பு பிரதிநிதிகள் இல்லை!

    //பழனியில் வரும் 40 கோடியும் கோவிலுக்கே போகாமல் அரசு செலவுகளுக்குப் போகிறது என்கிறீர்கள்?//

    இல்லையே! 40இல் சிறிதளவே ஆலயப் பணிகளுக்குச் செலவழிக்கப்படுகிறதுன்னு சொன்னேன்!

    //ஆனால், முழு வருமானமும் கோயிலுக்கே போவது அவசியம் தானா? தனியார் கோயில்கள் மக்கள் பணி செய்யாமல் தங்கக் கோயில்கள் கட்டி வீணாக்கும் நடப்புகளும் உண்டு தானே?//

    கட்சிகள் மாநாட்டில் உண்டியல் குலுக்கி வசூல் பண்ணறாஙகளே! அந்த அத்தனை வருமானமும் கட்சிக்கே போவது அவசியம் தானா? தங்க வாள், வீர வாள் ன்னு மக்களுக்குத் தேவையில்லாத வீண் நடப்புகளும் உண்டு தானே? :-)

    ஆலய உண்டியலில் பணம் போடும் பக்தர்கள், அரசுக்குப் போகட்டும் என்றா போடுகிறார்கள்?
    அப்படின்னா அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அரசே உண்டியல் வைத்து விடலாமே? எதுக்குக் கோவிலில் வைக்கணும்?

    //தன்னாட்சி ஆக்கினால், கோயில் செலவுகள் போக மீதப் பணம் மக்கள் நலனுக்குப் பயன்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சாய்பாபா, மேல் மருவத்தூர் போன்று வலுவான தலைவர்கள் கீழ் செயல்படும் கோயில்கள் இப்படி மக்கள் பணியிலும் செலவிடலாம்.//

    தன்னாட்சி என்பது ஒரு கோவிலுக்கு மட்டும் இல்லீங்க! எல்லாஹ் கோவிலுக்கும் உண்டான துறை! வலுவானதா தான் இருக்கும்! Top Down Management Approach தான்!

    //பகுத்தறிவுக்கு ஒவ்வாத இன்னும் பல கட்டுப்பெட்டிச் சட்டங்களைக் கொண்டு வரலாம் என்று அஞ்சுகிறேன்//

    வீண் பயம்! தன்னாட்சியிலும் அரசு கொள்கை முடிவுகள் எடுக்க முடியும்!

    //பழம்பெரும் கோயில்களில் வரலாற்று முக்கியத்துவம் அறியாமல் கல்வெட்டுக்களை மறைக்கும் வகையிலும், கற்கோயில்களின் அழகைக் குலைக்கும் வகையிலும் சகட்டு மேனிக்கு வண்ணம் பூசி, புதிய கட்டுமானங்களைச் செய்து கெடுக்கிறார்கள்.//

    அருமையான யோசனை! மிக்க நன்றி! இதையும் பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்! தொல்லியல் துறைக் கட்டுப்பாடுகள் பழம் பெரும் ஆலயங்களுக்கு மிகவும் தேவை!

    ReplyDelete
  63. //ILA(a)இளா said...
    முதன் முறையா உங்க பதிவை படிச்சு இருக்கேன்//

    வடிகட்டின பொய்! :-)
    விவசாயி பொய் பேசலாமா?
    அலோ...வவாச-ல எழுதின போது, பின்னூட்டத்தல பிரிச்சி மேய்ஞ்சீங்களே! மறந்து போச்சா?

    //( 3 வருசமா இந்தப்பக்கமே வந்தது இல்லே)//

    மீண்டும் பொய்! ;-)
    நான் பதிவு எழுதத் தொடங்கியே ஒரு வருஷம் தான் ஆவுது தல!

    //சரி, உண்டியல்/ இன்னபிற இடங்களில் காசு போடலைன்னு வெச்சுக்குவோம். அறநிலைய்த்துறை கதவை சாத்திட்டு போயிரனும்//

    போகட்டும்! யாருக்கு வேணும் அறநிலையத் துறை? அரசுக்குத் தானே வேணும்! :-)

    //வரேன் ஆணி நிறைய இருக்கு..//

    இங்கேயும் அதே தான்! அதான் பதில்கள் லேட்டு!

    ReplyDelete
  64. //மதுரையம்பதி said...
    உள்ளேனய்யா...//

    சரிங்க ஐயா! :-)

    //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    முதலில் சாதிக் கட்டுப்பாட்டைத் தூக்கி, பின்ன‌ரே
    (1) தன்னாட்சித் துறையாக HRCE இருக்க வேண்டும்.//

    சாதி வழி அர்ச்சகர் கட்டுப்பாட்டைத் தானே சொல்லுறீங்க?
    வேறு என்ன சாதிக் கட்டுப்பாடுகள் இருக்கு? எதுவாயினும் அவையும் நீங்கத் தான் வேணும்!

    ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் ஆலயம் சிக்கக் கூடாது. தன்னாட்சி HRCE இது குறித்து விரிவான சட்ட திட்டங்கள் போடனும்! அதான் ஒவ்வொரு ஆலயத்துக்கும் சமூகத்தில் இருந்து பல தரப்பட்ட மக்களின் கண்காணிப்புக் குழுவும் சொல்லி இருந்தேன்!

    //அர்ச்சகர்களுக்கும் 3 (அ) 5 வருடங்களுக்கு ஒரு முறை கோயிலிலிருந்து கோயில் மாற்றம்//

    இதுல கொஞ்சம் சிக்கல் நிறைய வரும் கெபி! ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஆகம வேறுபாடுகள் மாறும். சரியான பயிற்சி கொடுத்த பின்னர் தான் மாற்றம் செய்யணும். on the job training-ன்னு எல்லாம் சொல்லி, பக்தர்கள் தலையில் கை வைத்து விடக் கூடாது!
    மேலும் சில அர்ச்சகர்கள் அந்தத் திவ்யதேச எம்பெருமானைப் பிரியவே மாட்டார்கள்! இமோஷனல் விசயத்தையும் மேனேஜ் செய்தாகனும்!

    //"ஆழ்ந்த கருத்துக்கள்" என்று (ஜல்லி?) விட்டு//

    ஹிஹி! குறும்பு கெபி உங்களுக்கு!

    //நீங்கள் திரும்பவும் உங்கள் வாதத்துக்கு தேவையில்லாத கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள்:-)//

    கண்டு கொள்ளாமல் செல்லலை! மாற்று மத ஒப்பீடுகள், பதிவைத் திசை திருப்பும் ஆற்றல் படைத்தவை! அதான்!
    ஆனால் அரசு ஆலயப் பணத்தில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டேனே! இதையே சர்ச்சிலும் ,மசூதியிலும் செய்ய முடியுமா உன்னால்-ன்னு கேட்கலை! அவ்வளவு தான்!
    எதுவாகினும் சமயம் சார்ந்த நிறுவனங்களின் வருவாயில் அரசு கண்காணிக்கலாமே தவிர கையாடக் கூடாது!

    //Indira Gandhi offered to Bhutto (father) "either POWs or land" while India was clearly the victor in 1971. Your argument sounds like that!//

    I need the land :-)

    //Anyway thanks for your great suggestions and fresh thinking!//

    அருமையான கலந்துரையாடல் கெபி! மிகவும் நன்றி!

    ReplyDelete
  65. //அரை பிளேடு said...
    நமக்கு ஒரு கஷ்டம்னா அந்த முருகன் கிட்ட முறையிடலாம்.
    அந்த பழனி முருகனுக்கே ஒரு கஷ்டம்னா...//

    அதான் உங்க கிட்ட முறையிடறான்! :-)

    திருப்பதியில் இருப்பது நானா, இல்லை என் தாய்மாமனா என்பது எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் தலைவா! மொதல்ல பழனியில் இருப்பது நான் தான் என்பதே கேள்விக்குறியா போயிடப் போவுது! அத மொதல்ல காப்பாத்துங்க-ன்னு சொல்லுறான்! :-)

    ReplyDelete
  66. //கோவி.கண்ணன் said...
    என்னதான் சீர்திருத்தம் செய்தாலூம் காலம் காலமாக கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்த கதைதான் நடந்து வருகிறது. திறமை உள்ளவர்கள் பிழைக்கிறார்கள்//

    இப்படிப் பெரியார் சொல்லி இருந்தார்னா அதோ கதி தான்! :-)

    திறமை உள்ளவங்க தான் பொழைக்கறாங்க, கோவி அண்ணா; அதான் பக்தர்களைத் திறமை உள்ளவங்களா மாறச் சொல்லுறேன்! :-)

    //Survival of Fitness//
    Survival of Fittest?
    All devotees should become fit!

    ReplyDelete
  67. //வடுவூர் குமார் said...
    சிங்கையில் நான் பார்த்த வரை சிறப்புத்தரிசனம் இல்லை//

    அருமை!
    கேரளாவில், கர்நாடகாவில் கூட அதிகம் இல்லை! தமிழகம், ஆந்திராவில் தான் இந்த இழி நிலை!
    :-(

    //இங்கு கோவிலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை இங்குள்ள தமிழ்ச் செய்தியில் சொல்லியதை பிறகு போடுகிறேன்,பாருங்கள்//

    பார்த்தேன் குமாரண்ணா!
    மக்களே....இதோ சுட்டி!
    http://madavillagam.blogspot.com/2008/01/blog-post_08.html

    // கோவி.கண்ணன் said...
    //”வேளிநாட்டவர் இதற்கு மேல் அனுமதியில்லை” என்னும் அறிவிப்புப் பலகை கூட காணமுடியாது.//

    குமார்,
    செட்டியார்கள் வசமிருக்கும் டோபிகாட் முருகன் கோவிலில்
    "Non-Devoties Not allowed beyond this point" என்ற பலகை பெரிய கதவை தாண்டியவுடனே தெரியுமே.
    அடுத்த முறை சென்றால் பாருங்கள்//

    கோவியா? கொக்கா?
    கரீட்டாக் கண்டுபுடிச்சிடுவாரே! :-)
    ஆனா Non Devotees ன்னு சொல்லித் தப்பிச்சிட்டாங்க போல! Non Hindus-ன்னு சொல்லாம!
    அப்படின்னா பக்தரான ஒரு முகம்மதியர் வரலாம்! பக்தியில்லாத ஒரு இந்து வரக்கூடாது! அதுவுஞ் சரி தான்! :-))

    ReplyDelete
  68. //திவா said...
    ராமானுஜர் செய்தார் என்றால் அவர் செய்த இன்ன பிற செயல்களை செய்து காட்டிவிட்டு சொன்னால் ஒப்புக்கொள்ளலாமோ என்னவோ?//

    திவா, இராமானுசர் மொதல்ல பண்ண வேலையே ஒரு சாராருக்கு மட்டும் இருந்த ஆகமத்தை இன்னொரு ஆகமத்துக்கு மாத்தினது தான்! அதுக்கு அப்புறம் தான் மற்ற விரிவுரைகள், பாஷ்யம் எல்லாம் பண்ணாரு! :-)

    தமிழ்ப் பாசுரங்களை நடைமுறைப்படுத்த ஒரு திட்டம் போட்டாரு! ஆலயச் சாவியைத் தன் கைக்குள் கொண்டு வர, திருவரங்கத்து அமுதனார் என்னும் கோயில் அர்ச்சகரிடம் என்னென்ன உபாயம் கையாண்டார்-னு சுவையான கதை இருக்கு! அப்புறம் தனிப் பதிவா போடுறேன்! நல்ல சுவாரஸ்யமான கதை அது!

    ReplyDelete
  69. ஓவர் டு கீதாம்மா!
    ய்ப்பா, இத்தனை பந்து வீசி இருக்காங்க! நான் என்ன விக்கட் கீப்பர் தோனியா? :-))

    //சில கோவில்களில் அர்ச்சகர்கள் பாடு இருதலைக் கொள்ளி எறும்பு என்று சொல்லலாம்//

    ஆமாம் கீதாம்மா! அவங்க பவர்லெஸ்! ஒன்னும் பண்ண முடியாது!

    //சாதாரண பக்தர்களுக்கு இறைவனின் தரிசனம் கிடைப்பதே குதிரைக் கொம்பு! இதிலே லட்டு இலவசமா?//

    பக்தர்களுக்கு வசதி செஞ்சு தரத் தான் பணக்காரங்களைக் கவனிக்கிறோம்-னு சொல்லுறாங்களே! அதுக்குச் சொன்னேன்!

    //பல வருஷங்களாய் ஊதிக் கொண்டிருக்கும் சங்கு, இன்னும் யார் காதிலேயும் விழவில்லை என்றா நினைக்கிறீர்கள்?//

    அதை யார் ஊதறாங்க-ன்னு இருக்கு கீதாம்மா!
    வாரியார் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார், ஜீயர் என்று எல்லாரும் சேர்ந்து முன்னரே ஊதி இருக்கணும்! அரசு பயப்படும்! ஏனோ நடைபெற வில்லை!

    //வருமானம் தரும் கோவில்களை விட்டு விட்டு விலக நினைக்கும் அரசு முட்டாள் அரசு, தெரிஞ்சுக்குங்க!//

    மக்கள் முட்டாளாக ரொம்ப நாள் இருந்தது கிடையாது கீதாம்மா! அட்லீஸ்ட் ஒரு தலைமுறை மாறும் போது, விதிகளும் மாறும்! அதுக்குத் தான் இந்தப் பதிவு!

    //அப்புறம் பிரசாத ஸ்டால்கள், செருப்புக்கள் வைக்கும் ஸ்டால்கள், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை, அன்னதான விநியோக உரிமை என்று வருமானம் தரும் துறைக்கெல்லாம் தேர்ந்தெடுத்த ரத்தத்தின் ரத்தங்களும், கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புக்களும் செய்யும் சேவையைக் குறைத்தா மதிப்பிட முடியும்?//

    :-)
    ஆந்திராவில் TTDஇலும் இது போன்ற அரசியல் உண்டு தான்! ஆனா இப்படி எங்க திரும்பினாலும் இருக்காது!

    ReplyDelete
  70. //அதெல்லாம் எப்போவோ பட்டாப் போட்டுக் கொடுத்தாச்சே, இப்போ என்ன செய்வீங்க?//

    போனதைச் சட்டப்படி மீட்க எல்லாம் நேரம் ஆகும்!
    இருப்பதையாச்சும் கெட்டியாப் பிடிச்சிக்குறது தான் புத்திசாலித்தனம்!
    கடை வாடகைகளை ஒழுங்கா வசூல் பண்ணாலே போதும்! வேணும்னா கட்சிக்காரங்க கிட்ட பொறுப்பைக் கொடுத்துடலாம்! 50-50! ஒழுங்கா வசூல் பண்ணிக் கொடுத்துருவாங்க!

    //இப்போப் போனவாரம் மதுரை மீனாட்சியைத் தரிசனம் செய்யப் போய்விட்டு உயிரோடு வருவேனா என்றே சந்தேகமா இருந்தது!//

    ஆகா...மதுரையின் வீராங்கனை உங்களுக்கே இந்த கதின்னா....அப்போ நாங்கள் எல்லாம்? :-)

    ReplyDelete
  71. //கர்நாடகாவையும் சேர்த்துக்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பணம் அதுவும் அதிகப் பணம் கொடுத்துப் பார்க்கும் சிறப்புத் தரிசனம் வி.வி.ஐ.பிக்களுக்குக் கூடக் கிடைக்காது//

    சூப்பர்! ஆமாம் கீதாம்மா!
    தமிழகம்/ஆந்திரா தான் இந்த பணவழி பக்தி போல!

    //சிருங்கேரி சாரதா பீடத்தில் "பர்தா"வோடு பல முஸ்லீம் பெண்கள் சகஜமாய் வந்து போவதைப் பார்க்க முடிகிறது//

    வெரி குட்! நான் கர்நாடகா மேலக்கோட்டையில் இதைப் போல் பார்த்துள்ளேன்!
    தமிழ்நாட்டில் திருக்கண்ணங்குடியில் பெருமாள் தர்கா வாசலில் நின்று மரியாதை ஏற்றுக் கொள்வார்!

    //இப்போச் சில நாட்களாய்ப் "பொதிகை"த் தொலைக்காட்சியில் "அக்காரக்கனி" ஜீயர் என ஒருவர் வந்து திருப்பாவை பற்றிய சொற்பொழிவு செய்கிறார், பிரமாதம்!//

    தகவலுக்கு நன்றி! techsatish.tvஇல் தெரியுதான்னு பாக்குறேன்!

    //இன்று பல கோயில்களிலும் இதன் காரணமாகவே நித்தியப் படி பூஜைகளோ, ஆண்டவனுக்கு ஒரு வேளையாவது விளக்கோ, நைவேத்தியமோ செய்யப் படுவது இல்லை//

    உண்மை தான்!
    இறைவனுக்குப் பூசை செய்ய உயிர் தேவை ஆச்சே! அர்ச்சகர் ஒரு வேளையாச்சும் சாப்பிடணுமே! அதான் இப்பல்லாம் சாதி வழி அர்ச்சகர்கள் கூட, அர்ச்சகர்களா வர விரும்புவதும் இல்லை! அவர்களுக்குப் பெண் கொடுக்கவும் பல பேர் தயங்குகிறார்கள்!

    அரசு இதை ஒரு சமுதாயத் திட்டமா செய்தால் தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம் வெற்றி பெறும்! இல்லீன்னா மற்ற சாதிகளில் இருந்து யாரும் வரக் கூட மாட்டாங்க! 200ரூ சம்பளத்துக்கு எவன் வருவான்?
    அர்ச்சகர் மட்டும் இல்லாமல் ஓதுவார், இசைக் கலைஞர்களையும் இத்திட்டத்தில் சேர்க்கணும்!

    ReplyDelete
  72. //Shobha said...
    ஆனால் அது முழுவதும் அரசு கஜானாவிற்கு போவதில்லை//

    அரசே முழுங்கி விடுகிறது-ன்னு சொல்லலை! நிர்வாகச் செலவுகள் போக, மீதமுள்ள பணத்தை ஏன் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்? என்ன பாத்யதை/உரிமை இருக்கு அரசுக்கு?

    //பல பெரிய கோவில்களிலிருந்து வருமானம் இல்லாத கோவில்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது//

    மிகவும் சொற்பம்!
    சமயபுரம் ஆலயப் பணத்தை திருவானைக்கா ஆலயத்துக்குத் தருகிறார்களா என்ன? பெயரளவில் temple link செய்துள்ளார்கள்!

    //எல்லா கோவில்களும் வருடாந்திர வரவு செலவு திட்டத்தை அறநிலைய துறைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெறவேண்டும் என்பது நடைமுறை//

    அதை ஏன் வெளிப்படை ஆக்கக் கூடாது?
    அரசு தன் மாநில பட்ஜெட்டில், இவ்வளவு நிதி, அறநிலையத் துறையின் வருவாயில் இருந்து வந்தது என்று ஏன் வெளிப்படையாகச் சொல்வதில்லை?

    //ஆலயங்களுக்கு திருப்பணி செய்ய அரசு கஜாநாவிலிருந்தும் நிதி வழங்கப்படுகின்றது//

    என் வாட்சைப் பிடுங்கி எனக்கே டைம் சொல்வது போல் இது! :-)
    ஆலயத் திருப்பணிக்கு அரசு ஒதுக்கும் பணம் மிகவும் சொற்பம்; பல நன்கொடைகள் மூலம் தான் காரியக் கமிட்டி இன்றும் திரட்டுகிறது! கும்பாபிஷேக நன்கொடைச் சீட்டு அப்போ எதுக்கு? அதான் அரசே பணம் கொடுத்து விடுகிறதே?

    //நான் சுந்தரகாண்டம் கூட கம்பராமாயணத்தில் இருந்துதான் படிப்பேன்//

    ஆகா! அருமை! பாராட்டுக்கள் ஷோபா!

    //தனித்தனியாக சங்கல்பம் செய்வதில்லை, அர்ச்சனை நாமங்களை கூறிக்கொண்டே தேங்காய் உடைப்பது போன்ற காரியங்களை செய்துவிட்டு முடிவில் நாலு பூக்களை விக்ரகத்தில் போடுகிறார்கள். இதற்க்கு பக்தர்களும் காரணம் , எல்லாருக்கும் அவசரம். இதை முறைப்படுத்துவது எப்படி?//

    We have to brainstorm for new ideas!
    அமெரிக்காவில் தேங்காய்களை நாமே அதற்குரிய தொட்டியில் உடைத்துக் கொள்ள வேண்டும்! இங்கு அர்ச்சகர் தனித்தனியாக சங்கல்பம் செய்வார்!

    கருவறையில் தேங்காய் உடைப்பது போன்ற செயல்களைக் குறைத்தால், அர்ச்சனைக்கு நேரம் மிஞ்சும். கூட்டமும் தேங்காது!
    துழாய், தீர்த்தம், விபூதி போன்ற பிரசாத விநியோகங்களைத் தனியாக வெளியில் (உற்சவர் சன்னிதியில் கூட) வைத்துக் கொள்ளலாம்!

    //இந்த மூவரும் தட்டில் பணம் எதிர்பார்க்கிறார்கள் போடாவிட்டால் இறை தரிசனம் செய்த இடத்தில் இவர்கள் சாபமும் நமக்கு//

    இதுக்கெல்லாம் நம்ம அச்சம் தான் காரணம்! அதுவே அவங்களுக்கு advantageஆக போயிடுது!
    When foolproof practices are established all these petty crimes will go away!
    முன்பு சொன்னது போல் பிரசாத விநியோகம் எல்லாம் வெளியில் கொண்டு போய் விடலாம்! திருமலையில் அப்படித் தானே நடக்குது!

    //பொறுமை இல்லாத பக்தர்கள் நேரம் குறைக்கும் எந்த வழிகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்//

    கேரளா/கர்நாடகாவுக்குப் போனா என்ன பண்ணுவாங்களாம்? இருப்பதால் தானே பக்தர்களும் கூடச் சேர்ந்து ஆடுறாங்க! எடுத்து விட்டா என்ன பண்ணுவாங்க? கலைஞர் பரிவட்டம் கூடாதுன்னு சட்டம் போட்டா மாதிரி, திடீர்-னு இதையும் எடுத்தா அப்போ என்ன பண்ணுவாங்க?

    //நாம் தல யாத்திரை செய்யும் போது நுழைவுச்சீட்டு எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்//

    தல யாத்திரை தமிழ்நாடு & ஆந்திரா-வின் போது தான் இப்படி!
    மைசூர் சாமுண்டீஸ்வரி போனீங்கன்னா அங்கு சிறப்புத் தரிசனம் கிடையாதே! அப்போ?

    //Sorry my comment looks bigger than ur post. You can moderate it//

    ச்சேச்சே! மிகவும் பொறுமையா, அழகாச் சொல்லி இருக்கீங்க! ஆலயத்தில் அர்ச்சனையின் போது தேங்காய் உடைத்தல்-னு புட்டு புட்டு வைச்சிருக்கீங்க! நிறைய நோட் பண்ணி இருக்கீங்க போல, ஷோபா!
    இதுக்குத் தான் இல்லத் தலைவிகளைக் கண்காணிப்புக் கமிட்டியில் போடணுங்கிறது!

    If I have some powers, I will put u on the committee :-)
    நன்றி ஷோபா!

    ReplyDelete
  73. //கீதா சாம்பசிவம் said...
    ஏனெனில் பல பெரிய ஆலயங்களில் கூட முதலில் திருமுறை ஓதிய பின்னரே கால பூஜைகளும், வேதம் ஓதுதலும் நடைபெற்று வருவதும், முதலில் ஓதுவார்களுக்கு தீப ஆராதனை காட்டி மரியாதை செய்த பின்னரே மற்றவருக்குக் காட்டுவதும் நடை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன்//

    எந்த ஆலயங்கள்-னு சொல்லுங்க கீதாம்மா! அப்படி இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே!
    ஆரத்தியைப் பக்தருக்குக் காட்டும் முன், ஓதுவார்க்கும் இதர கோயில் பணியாளுருக்கும் காட்டுகிறார்கள் தான்!

    //திரு வெங்கட்ராம் திவாகரும் சிவாச்சாரியார்களும் சேர்ந்து தேவாரம் பாடுவதாய் என்னோட சிதம்பர ரகசியம் பதிவில் சொல்லி இருக்கிறார்//

    தீட்சிதர்கள் திருமுறைகள் பாடறாங்க தான்! பாடலை-ன்னு சொல்லலை!
    சாதாரணமா ஆரத்தி செய்யும் போது கூட, ஒரு பதிகம் பாடணும்னு தான் சொல்லறேன்!

    //மதுரை மீனாட்சி கோயிலில் தமிழில் தான் அர்ச்சனை செய்வார்கள் என்று. மற்றும் சில சிவாலயங்களிலும் காணலாம்//

    மதுரையில் அம்மையின் சன்னிதியில் தமிழில் அர்ச்சனை விரும்பிக் கேட்காமலேயே Defaultஆ நடக்கிறதா என்ன? ஆகா!

    //தவிர, நாயன்மார்களுக்குப் பின்னர் யாரும் வரவில்லை என்பதும் சரி இல்லை. இது பற்றித் தெளிவாய் எழுத வேண்டும் என்பதால் தவிர்க்கிறேன்//

    படித்து விட்டு பின்னர் எழுதுங்கள்! நானும் கலந்து கொள்கிறேன்!
    இதைக் குறையாகச் சொல்லவில்லை! ஏக்கத்துடன் தான் சொல்கிறேன்!

    ஆழ்வார்கள்-இசைக் கலைஞர்கள் என்றால் ஆசாரியர்கள் இசை நிர்வாகிகள் போல் பின்னால் வந்து நிர்வகித்துக் கொடுத்தாங்க!

    நாயன்மார்களுக்குப் பின்னால், அவர்கள் பாடல்களை நிர்வாகம் செய்து தர, ஒரு கட்டமைப்பு உருவாக வில்லை என்று தான் குறிப்பிட்டேன்!
    சமயக் குரவர் நால்வருக்குப் பின்னால் வந்த சந்தான குரவர்கள் நால்வர்...
    இன்னும் பலர் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு விட்டார்களே தவிர, ஆலய நிர்வாகத்தில் அவ்வளவா ஈடுபடலை!

    இராமானுசர், மாமுனிகள் போன்ற ஆசாரியர்கள் நின்று போய் இருந்த தமிழ்ப் பாசுர ஓதுதல்களை எல்லாம் மீண்டும் தூக்கி நிறுத்தி, பிற்காலத்திலும் நிற்காது ஓதுதல் பொருட்டு, திருவாய்மொழித் திருநாள்-னு விழாவாகவே செய்து விட்டுப் போனாங்க! That kind of management oriented activities helped to fortify the system.

    ReplyDelete
  74. //கீதா சாம்பசிவம் said...
    ஆமாம், இந்த மாதிரி இடத்துக்கு ஏற்பத் தான் சொல்ல வேண்டுமே தவிர, அங்கே போய் "பாரத வர்ஷே, பரத கண்டே, தக்ஷிணே பார்ஸ்வே" என்று சொல்ல முடியுமா? அர்த்தமே மாறிடுமே, இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே!//

    Dank u! Dank u!!

    //எல்லாக் கோயில்களையுமே அவங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துடலாமே, எப்படி வசதி? :))))//

    அடி மடியிலேயே கை வைத்தால் எப்படி தலைவியே? :-)

    //அப்பாடி, கை வலிக்குது, இணையத்துக்கு வேறே போட்டிக்கு ஆள் பின்னாலேயே நிக்குது, அப்புறமா வரேன், வர்ட்டா?????????//

    ஆகா...
    கை வலிக்க வலிக்க, கீதாம்மா பின்னூட்டம் போட்டாங்களா?
    யாரங்கே! வலிக்க வலிக்க இட்ட கைகளுக்குக் காப்பு மாட்டுங்க! அட...தங்கக் காப்பைச் சொன்னேன் கீதாம்மா! :-))

    ReplyDelete
  75. //cheena (சீனா) said...
    படித்த உடன் ஏற்க மறுக்கும் சிந்தனைகள். ஆழ்ந்து படித்து - மேன் மேலும் சிந்தித்தால் ஏன் கூடாது என்று கருத்துக்களுடன் உடன்பட வைக்கும் சிந்தனைகள்//

    சூப்பர்! நன்றி சீனா சார்!
    உய் உய் உய்! இத, இத தான் எதிர்பார்த்தேன்!

    //கொளுத்திப் போட்டாச்சு - நல்லதே நடக்க வாழ்த்துகள்.
    அடுத்த தலைமுறையில் நடந்து விடுமா ?//

    நடந்துடும் சீனா சார்! வரும் தலைமுறை கேள்வி கேக்கறுத்துக்குன்னே பொறந்திருக்கு! :-))

    ReplyDelete
  76. //கீதா சாம்பசிவம் said...
    மதுரையில் திருப்பரங்குன்றம் கோவிலிலும், சென்னை, தாமரைப்பாக்கம், சிவானந்த ஆசிரமம், சிவன் கோயிலிலும் இம்முறையில் தான் கொஞ்சமும் மின் விளக்குகளின் ஒளியே இல்லாமல் தரிசனம் செய்ய முடியும்//

    ஆகா! அடுத்த முறை சென்னை வரும் போது தாமரைப்பாக்கம் போலாமா? நான் அங்கு போனதே இல்லை!

    //இன்னும் நிறையவே எழுத வேண்டும் தான், ஆனால் நான் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடாது என்பதால், ஒரு தனிப்பதிவாகவே போட்டுக் கொ"ல்"கிறேன்,//

    ஆக்ரமிப்பா? யாரு சொன்னா அப்படி? பதிவர் அம்பியா? அவர லூசுல விடுங்க! நீங்க கச்சேரியை நடத்துங்க!
    தனிப் பதிவா? இன்னும் சூப்பரு!
    பதிவு போட்டுக் கொள்ளுங்க! கொள்ளுங்க!
    ஓ சாரி "ள" கரம் எ.பி தான்! :-)

    ReplyDelete
  77. ////திரும்பிப் போனாலும் மனசு என்னமோ இங்கேயே வருது,//

    அடியேன் தன்யனானேன்! :-)

    என்ன கீதாம்மா, பதிவில் ரொம்ப ஒன்றி விட்டீங்க போல!
    சில அருமையான தகவல்களை முன் வைத்திருக்கீங்க! மிக்க நன்றி!

    //அப்புறமா, வவ்வால் என்ன சொல்லப் போறார், இல்லை, இல்லை, சிரிக்கப் போறார்னு வேறே பார்க்கணும்! :))))))//

    நாராயண! நாராயண!! (நாரதர் சொல்லும் அர்த்தத்தில் அல்ல! :-)

    ReplyDelete
  78. //karthik said...
    நல்ல படைப்பு நானும் முயற்சி செய்கிறேன் சிறப்பு தரிசன வாயிலை தவிர்க்கிறேன்//

    நன்றி கார்த்திக்!
    மாற்றங்கள் நம்மளவில் தான் முதலில் வரணும்! முயன்று பார்க்கிறேன்-னு சொன்னதே சிந்தனை மாற்றம் தான்!

    ReplyDelete
  79. //தி. ரா. ச.(T.R.C.) said...
    அலசி ஆராய்ந்து போட்ட பதிவு.//

    நன்றி திராச ஐயா!

    //சமீபத்தில் காஞ்சீபுரம் போனேன் Qவில் நின்றுதான் தரிசனம் செய்தேன்//

    சொல்லிய வண்ணம் செயல்-என்கிற குறளின் வழி நடந்து விட்டீர்கள்! நன்றி!
    தலை வணங்குகிறேன்!

    ReplyDelete
  80. Ravi
    This is how HRCE functions:
    Every temple(or group of temples forming one unit)where any member of the public belonging to the HIndu community, is entitled as of right to offer worship, comes under the perview or supervision & control of the HR& CE (admn) dept.
    Each temple is an independent unit functioning under the management of non hereditary trustees appointed by the HRCE dept. except where there are hereditary trustees whose heredity rights have been recognised by the concerned authorities. Quite a no. of temples have executive officers
    appointed by theHRCE dept.The E.Os are all Govt. servants. The trustees & E.Os are accountable to& under the control of the HRCE dept. The dept. itself is fully manned by the Govt. It has a seperate wing for Audit & the audit of each temple is done annually & reports sent to the dept.
    Each temple maintains the prescribed accounts which are scrutinised by the dept.
    Budgets are sent to the concerned superior authority for approval & sanction. Any irregullarity in the accounts or any loss occasioned with ref. to the funds of the temple is pointed out in the audit& appropriate action taken.
    The temples pay only a fixed percentage from the total income (which includes income from lands, buildings, undial ,entrance/archanai tkts, donations etc.)to the Govt. that is to meet the expenses towards admn. & audit incurred by the HRCE dept.
    Wherever there is a balnce or surplus after meeting the expenses for pujas/festivals, salaries of temple staff, maintenance & repairs etc. such amount is seperately invested in the name of the concerned temple.
    Diversion from the surplus funds are made to needy temples for puja, renovation & also for certain specified purposes like running of Agama/Vedic schools, Thevara/Prabhandha patasalais, orphanages etc.
    So the Govt. does not take away the balnce money from the temples,as you have understood-it gets only the statutory percentage payable as contribution & audit fees.
    In the annual State Budget there is a seperate head for meeting the expenses of the HRCE dept.
    As already stated the budgets of individual temples is sanctioned by the HRCE dept.
    There still may be scope for improving the admn.& procedure wherever defects surface.
    The statute warrants only appointment of Hindus in the HRCE dept. as well as in temples.
    Shobha

    ReplyDelete
  81. தல யாத்திரை தமிழ்நாடு & ஆந்திரா-வின் போது தான் இப்படி!
    மைசூர் சாமுண்டீஸ்வரி போனீங்கன்னா அங்கு சிறப்புத் தரிசனம் கிடையாதே! அப்போ?

    Ravi
    If u had mentioned any other temple in Karnataka, esp. South Karnataka, I might not have had an arguement. But sonnalum sonnengale Chamundeswari kovilinnu :)
    I have just come back from a Karnataka trip. Dec.24th I was in Chamrajnagar & Nanjangud.Both beautiful temples with palpable vibrations. Being full moon & Somwaram (Monday) Nanjangud was extremely crowded. After a looong journey by road we had to buy the Rs.10/- entrance tkt. where the que was almost 80% of the free darsan que. The ques were not monitored, no one with authority to control the crowd till u reach the sanctum where they collect the tkts. The barricades madeup from steel pipes, the pipe ends were jutting out & the way u got pushed Geetha chonna madiri it is a miracle that those pipe ends did not pierce anyone (Thanks only to Nanjundeswara).With this we had a 2hour wait before Darsan & off we went to Mysore.
    25th Dec, Christmas morning Chamundeswari templelil varalaru kanadha crowd, they have 2 diff. entrance tkts, one at Rs20/head where the que is shorter than Darma darisanam & one at RS.100/head where entrance is direct.
    We had to see Sriranganthar & Nimishambal at Srirangapattinam, go to Melkote & worship Thiru Narayanar & Sampathkumaran not to leave out Ramanujar & Sultani Biwi- Melkote visit inspired by ur blog :)- & also reach Bangalore by night. Adudhan chonnen thala yathirayil tkt yedukkalm when the itenary is packed. Nimishambal temple too had special entrance.
    Yenna anga yellam sp. & darma darisanam que finally see the Lord from the same place, namm oorula panam kudutha kitta illainna yetta ninnu parkalam.
    March'06 I went on a South Karnataka temple trip where there were no tkts, no special treatments but the crowd was also much less except in Udupi. Even on Sivarathri day we could see Gokarneswara & Murdeswara without waiting for hrs. on end.

    Nanjangud & Chamundeswari kovilla nammal paathu kathukittangalo? :)

    Shobha

    ReplyDelete
  82. //அமெரிக்காவில் தேங்காய்களை நாமே அதற்குரிய தொட்டியில் உடைத்துக் கொள்ள வேண்டும்! இங்கு அர்ச்சகர் தனித்தனியாக சங்கல்பம் செய்வார்! //
    You have to see the crowd near Dakshinamurthy on Thursdays, Ambal on Fridays & Saneeswarar on Saturdays, thani thani Sangalpam is almost impossible, avanga readynnalum namma 'makkals, may not be ready.
    Thengai ingeyum peria kovilgalil veliyedan udaikkapadugiradhu, adhilum naan sonna dakshinai for 3 people sikkal irukke. :))
    Shobha

    ReplyDelete
  83. ""Each temple is an independent unit functioning under the management of non hereditary trustees appointed by the HRCE dept. except where there are hereditary trustees whose heredity rights have been recognised by the concerned authorities. Quite a no. of temples have executive officers
    appointed by theHRCE dept.The E.Os are all Govt. servants. ""

    எங்க ஊர்ப் பெருமாள் கோவிலுக்கு எங்க குடும்பம் தான் பரம்பரை ட்ரஸ்டி, ஆனால் கோவில் அதிகாரிகள் யாரும் எங்களை அங்கீகரிக்கவில்லை, புதிய ட்ரஸ்டிகள் மாறி, மாறி வருகின்றன, ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும், கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.கோயில் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தைக் குத்தகைக்காரர்கள் கொடுப்பதே இல்லை, கோயில் நிலத்தில் இருந்த மரத்தை வெட்டி, விற்றுப் பங்கு போட்டுக் கொண்டுவிட்டார்கள், இன்னும் எழுதினால் நல்லா இருக்காது. வருமானம் வருவதைப் பொறுத்தே அதிகாரிகள் நியமனமும் நடக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஷோபா எழுதி இருப்பது படிக்க நன்றாகவே இருந்தாலும் செயல் முறையில் அப்படி எதுவும் இல்லை. கோவில்களின் வருமானத்தில் இருந்து கோவில்களின் வளர்ச்சிக்காக 2% கூடச் செலவிடப் படுவது இல்லை, என்பதே உண்மை. இன்னும் எழுதப் போனால் .,. வேண்டாம், நிறுத்திக்கிறேன்.

    ReplyDelete
  84. Gita
    You should challenge appointment of other trustees & get ur hereditary rights established through proper authority. If ur hereditary rights have been declared they have to rercognise you & not appoint other trustees. Do the needful as the facts warrant.
    Regards
    Shobha

    ReplyDelete
  85. //சமயபுரம் ஆலயப் பணத்தை திருவானைக்கா ஆலயத்துக்குத் தருகிறார்களா என்ன? பெயரளவில் temple link செய்துள்ளார்கள்//

    சமயபுரத்தாள் ரங்கநாதருக்கு அள்ளிக் கொடுத்த காலமும் உண்டு. அதனாலேயும் ரங்கநாதர் கோவிலுக்கு சிறப்பு தரிசன டிக்கட் வைத்ததாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி. (அதெல்லாம் எக்ஸ்- பிளைய்ன்ல விட்டுடணும்).

    ஷோபா எழுதியது போல், ரூ.100 டிக்கட் (என் மைத்துனர் வாங்கினாரு, அப்ப எனக்கு பாவம் கிடையாது!) சாமுண்டீஸ்வரி கோயில்ல வாங்கி பாத்தோம் யாருட்ட‌யும் நான் டிக்க‌ட் வாங்கின‌து ப‌த்தி சொல்லிடாதீங்க‌!

    இன்னும் ஒண்ணு: திருவ‌ர‌ங்க‌த்தில் தான் முத‌ல்ல‌ சிற‌ப்பு டிக்க‌ட் வைச்சாங்க‌ளா? உங்க‌ள் அற‌நிலைய‌த் துறை ந‌ண்ப‌ருக்குத் தெரியுமா கேட்டுச் சொல்ல‌ முடியுமா?

    ந‌ன்றி,
    கெ.பி

    ReplyDelete
  86. //Shobha said...
    Ravi
    This is how HRCE functions:
    Every temple(or group of temples forming one unit)//

    I know Chidambaram is an exception.
    What abt smaller temples? road side temples? village temple with NO known sources of revenue?

    //It has a seperate wing for Audit & the audit of each temple is done annually & reports sent to the dept//

    I am aware that all EOs, JEOs are Government employees. Almost every govt dept has a wing for audit/vigilance. same is the case here too!

    //Wherever there is a balnce or surplus after meeting the expenses for pujas/festivals, salaries of temple staff, maintenance & repairs etc. such amount is seperately invested in the name of the concerned temple//

    So they have corpus funds for each temple - right?
    If so, why arent they listed?
    Does HRCE state anywhere publicily that this is the % of admin expenses and this is the % of revenue. Temples are public bodies. Why not a transparent balance sheet?

    //running of Agama/Vedic schools, Thevara/Prabhandha patasalais, orphanages etc.//

    I am aware of this too and also institutions like nadaswara school in palani. Most of them are funded by charities external to the temple collection and not by temple collection itself.

    //So the Govt. does not take away the balnce money from the temples,as you have understood-it gets only the statutory percentage payable as contribution & audit fees.//

    I understand the administrative standpoint. All I am asking is what is the amount of contribution towards fees and audit?
    In Palani, Temple funds are used to maintain municipality, lay roads, and other civic works.
    Where is the PWD dept's role in here? Does the temple offer this sum as a loan to PWD? No!

    Shoba
    My point is the entire process has to be transparent becoz this involves community money and not public money! If the govt wants to regulate an external system which is not connected to it, then it should be fully accountable as well.
    In my opinion, the govt (HRCE) should act like a trustee just executing a will and nothing more. The executor can take his fees but "ensure" and "prove beyond doubt" that he serves the interests of the will! Audit of the executor is not by the executor himself. It is by a different body!

    ReplyDelete
  87. //Ravi
    If u had mentioned any other temple in Karnataka, esp. South Karnataka, I might not have had an arguement. But sonnalum sonnengale Chamundeswari kovilinnu :)//

    he he!
    I mentioned from my schoolday memories abt chamundi temple. May be they changed now after learning from us? :-)
    Unga personal experience paatha appdi thaan theriyuthu! Paavam neenga! Chamundi 100/- and Nanjundeswarar 10/- aa? Angeyum ladies thaan jeyikaraanga pola! :-)

    But from a generic standpoint, most of the popular/crowded temples in kerala and karanataka dont have a fee darshan.

    //Thiru Narayanar & Sampathkumaran not to leave out Ramanujar & Sultani Biwi- Melkote visit inspired by ur blog :)//

    aaga. ithu veraya!
    I am only pleased if anything in adiyen's blog could inspire a few souls during such visits. Some other friends also told me they cud recollect the blog's contents at the temple bcoz they were in simple casual style than in rigorous poetic style...
    Naan enna solla! avan arulaale avan thaal vanangi! avan thaal vanakkathai kaatilum adiyaar inakkam innum perithu! :-)

    //Yenna anga yellam sp. & darma darisanam que finally mix//

    This is a lesser evil; I like this in Tirumala too! But in Palani, this is not the case!

    ReplyDelete
  88. This is a lesser evil; I like this in Tirumala too! But in Palani, this is not the case!

    I like this too, evilnnu sollalai, TNla tkt vangalainna Sami yetti irundudan darisanam tharuvaru.

    ReplyDelete
  89. //Shobha said...
    You have to see the crowd near Dakshinamurthy on Thursdays, Ambal on Fridays & Saneeswarar on Saturdays, thani thani Sangalpam is almost impossible, avanga readynnalum namma 'makkals, may not be ready.//

    புடிச்சீங்க பாயிண்டை!
    நம்ம மக்கள் ரெடியாகணும்!
    சங்கல்பம் அர்ச்சகர் தான் செய்து வைக்கணும்னு ஒன்னும் இல்லை!
    கருவறை வெளியில், கொடி மரத்தின் அடியில் செய்யலாம்!

    தேங்காய் உடைக்க மெஷின் வச்சிடலாமா? :-)

    மூனு பேருக்குத் தட்சிணை எல்லாம் நிர்வாகம் ஈசியா மேனேஜ் பண்ணிடலாம்! ஆனா யாரும் மணி கட்டமாட்டேன் என்கிறார்கள்!

    தீபத்துக்கு, தீபம் மட்டுமே தாங்கும் அளவுக்குத் தட்டு...அதே போல் மத்ததுக்கும்! காசு போடணும்னு நினைச்சாக் கூடப் போட முடியாது! இடமே இருக்காது காசு போட!
    (அப்போ கையில் வாங்குவாங்களோ? :-)

    இதுக்கெல்லாம் சீரியஸ் Brainstorming பண்ணனும் ஷோபா! தனியார் கன்சல்டென்சி கிட்ட குடுங்க! செஞ்சிக் குடுத்துருவாங்க!

    திருப்பதியில் அர்ச்சகர்-பொது மக்கள் நேரடித் தொடர்பு அவ்வளவா இல்லை! அங்கெல்லாம் எப்படி தட்டில் காசு விழாம அர்ச்சகர் பிழைக்கிறாங்க?
    அமெரிக்க ஆலயங்களில் தட்டில் விழும் பணத்தையும் அர்ச்சகரே உண்டியலில் போட்டு விடுவார், நம் கண் முன்னாலேயே! ஏன்னா நிர்வாக உத்தரவு! கேமிரா கண்காணிக்கும்! :-)

    எல்லாத்துக்கும் வழி ஒன்னு இருக்கு!
    அதை நாமத் தான் தேடணும்!

    ReplyDelete
  90. //கோயில் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தைக் குத்தகைக்காரர்கள் கொடுப்பதே இல்லை, கோயில் நிலத்தில் இருந்த மரத்தை வெட்டி, விற்றுப் பங்கு போட்டுக் கொண்டுவிட்டார்கள், இன்னும் எழுதினால் நல்லா இருக்காது.//

    credit card collection agency கிட்ட சொல்லுங்க கீதாம்மா! :-)

    Enforcement என்பது HRCE-இல் சுத்தமாக் கிடையாது!
    இப்போ தான் சில கோயில்களில் இது போல் களவாணிப் பசங்க பேரையும் போட்டோவையும் பெருசா ஒட்டி வைக்கத் துவங்கி இருக்காங்க!

    மானத்துக்குப் பயந்தாவது, இல்லை கடவுள் சன்னிதியில் எதுக்கு அசிங்கம்-னு பயந்தாவது வாடகை ஒழுங்கா கொடுப்பாங்க-ன்னு நினைச்சி இப்படி செஞ்சிருக்காங்க போல!
    ஆனா அரசியல்வாதிகளைத் துணைக்குக் கூட்டி வந்து, அந்தப் போர்டைப் பிச்சிடுவாங்க பாருங்க! :-)

    இதே, தனியார் நிறுவனம், வங்கியில் செய்ய முடியுமா? அரசியல்வாதி நுழைந்து போர்டைப் பிக்க முடியுமா?

    ReplyDelete
  91. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    சமயபுரத்தாள் ரங்கநாதருக்கு அள்ளிக் கொடுத்த காலமும் உண்டு.//

    உண்டே!
    அதே போல் அரங்கனும் பூச்சொரிதல் விழாவில், மாலை மரியாதை, பிறந்த வீட்டுச் சீர் அனுப்பிய காலமும் உண்டு!

    //ரூ.100 டிக்கட் (என் மைத்துனர் வாங்கினாரு, அப்ப எனக்கு பாவம் கிடையாது!)//

    ஹை...பாவம் மைத்துனர்! :-)

    //இன்னும் ஒண்ணு: திருவ‌ர‌ங்க‌த்தில் தான் முத‌ல்ல‌ சிற‌ப்பு டிக்க‌ட் வைச்சாங்க‌ளா? உங்க‌ள் அற‌நிலைய‌த் துறை ந‌ண்ப‌ருக்குத் தெரியுமா கேட்டுச் சொல்ல‌ முடியுமா?//

    கெபி அக்கோவ்!
    கேட்டேன். அவர் கோப்பைப் பார்த்துத் தான் சொல்ல முடியும்-னு சொல்லிட்டாரு! சமயபுரத்தில் தான் முதல்ல introduce பண்ணாங்களோன்னு அவருக்கும் சந்தேகம்!

    அது இல்லாம இன்னொரு விஷயம்!
    கொளுத்திப் போடறது-ன்னு முடிவு பண்ணியாச்சி! :-)
    திருவரங்கத்தில் தினமும் மாலையில் ஒரு குறிப்பிட்ட வேளையில் தர்ம தரிசனமே கிடையாது தெரியுமா? காசு கொடுத்தா தான் பாக்கவே முடியும்! இல்லீன்னா பாக்க முடியாது!
    அதுக்குப் பேரு கட்டண சேவை! :-(((

    முகம்மதியர் படையெடுப்பின் போது, ஆலயத்தைக் காக்க, மாசா மாசம் அவிங்களுக்குக் கப்பம் கட்டினாங்க-ல்ல! அப்போ இப்படிப் பணம் வசூல் செய்து கொடுத்து, ஆலயத்தைக் காப்பாத்தினாங்க! இப்போ தான் நெலமை எல்லாம் மாறிப் போச்சே!
    ஆனா, கட்டண சேவை மட்டும் ஜரூரா தொடருது!

    ஜீயர் அதை எடுக்கச் சொல்லிப் பாத்தாட்டாரு! அரசுக்கு இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் காது சரியாக் கேக்கலை போல! :-((

    ReplyDelete
  92. இதுக்கெல்லாம் சீரியஸ் Brainstorming பண்ணனும் ஷோபா! தனியார் கன்சல்டென்சி கிட்ட குடுங்க! செஞ்சிக் குடுத்துருவாங்க!

    Naan yaaru consultancy kitta kudukka?
    Poduva naan solla vandhadhu undiala kasu podama irukkaradhu oru solution illai.
    TN la meedhi athanai Indian statesai vida temple nirvagam yevalavo nandragathan irukiradhu, Tirupathiya mattum compare panna koodathu.
    Calcutta Kalighat poneenganna theriyum, adu Kalighat illai Gala Khaat(cut ur neck)nnu.
    Mostly using temple money for any purpose is accounted for, defects irukkalam but that is there in every walk of life.
    For handling Dyslexic children we say " Augment Proficiency- Surmount Defeciency" nnu i.e. strengthen the strong points to overcome weakness. Adhe principle ingayum apply pannalame, niraigalai improve panni appreciate seydhal kuraigal kuraindhu vidum.
    "Kurai ondrum illai Kanna "
    :)
    Shobha

    ReplyDelete
  93. //TN la meedhi athanai Indian statesai vida temple nirvagam yevalavo nandragathan irukiradhu, Tirupathiya mattum compare panna koodathu.
    Calcutta Kalighat poneenganna theriyum, adu Kalighat illai Gala Khaat(cut ur neck)nnu.//

    ஹாஹாஹாஹா, சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்கச் சிர்ப்பு வருது!

    கல்கத்தா காளி கோயிலுக்கு ஆயுளில் ஒரு முறை போனால் அதிகம், நம்ம மாதிரி தமிழ்நாட்டு ஆளுங்க, ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரபலமான கோயில்களுக்குப் பலமுறை போவோம்! அது நினைவில் வச்சுக்கணும், கல்கத்தாவிலும் பண்டாக்களை லட்சியம் செய்யாமல் நாம் பாட்டுக்குப் போயிட்டே இருக்கணும் என்று என் கணவர் சொன்னார். நான் கல்கத்தா போனதில்லை, ஆனால் வட இந்தியாவில் பல கோயில்களிலும் போன அனுபவத்தால் என்னால் இதை நிச்சயமாய்ச் சொல்ல முடியும். நாம் இஷ்டப் பட்டால் தான் அங்கே கொடுக்க முடியும், இல்லைனா போயிட்டே இருக்கலாம்.

    ReplyDelete
  94. //அதே போல் அரங்கனும் பூச்சொரிதல் விழாவில், மாலை மரியாதை, பிறந்த வீட்டுச் சீர் அனுப்பிய காலமும் உண்டு!//

    இப்போவும் அரங்கன் கொடுக்கிறதாய்த் தான் கேள்விப்பட்டேன், போன வருஷம் பூச்சொரிதல் சமயம் போனப்போ கூடச் சொல்லிட்டு இருந்தாங்க,
    மற்றபடி கோயில் வசூலில் ஷோபா சொல்வது போல் அங்கொன்றும், இங்கொன்றுமாய் மட்டும் தவறுகள் இல்லை. முழுதுமே தவறுகள். இவ்வளவு பணம் வசூல் ஆகியும் பக்தர்களுக்கு என ஒரு வசதியும் சரிவரச் செய்து கொடுப்பதில்லை என்பதோடு, கூட்டம் மிகுதியான நேரங்களில் என்னதான் டிக்கெட் எடுத்துச் சிறப்புத் தரிசனம் போனால் கூட, போலீசுக்குத் தெரிஞ்சவர், அங்கே வேலை செய்யும் ஊழியருக்குத் தெரிஞ்சவர்னு ஒரு கூட்டமே ஊடுருவல் செய்வதும், அதைத் தட்டிக் கேட்டால் டிக்கெட் எடுத்து வரிசையில் செல்லும் நம்மைக் கேவலமாய்ப் பேசுவதும், நடத்துவதும், போன வாரம் மீனாட்சி கோயிலிலும்,திருச்செந்தூர் கோயிலிலும், ஸ்றீரங்கம் அரங்கநாதன் கோவிலிலும் நாங்கள் அனுபவித்தவை, மாறாத வடுவாகப் பதிந்து விட்டது. போலீஸ் சும்மா பெயரளவில் தான் இருக்கிறார்களே தவிர, கூட்டத்தைச் சரிவரக் கவனித்துக் கட்டுப் படுத்துவதில்லை என்பதே உண்மை!

    ReplyDelete
  95. //சமயபுரத்தில் தான் முதல்ல introduce பண்ணாங்களோன்னு அவருக்கும் சந்தேகம்!// அவர்கிட்ட கேட்டதுக்கு நன்றி. சமயபுரமும் திருவரங்கமும் ஒரே தேவஸ்தானம் அப்போ (1960களின் தொடக்கத்தில் - நான் அப்போ பிறக்கவில்லை, கேள்வி தான்). திருவரங்கத்தில தான் எல்லா சாதிக்காரங்களும் குறிப்பிட்ட சேவை நேரங்களில் இருக்க விடுவதற்கும் வருவாயுக்குமாக கட்டண சேவை தொடங்கியதாக "ஒரு தல வரலாறு" கேட்டுருக்கேன்.

    கீதாக்கா: //இப்போவும் அரங்கன் கொடுக்கிறதாய்த் தான் கேள்விப்பட்டேன், // ஆமா, தங்கச்சிக்கு கொடுக்காமயா!

    //முகம்மதியர் படையெடுப்பின் போது, ஆலயத்தைக் காக்க, மாசா மாசம் அவிங்களுக்குக் கப்பம் கட்டினாங்க-ல்ல! அப்போ இப்படிப் பணம் வசூல் செய்து கொடுத்து, ஆலயத்தைக் காப்பாத்தினாங்க!//
    நான் இது பற்றி கேள்விப்பட்டதேயில்லை! கப்பம் - எஸ்! பட்-ஆனா, "அரங்கன் உலா" ல் கட்டணச் சேவை பற்றி இருக்கிறதா? திருவரங்கத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்தவரும் அப்படிச் சொன்னதில்லை. (அதுக்காக தப்பு நியூஸ்னு இல்ல... ரைட்டானு ஒரு கன்பர்ம் தான்!).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  96. கீதாக்கா,
    சமயபுரத்தாளைப் பாக்கப் போனாக்க, // போலீசுக்குத் தெரிஞ்சவர், அங்கே வேலை செய்யும் ஊழியருக்குத் தெரிஞ்சவர்னு ஒரு கூட்டமே ஊடுருவல் செய்வதும்// இதே கொடுமை தான். "சிறப்பு டிக்கட் எடுக்காதிங்க, எனக்கு ரூ. 25 கொடுத்திருங்க"னு ஊழியரே கேட்டாரு. அம்மாவுக்கு புடவை சாத்தினா, அது எவ்வளவுன்னு விலைச் சீட்டை கஷ்டப்பட்டு எடுத்துப் பாத்துட்டுப் அம்மாவுக்கு போட்டதும் உண்டு. எனக்கு அங்க போனா தன்னையே மறந்துடுவேன் - அவளையே பாத்து அழுதுட்டே கைக்குழந்தையை நீட்டினேன், அர்ச்சகர் அப்ப தான் இன்னொருத்தர் (பாத்தாலே கிராமவாசின்னு தெரிஞ்சுது) அவரு குழந்தையை நீட்டியதுக்கு "போ"ன்னு துரத்திட்டார். என் கிட்டருந்து குழந்தையை வாங்கி "எல்லாம் சரியாப் போயிடும்"னாரு (குழந்தைக்கு ஒண்ணுமில்ல, எனக்கு தான் கிறுக்கு;-)... அவளுக்கு நான், கிராமவாசி எல்லாம் ஒண்ணு தான்...

    ReplyDelete
  97. // Shobha said...
    For handling Dyslexic children we say " Augment Proficiency- Surmount Defeciency" nnu i.e. strengthen the strong points to overcome weakness//

    அருமையாச் சொல்லி இருக்கீங்க!
    Dyslexic children திட்டப் பணியில் இருக்கீங்களா என்ன? - இங்கே நான் செல்லும் Multiple Sclerosis குழந்தைகள் திட்டப் பணிகளிலும் இந்த மேற்கோளைச் சொல்வார்கள்!

    Building strength over strength will surmount defects. அந்த strength building and awareness-க்கு தான் இந்தப் பதிவு!

    //"Kurai ondrum illai Kanna"//

    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எங்களுக்கு - குறை ஒன்றுமில்லை கண்ணா! :-)

    ReplyDelete
  98. கீதாம்மா/ஷோபா

    நான் சொல்ல வந்தது என்னன்னா:
    சமூகத்தில் எங்கும் தவறுகள் மலிந்து தான் கிடக்கும்! This is not a fair world - yesterday, today or tomorrow!
    But there are certain places in society which even criminals will revere. Hospitals, Temples etc.
    So cleaning up and passing it to the next generation is a priority task in such essential segments!

    மன அழுத்தங்கள் நிறைந்த காலகட்டத்தில், ஆலயத்துக்குப் போனா இன்னும் மன அழுத்தம் தான் வரும் என்ற நிலை வரக்கூடாது! அது பண்பாட்டுக்கு பேராபத்து!

    கல்கத்தா காளி, திருமலை, மதுரை, திருவரங்கம்-னு எல்லாமே இனிமையான, சிந்திக்கத் தூண்டும் அனுபவங்களாக மாற்றுவது என்பது எளிது தான்! அதுக்குத் தேவை ரெண்டே விசயம்!
    1. Focus & Priority
    2. Strong Management Team that will drive the efforts.
    To effect this we need a movement.
    ஒரு இயக்கம் வந்தால் தான், இது சரிப்படும்! ஆன்மீகம் வளர்க்கும் பல நல்ல சிந்தனையாளர்கள், மடத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு, இதுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதும்! அரசு கேட்க ஆரம்பிக்கும்!

    ReplyDelete
  99. //எனக்கு அங்க போனா தன்னையே மறந்துடுவேன் - அவளையே பாத்து அழுதுட்டே கைக்குழந்தையை நீட்டினேன், அர்ச்சகர் அப்ப தான் இன்னொருத்தர் (பாத்தாலே கிராமவாசின்னு தெரிஞ்சுது) அவரு குழந்தையை நீட்டியதுக்கு "போ"ன்னு துரத்திட்டார். என் கிட்டருந்து குழந்தையை வாங்கி "எல்லாம் சரியாப் போயிடும்"னாரு//

    சமயபுரத்தாள் கருணை முகத்தில் யார் தான் தன்னிலை மறக்க மாட்டார்கள்?
    கெபி அக்கா (உங்கள அக்கான்னே கூப்பிடட்டுமா? :-)

    கூட்ட மேலாண்மை சொல்லிக் கொடுத்துங்கன்னா, இதெல்லாம் கொறைஞ்சிடும்! அர்ச்சகர்களும் ஆலயப் பணியாளர்களும் இறைவனைச் சேவிக்க வருபவர்களை, இறைவன் எப்படி அன்புடன் நடத்துவானோ, அது போல் நடத்தணும் என்ற எண்ணம் வரனும்!

    ஆனா பாதிப் பேருக்கு "அடியவர்கள்" ன்னா என்னவென்றே தெரியாது! பாவம், அவங்களுக்கு யாரும் சொல்லவுமில்லை! அவங்களும் எங்கும் படிக்கவும் இல்லை!
    நாம தான் "கண்ட கதைகளும்", "மாதவிப் பந்தல் மொக்கைப் பதிவுகளும்" படிச்சிட்டு, இறைவன் அன்பு மயமானவன்-னு ஆலயத்தில் போய்த் தேடி ஏமாற்றம் அடைகிறோம்! :-))

    ஒரு காலத்தில் அரசு அலுவலகத்துக்குப் போனா, பதில் கிடைப்பதே பெரும் தவமா இருக்கும்! ஆனா இன்னிக்கி தனியார் நிறுவனங்களில் customer service என்றே தனிப் பிரிவு! Phone support அது இதுன்னு...கனிவாகவாச்சும் பேசறாங்க! அரசு அலுவலகத்தில் கூட தகவல் அறியும் சட்டம் வந்து விட்டது!

    இது போலத் தான் ஆலயங்களும், காலநிலைக்கு ஏற்ப, மாற வேண்டும்! இதுக்கு we have to systemize the whole process! இதை நீங்களோ, நானோ தனியாகச் செய்ய முடியாது! ஆனால் ஒரு மேலாண்மை தனியார்/தன்னாட்சி அமைப்பு இதைச் செவ்வனே செய்யும்!

    ReplyDelete
  100. //கப்பம் - எஸ்! பட்-ஆனா, "அரங்கன் உலா" ல் கட்டணச் சேவை பற்றி இருக்கிறதா? திருவரங்கத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்தவரும் அப்படிச் சொன்னதில்லை. (அதுக்காக தப்பு நியூஸ்னு இல்ல... ரைட்டானு ஒரு கன்பர்ம் தான்!)//

    கட்டண சேவையின் தோற்றம் பற்றி உறுதியாச் சொல்ல முடியவில்லை கெபி அக்கா!
    திருவரங்கன் உலாவில் இல்லை-ன்னு தான் நினைக்கிறேன்! கோயில் ஒழுகு என்னும் நூலில் இருக்கலாம்!

    நான் குறிப்பிட்டது, ஜீயரின் கருத்து தான்! அது தேவையற்றதுன்னு எடுக்கச் சொன்ன போது அவர் சொன்னது! எது எப்படியோ....
    கட்டண சேவையை எடுத்து விட வேண்டும்! அது தான் முக்கியம்!

    ReplyDelete
  101. கட்டுரையின் இரண்டு பகுதிகளுமே சிந்தையைத் தூண்டும் வகையிலும், சுவை பாடவும் எழுதியுள்ளீர்கள். நன்றி; வாழ்த்துக்கள்.

    // கருவறை நுழைவு கூடாது ... சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு ... மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள் //

    மூன்றாண்டுகளுக்கு முன் பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான மல்லிகர்ஜுனேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன் (அவனருளாலே அவன்தாள் வணங்க). அங்கும் அனைவரும் கருவறைக்குள் செல்லவும் சிவலிங்கத் திருமேனியைத் தொட்டு, பூஜித்து வணங்குவதற்கும் அனுமதிக்கப் படுகின்றனர். அவ்வளவு ஏன், நீங்கள் நமக்கு மிக அருகில் உள்ள மேல்மருவத்தூர் சென்றிருப்பின், அங்கு கருவறைப் பணிகளைப் பெண்களே செய்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றிருபீர்கள்.

    ReplyDelete
  102. என்னத்த சொன்னாலும் நம்ம மக்கள் கேட்கவா போறாங்க ஒருத்தன் வயிறு பசிகுனு கேட்டால் ஒரு பைசா கொடுக்கமாட்டாங்க கோவில் குளமுன்னு பொய் கோடி கொடிய போடுவாங்க எல்லா மதத்தினரையும் சேர்த்து தான் சொல்றேன் இதுல ஒருவரும் விதி விளக்கல்ல

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP